பாடல்: மண்கலங் கவிழ்ந்தபோது
பாடியவர்: சுமதி நிரஞ்சன்
வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன்
எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு)
மொழி: தமிழ்
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் இசனே
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
மண்பானை உடைந்தாலும்
அதை எடுத்து அடுக்கி வைப்பார்கள் .
வெண்கலப் பானை நசுங்கி போனாலும்
அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.
ஆனால் நாம் இறந்து விட்டால், நாற்றம் வீசும் பிணம் என்று
குழி தோண்டி புதைத்துவிடுகிறார்கள்.
ஒரு காசிற்கும் உதவாத எண்சாண் உடம்பில்.
நீ ஆடிய மாயம் தான் என்ன, ஈசனே!
-----
சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.
#சிவவாக்கியார் #மண்பானை #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #ஈசனே #மண்கலங்கவிழ்ந்தபோது #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்