news ,அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , awarnes,worldrecod news,breakingnews.newsupdates socialawarnes livenews.pepoleand blog vlog, சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.


kalam tv

அரசியல் ஆதாயத்திற்காகவும் பணத்திற்காகவும் அண்ணாமலையை அவதூறாக பேசிய நிர்வாகி ராமமூர்த்தி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்

தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை
சார்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை நவீன பகுதியில் உள்ள தனியார் அரங்கில் யுகாதி பண்டிகையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வந்தபோது திமுகவினர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அங்கிருந்து புறக்கணித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிபேரவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய பேரவையின் நிர்வாகி பாலாஜி உத்தமராமசாமி:-

தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை சார்ந்த ராமமூர்த்தி என்ற நிர்வாகி திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அண்ணாமலை அழையா விருந்தளியாக வந்த மேடையில் பேசியதாக கண்டனம் தெரிவித்தனர்.

அரசியல் ஆதாயத்திற்காகவும் பணத்திற்காகவும் ராமமூர்த்தி இதுபோல இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியானது முற்றிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் சமுதாயம் சாராமல் பங்கேற்றதாகவும் ராமமூர்த்தி மட்டும் ஒரு கட்சி சார்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

பேட்டி:-
பாலாஜி உத்தமராமசாமி

3 months ago | [YT] | 0

kalam tv

கோவை அருகே -எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியைச் பார்த்தவுடன் ஆர்வமாக முண்டியெடுத்த பொதுமக்களுக்கு போன் ஆப் மூலம் புக் செய்தவர்களுக்கு சிலிண்டர் கொடுத்து சென்றனர். பெரும்பாலான பொது மக்களுக்கு சிலிண்டர் ஆப் வேலை செய்யவில்லை என புகார் தெரிவித்தனர்


​ கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஃபோன் மூலம் சிலிண்டர் புக் செய்த பொது மக்களுக்கு வினியோகம் செய்ய இன்று ஆலாந்துறை பகுதிக்கு சிலிண்டர் லாரி வந்தது.அதைப் பார்த்த பொதுமக்கள் ஆர்வம் மிகுதியில் லாரியை சுற்றி சிலிண்டரை வாங்க முண்டியடித்து கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விநியோகம் செய்ய வந்த ஊழியர்கள் ஆலந்துறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் ஃபோன் மூலம் புக் செய்தவர்களை வரிசையாக நின்று ஒவ்வொருவருக்காக சிலிண்டர் வழங்கினர். ஒரு சிலருக்கு போன் ஆப் மூலம் புக் செய்தும் இதுவரை சிலிண்டர் வரவில்லை என புகார் தெரிவித்தனர். அதற்கு இணையதள வாயிலாக புகார் தெரிவித்து மீண்டும் மொபைல் ஆப் மூலம் சிலிண்டரை புக் செய்யுங்கள் என பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். கேட்டு அமைதியாக பொதுமக்கள் கிளம்பிச் சென்றனர்

3 months ago | [YT] | 0

kalam tv

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் யானை தாக்கி கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் என்பவர் உயிரிழந்ததுள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஆனைக்கட்டியில் தங்கிப் படித்து வருகிறார். இவரது தந்தை மயிலன் (56). இவர் மணிகண்டனை பார்க்க கடந்த 15ம் தேதி வந்துள்ளார் அதன் பின் காணாமல் போயுள்ளார்.

மயிலன் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்பதால், அவர் வழக்கம்போல எங்காவது சென்றிருப்பார் என்று குடும்பத்தினர் கருதியுள்ளனர். திரும்ப வீடு வராததால் தடாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23 ம் தேதி அன்று ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் அவ்வழியாக ரோந்து சென்ற வனக்காப்பாளர் மணிவண்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சந்திரன் ஆகியோர்கள் பார்த்து தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் அழுகிய நிலையில் இருந்த ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த மணிகண்டன், சடலத்தின் சட்டையை வைத்து அது தனது தந்தை மயிலன் தான் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் காட்டுப் பாதை வழியாகச் சென்றபோது காட்டுயானை தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

3 months ago | [YT] | 0

kalam tv

முதியோர் இல்லத்திலேயே தங்கிவிடலாம் நினைக்கிறேன்: நடிகர் சிவகுமார் முதியோர் காப்பகத்தை திறந்து வைத்து பேச்சு

சூலூர், மார்ச் 22: சூலூர் அருகே லட்சுமண நாயக்கன் பாளையத்தில் வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை சார்பாக புதிய முதியோர் காப்பக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார் அப்போது சென்னையில் இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க நானும் கூட இங்கேயே தங்கிவிடலாம் என்று நினைக்கிறேன் என கூறினார். இது அங்கிருந்த முதியோர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமி நாயக்கன்பாளையம் பகுதியில் வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை சார்பாக முதியோர் இல்லம் நடைபெற்று. இங்கு புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கட்டிடத்தில் 16 அறைகளுக்கு மேலாக அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடமாக அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை நடிகரும் ஓவியருமான சிவகுமார் இறந்து வைத்து பேசினார். முதியோர் இல்ல அறைகளை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்ட நடிகர் சிவகுமார் நானும் கூட இங்கேயே தங்கிவிடலாம் என நினைக்கிறேன் சென்னையில் உள்ள பிரச்சனைகளை விட்டுவிட்டு இங்கேயே தங்கி நிம்மதியாக இருக்கலாம் என அனைவரின் முன்னிலையிலும் நகைச்சுவையாக பேசினார். இது முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் முதியோர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது மேலும் அங்கிருந்து அவர்களுக்கு ஆச்சரியத்தையும் கொடுத்தது. மிகவும் புகழ்பெற்ற நடிகரான சிவகுமார் தான் முதியோர் இல்லத்தில் தங்கி ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று கூறியது வியப்பை ஏற்படுத்தியது ஏனெனில் தமிழகத்தில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோக்களாக முன்னணி நடிகர்களாக வளம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் தகப்பனாரான நடிகர் சிவகுமார் இவ்வாறு முதியோர் இல்லத்தில் தங்க விரும்புவதாக கூறி இருப்பது அனைவரிடத்திலும் பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

3 months ago | [YT] | 0

kalam tv

நான்தான் இங்க சீனியர்!" - கலகலப்பாக ரிப்பன் வெட்டி நானும் இங்கேயே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்!"
சூலூரில் -முதியோர் இல்ல திறப்பு விழாவில் எமோஷனலான நடிகர் சிவகுமார்

எங்க அம்மாவை ராணி மாதிரி பார்த்துகிட்டேன்!!பெற்றோரை கைவிட்டால் பாவம் சும்மா விடாது எனவும் பேச்சு

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள லட்சுமி நாயக்கன்பாளையத்தில் வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் முதியோர் காப்பக புதிய கட்டிட திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், கத்தரிக்கோலை கையில் எடுத்தபோது "இங்கு வயதில் மூத்தவர் தான் ரிப்பன் வெட்ட வேண்டும், நான்தான் இங்கு மூத்தவன் அதனால் நானே வெட்டுகிறேன்" என கலகலப்பாகப் பேசி ரிப்பனை வெட்டி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.


தொடர்ந்து அங்கிருந்த அறைகளைப் பார்வையிட்ட அவர், "நானும் இங்கேயே வந்துவிடலாம் என நினைக்கிறேன், இங்குள்ள சாமியாரைப் போல இருக்கலாம் எனத் தோன்றுகிறது" எனப் புன்னகையுடன் தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் ராம்ராஜ் காட்டன் நாகராஜன், சென்னை சில்க்ஸ் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து

விழாவில் பேசிய சிவகுமார், "தாய் தந்தையரை உயிருள்ளவரை நேசிக்க வேண்டும், அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் கடைசி வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் என் அம்மாவை இறக்கும் வரை ஒரு ராணி போலத் தான் வைத்திருந்தேன். நான் கல்வி அறக்கட்டளை தொடங்கிய போது அதற்கான பணத்தை எம்.ஜி.ஆரிடம் என் அம்மா தான் கொடுத்தார். பெற்றோரை கவனிக்காமல் விட்டால் அந்தப் பாவம் யாரையும் சும்மா விடாது. கடவுள் என்று யாரும் இல்லை, கடவுளுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது" என பேசினார்.

3 months ago | [YT] | 0

kalam tv

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் மகளிர் தினவிழா

பெண்களுக்கு நிதி மேலாண்மை, சுய வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில், தனியார் மண்டபத்தில், சாமூத்ரி வர்மா சாரிடபில் டிரஸ்ட் சார்பில், நடைபெற்ற மகளிர் தின விழாவில், கனரா வங்கி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவினர் பங்கேற்றனர்.

ஜமோரின் தொண்டு நிறுவன மேலாண் இயக்குனர் விஜய் ஆதித்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரபல தொழில் அதிபர் லீமா மார்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூடலூர் கனரா வங்கி கிளை முதுநிலை மேலாளர் சத்யா மாதவ் முன்னிலை வகித்தார்.

விழாவில், மகளிருக்கு ச நிதி மேலாண்மை, தலைமைத்துவ பயிற்சி, சுய வேலைவாய்ப்பு, ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மகளிருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக, மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி கூறுகையில்;- மகளிருக்கு தேவையான வங்கி கடன் தருவதாகவும், பெண்கள் முன்னேற்றத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தவர், தங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் கேன்சர், எச்ஐவி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை உதவிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விழா ஏற்பாடுகளை மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர். ஜெயந்தி செய்திருந்தார்.

3 months ago | [YT] | 0

kalam tv

கோவை: வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வளைகுடா நாடுகளில் தற்பொழுது நடந்து வரும் போர்ப்பதற்றம் காரணமாக வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன பல்வேறு உணவகங்களும் உணவு வகைகளை சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக குறைத்துள்ளன. வீட்டில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி மற்றும் ஓட்டல் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

3 months ago | [YT] | 0

kalam tv

கோவை: தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் சில உணவகங்கள் அவர்களின் உணவு வகைகளை குறைத்துள்ளன. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஒரு சில ஹாஸ்டல்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்கள் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்தும் தனியார் விடுதிகளுக்கு வணிக சிலிண்டர்கள் வழங்க கோரிக்கை விடுத்து கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேசன் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து பேட்டியளித்த அசோசியேஷன் தலைவர் அனந்தராமன் ஹாஸ்டல் மூடப்படும் என்று ஒரு சில ஊடகங்கள் கூறுவதாகவும் ஆனால் அது ஒருபோதும் கிடையாது என்றார். தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த சூழல் ஒரு சிரமத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் விறகு அடுப்புகளை கொண்டு சமையல் செய்து வருவதாகவும் எனவே உதவி கேட்டு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

எங்கள் விடுதிகள் கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயங்கி வருவதாகவும் அங்கு 1 லட்சம் பேர் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு கமர்சியல் சிலிண்டர் அரசு வழங்குவதாக சில தகவல்கள் வெளியாகிறது எனவே அந்த கமர்சியல் சிலிண்டர்களை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஹாஸ்டல்கள் மூடப்படும் என்று ஊடகங்களில் வரும் செய்தியை அப்படியே நம்ப வேண்டாம் என்றும் தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த சூழல் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.

3 months ago | [YT] | 0

kalam tv

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் சம மட்ட கால்வாய் அருகே பிறந்து ஐந்து நாட்களான குட்டியுடன் சாலையில் உலா வந்த யானை கூட்டம் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆழியார் வால்பாறை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது
இந்த நிலையில் இன்று மாலை ஆழியார் சம மட்ட கால்வாய் வால்பாறை சாலையின் ஓரத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யானை கூட்டம் திடீரென ஆழியார் வால்பாறை சாலையில் அணைப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க பிறந்து ஐந்து நாட்கள் ஆன குட்டியுடன் நான்கு யானைகள் சென்றது இதனை காண வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் கடும் வரட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இவ்வழியாக செல்லுபவர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது மேலும் யானைகளை கண்டால் புகைப்படம் எடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

3 months ago | [YT] | 1

kalam tv

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் சம மட்ட கால்வாய் அருகே பிறந்து ஐந்து நாட்களான குட்டியுடன் சாலையில் உலா வந்த யானை கூட்டம் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆழியார் வால்பாறை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது
இந்த நிலையில் இன்று மாலை ஆழியார் சம மட்ட கால்வாய் வால்பாறை சாலையின் ஓரத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யானை கூட்டம் திடீரென ஆழியார் வால்பாறை சாலையில் அணைப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க பிறந்து ஐந்து நாட்கள் ஆன குட்டியுடன் நான்கு யானைகள் சென்றது இதனை காண வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் கடும் வரட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இவ்வழியாக செல்லுபவர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது மேலும் யானைகளை கண்டால் புகைப்படம் எடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

3 months ago | [YT] | 0