பாடல்: இல்லை இல்லை இல்லை
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே!!!
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள், உண்மையில் ஞானம் இல்லாத ஏழைகளாக இருக்கிறார்கள்.
'இல்லை' என்றும் 'உண்டு' என்றும் இரண்டுபட்டுச் சொல்வதற்கு பதிலாக, தனக்குள்ளேயே 'நான்' என்று இருக்கும் ஆன்மாவையும், அந்த ஆன்மாவிற்குள் இருக்கும் இறைவனையும் அறியாமல், 'கடவுள் இல்லை' என்று சொன்னால் என்ன ஆகும்?
சக்தி, சிவன், ஆகிய இரண்டு அம்சங்களும் ஒன்றாக இருக்கும் அந்த உண்மைப் பொருளை யார் ஒருவர் அறிந்து உணர்ந்து தியானிக்கிறார்களோ, அவர்கள் 'சும்மா இருக்கும்' (அசையாத, மனமற்ற) சமாதி நிலை என்ற உயர்ந்த எல்லையை அடைவார்கள்.
அப்படிப்பட்ட தவச் சிறப்பாளர்கள் மரணமில்லாத வாழ்க்கையை பெற்று, இறைவனுடன் கலந்துவிடுவார்கள்.
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #இல்லைஇல்லைஇல்லை #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்