பாடல்: மூன்று மண்டலத்திலும்
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின் றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
நமது உடலில், அக்னி, சூரியன், சந்திரன் போன்ற மூன்று மண்டலங்கள் உள்ளன.
இதில் இடை நாடி (முதுகுத்தண்டின் இடது பக்கம்), பிங்கலை நாடி (முதுகுத்தண்டின் வலது பக்கம்), சுழுமுனை நாடி (முதுகுத்தண்டின் மையத்தின் அடிப்பகுதியில் இருந்து, தலை உச்சிவரை) என்ற மூன்று நாடிகளும் தூண்களாக உள்ளன.
பிராண வாயுவை ஆழமாய் சுவாசித்து, சுருண்ட பாம்பை போல முதுகு தண்டின் அடிப்பகுதியில் இருந்து குண்டலினி சக்தியை கீழ் இருந்து மேல்நோக்கி எழும் அட்சர மந்திரத்தை; நம்மை படைத்த தாய் தந்தையான சிவனும், சக்தியும், நமக்குக் கொடுத்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும், இந்த மந்திரத்துள் அடங்கியது.
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #மூன்றுமண்டலத்திலும் #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #சிதம்பரம் #நடராஜர் #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல் #மூன்றுமண்டலம் #ஓம்நமசிவாய #சித்தர் #குண்டலினி #தியானம் #யோகா #சிவசக்தி #மந்திரம் #அக்ஷரமந்திரம் #சித்தர்பாடல்கள் #தமிழ் #பக்தி #MoondruMandalathilum #OmNamasivaya #Kundalini #TamilDevotionalSongs #Siddhar #SumathiNiranjan