பாடல்: ஓம்நம சிவாயமே
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்த பின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்த பின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்த பின்
ஓம்நம சிவாயமே உட் கலந்து நிற்குமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
நாம் உச்சரிக்கும் 'ஓம்நம சிவாயமே' என்ற மந்திரத்தின் மூலம், இறைவனை அடையும் பாதையை எளிமையாகச் சொல்கிறது இந்த பாடல்.
முதலில், மந்திரச் செபத்தால் நமது பாவ புண்ணியச் செயல்கள் சமமாகி, மனதிலுள்ள மலங்கள் நீங்கி, இறைவன் யார் என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
அடுத்து, குருவின் அருளால் இறைவனின் சக்தி நம் மீது பொழிந்து, ஆணவம் என்னும் இருள் முழுமையாக நீங்கி, தத்துவ உண்மைகள் நமக்குத் தெளிவாகப் புரியும்.
இந்தத் தெளிவை அடைந்த பின்னரும், பழைய ஆசைகளின் வாசனை மீண்டும் நம்மை இழுக்காதபடி, அந்த ஞானத்தை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படி நிலைபெற்றுவிட்ட பிறகு, அந்த 'ஓம்நம சிவாயமே' ஆன சிவபெருமானே நம் மனதிற்குள் இரண்டறக் கலந்து, நிரந்தரமாக நம்முடனே நிலைத்திருப்பார். இதுவே, சிவத்துடன் நாம் அடையும் பிரிக்க முடியாத பேரின்ப நிலையாகும்.
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #ஓம்நம #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #சிதம்பரம் #நடராஜர் #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்