பாடல்: நினைப்பதொன்று கண்டிலேன்
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
நான் எண்ணுகின்ற எல்லா எண்ணங்களையும்,
நீயே என் முன் நின்று எண்ண வைக்கிறாய்.
அப்படி இருக்கும் எண்ணங்களை, மாயை என்ற ஒரு குழப்பமானது
அந்த நினைவை நினைக்கவும், மறக்கவும் செய்கிறது.
நான் என் மனதை ஒருநிலை படுத்தி, அந்த மாயையை நீக்கிய காலத்திலிருந்து;
என்னுள் நீ, உன்னுள் நான் கலந்திருப்பதை அறிந்தேன்.
மறவாமை என்று இருப்பதனால் உன்னை நான் எப்படி துதி செய்வது?
உன்னை எப்போதும் மறவேன்
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #நினைப்பதொன்று #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #சிதம்பரம் #நடராஜர் #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்