பாடல்: உருவுமல்ல வெளியுமல்ல
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
உருவாகத் தோன்றினாலும் உருவல்ல.
வெளியில் இருப்பது போலத் தோன்றினாலும் வெளியல்ல.
ஐம்புலன்களில் வெளிப்பட்டாலும் அவற்றல்ல.
அவற்றோடு சேர்ந்திருந்தாலும் அதனால் கட்டுப்படுவதல்ல.
அருகிலும் அல்ல, தூரமுமல்ல.
பஞ்சபூதங்களில் அனைத்திலும் இருந்தாலும் அவற்றில் ஒன்றல்ல.
பாசமற்றது போல இருந்தாலும் பாசமற்றதுமல்ல.
மிகப் பெரியது போல இருந்தாலும் பெரியதும் அல்ல.
மிகச் சிறியது போல இருந்தாலும் சிறியதும் அல்ல.
பேசும் தன்மை கொண்டது போல இருந்தாலும் பேசுவதுமல்ல.
ஆன்மா ஆகி, தற்பரமாய் நிற்கும் அதனை உணர்ந்து அறிந்தவர்கள் மட்டுமே தியானத்தில் அதைப் காண முடியும்!
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #உருவுமல்ல #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #சிவசிவ #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்