இறைவன் மீதான காதலை கோதை, தனது பக்தியை இனிய தமிழ்ப் பாடல்களாக வெளிப்படுத்தினார்.
அவர் இயற்றிய திருப்பாவை 30 பாசுரங்கள், மார்கழி மாதம் முழுவதும் பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.
மேலும், நாச்சியார் திருமொழி என்ற 143 பாசுரங்களில், அரங்கநாதனை மணக்க வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த இறைக் காதல் வெளிப்படுகிறது.
நான் அரங்கநாதப் பெருமானையே மணப்பேன்' என்று உறுதியுடன் வாழ்ந்த ஆண்டாளின் பக்தியைக் கண்டு, அரங்கநாதர் பெருமாளே அவரைத் தனது தெய்வீக மணவாட்டியாக ஏற்றுக்கொண்டார்.
இன்று வரை, ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி உலகம் முழுவதும் பக்தர்களின் இதயங்களில் இறைபக்தியை வளர்த்து வருகின்றன.
#ஆண்டாள் #திருப்பாவை #நாச்சியார்திருமொழி #ஸ்ரீரங்கநாதர் #தமிழ்பக்தி #வைணவம் #ShivanyaCreations