பாடல்: பண்டுநான் பறித்தெறிந்த
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்ததெத்தனை
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
தன் வாழ்நாளில் வீணாய் பறித்து எறிந்த மலர்கள் எத்தனை?
மற்றவரைத் துன்புறுத்த உச்சரித்த மந்திரங்கள் எத்தனை?
இளமையில் திமிருடன் திரிந்தபோது சிற்றின்பத்தில் இரைத்த நீர்கள் எத்தனை?
இவ்வாறு தகாதவற்றைச் செய்து, அதனால் ஏற்பட்ட பாவங்களை நீக்க சுற்றிய சிவாலயங்கள் தான் எத்தனை? என்பதை மனதில் உணர்ந்து பாருங்கள்
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார்#பண்டுநான்#நமசிவாய#சிவபெருமான்#சித்தர்பாடல்#பக்திப்பாடல்#தமிழ்ப்பாடல்#சுமதிநிரஞ்சன்#சஞ்சீவராமநாதன்#தமிழ்பாடல்கள்#தமிழ்பக்தி#சிதம்பரம்#நடராஜர்#தமிழ்பாடல்#தமிழ்பக்திப்பாடல்#pandunaanparitherintha