பாடல்: ஆன அஞ்செழுத்திலே
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
ஆன அஞ்செழுத்திலே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்திலே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்திலே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்திலே அடங்கலாவ லுற்றதே
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
நமசிவாய என்று சொல்லப்படும் இந்த ஐந்து எழுத்துக்குள்ளே
எல்லையற்ற உலகமும் அடங்கி இருக்கிறது.
ஆதிப் பராசக்தியிலிருந்து தோன்றிய இந்த அஞ்செழுத்துக்குள்ளே, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவபெருமான் இருக்கிறார்கள்.
முதல் எழுத்தான 'அ'வில் தொடங்கி, முடிவு எழுத்தான 'ம'வில் அனைத்தும் அடங்கி இருக்கிறது.
முடிவில், நமச்சிவாய என்னும் அணைத்து தத்துவங்களும்
நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாய் கலந்திருக்கிறது.
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #ஆனஅஞ்செழுத்திலே #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #சிதம்பரம் #நடராஜர் #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்