பாடல்: அஞ்செழுத்திலே பிறந்து
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவி காள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்துகூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
நாம் ஐந்து பூதங்களால் பிறந்தோம், அவற்றின் தன்மைகளால் வாழ்கிறோம். ஆனால் அஞ்செழுத்தின் உண்மையை உணராமல், வெறும் வாயால் மட்டும் ‘நமசிவாய’ என்று உச்சரித்து வருகிறோம். இதுவே பிழை.
அஞ்செழுத்து நமக்குள்ளே ஐந்து பூதங்களாக இயங்குகிறது. அதை உணர்ந்து, மனதைக் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி தியானிக்க வேண்டும்.
'நமசிவாய' என்ற அஞ்செழுத்தில் இருக்கும் ஒரேழுத்தை உணர்ந்து அதில் நினைவைக் குவிக்க வல்லவர்களுக்கே உண்மை வெளிப்படும்.
அப்போது அந்த அஞ்செழுத்தே ஒரேழுத்தாகி, சிதம்பர அம்பலத்தில் நடராஜன் அஞ்சல் அஞ்சல் என்று ஆடி நிற்பதை அவர்கள் காண முடியும்.
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #அஞ்செழுத்து #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #சிதம்பரம் #நடராஜர் #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்