பாடல்: அவ்வெனும் எழுத்தினால்
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
"ஓம்" என்னும் ஓங்காரத்தில்தான் அனைத்தும் தோன்றியது. அதன் உட்பகுதியில் அகாரம் (அ), உகாரம் (உ), மகாரம் (ம்) ஆகியவை ஓங்கார எழுத்தின் மூன்று பகுதிகளாகும்.
அகாரம்: தொடக்கம்
உகாரம்: நடைமுறை
மகாரம்: முடிவு
அதாவது, பிறப்பு – வாழ்க்கை – மரணம் (அ–உ–ம்) எனும் மூன்று நிலைகளையும், படைப்பு – காப்பு – அழிவு எனும் பரம்பொருளின் செயல்களையும் குறிக்கிறது.
ஓம் என்பது "அஉம்" என்று உச்சரிக்கப்பட வேண்டும்.
இந்த "அ", "உ", "ம" ஆகிய அனைத்திலும் ஊடுருவி அமர்ந்து விளங்குவது "சி" என்னும் சிகாரம் ஆகும்
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #ஓம் #அகாரம் #உகாரம் #மகாரம் #தொடக்கம் #நடைமுறை #முடிவு #பிறப்பு #வாழ்க்கை #மரணம் #அவ்வெனும் #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #சிதம்பரம் #நடராஜர் #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்