பாடல்: விண்ணிலுள்ள தேவர்கள்
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
இறைவன் தேவர்களுக்கும் அறியொணாத மெய்ப்பொருளாக இருந்தாலும், அவனை உள்முக அனுபவத்தின் மூலமே அறியப்படுகிறான்.
ஆணி எவ்வாறு ஒரு பொருளை ஒரே இடத்தில் நிலைநிறுத்துகிறதோ, அதேபோல, ஆன்மீக உணர்வை அலைபாயாமல் நம் மனதில் அந்த உணர்வை ஒரே இடத்தில் நிலைநிறுத்தவேண்டும்.
இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் பிறக்கும் சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈசனின் திருவடிகளை முழுமையாக பற்றிக்கொள்ளவேண்டும்.
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #விண்ணிலுள்ள #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்