பாடல்: கார கார கார கார
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
நாமஜெபம் பல வடிவங்களாக இருக்கலாம்; ஆனால் அதின் உண்மை ஒருபோதும் மாறாது. மனம் எவ்வளவு மாறினாலும், உண்மையுடன் சொல்லும் மந்திரத்தின் சக்தி, உள்ளத்தில் தைரியத்தையும், தெளிவையும் கொடுக்கும்.
ராமர், வாலியை வதம் செய்ய ஏழு மாமரங்களை ஒரே அம்பினால் துளைத்ததுபோல, நம் உடலில் இருக்கும் ஏழு சக்கிரங்களான — மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, சகஸ்ராரம் — இவை அனைத்தும் ஸ்ரீராம நாமத்தின் மூலம் பரிசுத்தமடைகின்றன.
அந்த நாம சக்கரங்களின் ஆற்றலை எழுப்பி, தியானத்தையும், தவத்தையும், உயர்த்துவதால்; பிறவா நிலைக்கு மனிதனை வழிநடத்திச் செல்கிறது.
இவ்வாறு, ஸ்ரீராம நாமமே நமக்குள் அமைதியை அளிக்கும்.
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #ராம #மூலாதாரம் #சுவாதிஷ்டானம் #மணிப்பூரகம் #அனாகதம் #விசுத்தி #ஆஞ்ஞா #சகஸ்ராரம் #ஏழுசக்கரங்கல் #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்