Vtv Tamil Cinema



Vtv Tamil Cinema

ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படப்பிடிப்பு தொடக்கம்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய திரைப்படமான 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டி, சண்டைக் காட்சிகளை அன்பரிவ், எடிட்டிங்கை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்கின்றனர்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் முதன்முறையாக இணையும் இந்தப் படம், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் முக்கியமான மைல்கல் திரைப்படமாக உருவாகி வருகிறது. தொடக்க விழாவில் திரைப்படத் துறையின் பல முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

2 days ago | [YT] | 6

Vtv Tamil Cinema

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பவிஷ், "எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் முதலில் தனுஷ் சாருக்குத்தான் நன்றி சொல்வேன்" என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார். மேலும், இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் தினேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், படத்தின் இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகை நாக துர்காவையும் பாராட்டினார். விழாவில் பேசிய பலரும் பவிஷின் நடிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சியை பாராட்டி வாழ்த்தினர்.

மேலும் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும் vtv24x7.com/love-oh-love-audio-and-trailer-launche…

3 days ago | [YT] | 2

Vtv Tamil Cinema

விக்ரம் பிரபுவின் 26வது படம் – ரோமியோ பிக்சர்ஸ் பிரம்மாண்ட அறிவிப்பு

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு, தனது தனித்துவமான கதைத்தேர்வுகள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். குறிப்பாக டாணாக்காரன் மற்றும் சிறை போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் தேர்வு செய்யும் கதைகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் 26வது படமாக அமைந்துள்ளது. வித்தியாசமான களத்தில் உருவாகும் இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தரமான திரைப்படங்களை தயாரித்தும், வெற்றிகரமாக விநியோகம் செய்தும் வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த புதிய படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கவுள்ளது. தரமான தொழில்நுட்பம் மற்றும் வலுவான கதையம்சத்துடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கிறார்.

மேலும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவி மோகன் நடிப்பில் ஒரு படமும், ஆகாஷ் முரளி நடிப்பில் மற்றொரு படமும், தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

4 days ago | [YT] | 10

Vtv Tamil Cinema

சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு.

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன.

இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் Reshma Shyam இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை Shali C எழுதியுள்ளார். காதலியை ஒரு “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடல், வழக்கமான காதல் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.

சிவப்பு நிற பின்னணியில், டார்க் விஷுவல் டோனில், அழகான நடன அசைவுகளுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிகள், நடனம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று கலந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இசை என்பது கதையின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மொழி என்பதை பலமுறை நிரூபித்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலிலும் புதுமையான மெலடி மற்றும் நவீன இசை அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாடல் முடிந்த பிறகும் அதன் தாளம் மற்றும் மெலடி மனதில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

4 days ago | [YT] | 9

Vtv Tamil Cinema

ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள 'கராத்தே பாபு' திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆகஸ்ட் 28 அன்று 'கராத்தே பாபு' திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக 'கராத்தே பாபு' உருவாகி உள்ளது," என்று தெரிவித்தார்.

படக்குழுவினர்

இசை - சாம் சி எஸ்

ஒளிப்பதிவு - எழில் அரசு கே 

படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன் 

தயாரிப்பு வடிவமைப்பு - சண்முகராஜா

இதர நடிகர்கள்: நடிகர்கள்: வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம், மணிமேகலா

இணை எழுத்தாளர்கள்: ரத்ன குமார், பாக்கியம் சங்கர்

சண்டை பயிற்சி: திலிப் சுப்பராயன்

ஒலி வடிவமைப்பாளர்: அருணாச்சலம் சிவலிங்கம்

நடன இயக்குநர்: சதீஷ் கிருஷ்ணன்

ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி பாலசுப்ரமணியன்

தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் ஆனந்த்கிருஷ்ணன்

நிர்வாகத் தயாரிப்பாளர்: கே.எஸ். செந்தில் குமார்

விநியோகத் தலைவர்: கிரண் குமார் எஸ்

கோ டைரக்டர்: எஸ் ஏ பாஸ்கரன்

தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கணேஷ் கே பாபு

4 days ago | [YT] | 5

Vtv Tamil Cinema

நடிகர் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் நடிக்கும் 'லவ் அண்ட் வார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'96 ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'லவ் அண்ட் வார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‌ இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் அண்ட் வார்' திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி எஸ் ஆர் , நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கும் இந்த ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணா பாஸ்கர் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு தேநீர் பருகும் கால அவகாசத்திற்குள் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டிய விசயத்தை 'ஈகோ'வினாலும், கோபத்தினாலும் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி.., உறவுகளை இழந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும்.. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை திரையரங்குகளில் காணும் போது.. ரசிகர்கள் தங்களின் கவலைகள் மறந்து, வயிறு வலிக்க சிரித்து, ரசித்து, தங்களது கடந்த கால நினைவுகளை நினைத்து கொள்வதுடன்.. தங்களை புதுப்பித்துக் கொண்டு உற்சாகத்துடன் கொண்டாட விரும்புவர்களுக்கான படம் இது.

இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு முன், விடை தெரியாத கேள்விகள் பலருக்கு இருக்கும். அதற்கான பதில் இப்படத்தை பார்த்தால் கிடைக்கும்.

'லவ் அண்ட் வார் ' படத்தில் நடித்திருக்கும் கௌரி கிஷன் - ஆதித்யா பாஸ்கர் ஜோடி.. திரையில் அற்புதமான கெமிஸ்ட்ரி மூலம் மேஜிக் செய்து ரசிகர்களை வசப்படுத்துவார்கள்'' என்றார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில்.. இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஆகியோரது தோற்றம்... அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால்.. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

4 days ago | [YT] | 6

Vtv Tamil Cinema

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு.

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மைகளை வெளிக்கொணர போராடும் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படேவின் கதாபாத்திரங்களை வலுவாக சித்தரிக்கிறது. அன்றாட உணவுப் பொருட்களில் கலந்து வரும் நச்சுப் பொருட்களால், குறிப்பாக இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை படம் உருக்கமாக எடுத்துரைக்கிறது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதை, பலரின் கவனத்திற்கே வராமல் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கிறது.

இப்படத்தை பற்றி சேட்டன் DK கூறுகையில்..,

“தி இந்தியா ஸ்டோரி என்பது வெறும் திரைப்படம் அல்ல; சமூகமாக நாம் அவசியம் பேச வேண்டிய ஒரு முக்கிய உரையாடல். பூச்சிக்கொல்லி விவசாயத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும், அது உருவாக்கும் அமைதியான உடல்நல நெருக்கடியையும் இந்தக் கதையின் மூலம் வெளிப்படுத்த விரும்பினோம். டீசர் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. தினமும் கோடிக்கணக்கான குடும்பங்களை பாதிக்கும் இந்த விஷயத்தைப் பற்றி மக்கள் சிந்திக்கவும், விழிப்புணர்வு பெறவும், தங்கள் உணவுத் தட்டில் என்ன வருகிறது என்பதை கேள்வி எழுப்பவும் இந்தப் படம் தூண்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.

நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது..,

“இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் கருப்பொருள்தான். பூச்சிக்கொல்லி விவசாயம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. மிகப்பெரிய அமைப்புக்கு எதிராக போராடும் ஒரு சாதாரண தந்தையின் உணர்வுபூர்வமான பயணத்தை என் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மிக முக்கியமான ஒரு விவாதத்தையும் தொடங்கும் திரைப்படம்.”

நடிகை காஜல் அகர்வால் கூறுகையில்,

“தி இந்தியா ஸ்டோரி ஒரு வலுவான சமூகச் செய்தியை மையமாகக் கொண்ட திரைப்படம். ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. இன்றைய பெற்றோர்களின் அச்சங்களையும் கவலைகளையும் இது பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பார்வைக்கு பெரும்பாலும் வராத ஒரு உண்மையை டீசர் வெளிப்படுத்துகிறது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் அது எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க இந்தப் படம் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி, ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்படம் Zee Studios  உலகளாவிய வெளியீடாக வெளியாகிறது.

4 days ago | [YT] | 3

Vtv Tamil Cinema

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Dhev Cinemas Pvt Ltd கிருத்திகா தங்கப்பாண்டி.S, தங்கப்பாண்டி.D தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள *“அர்ஜுனன் பேர் பத்து”* திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடுமையாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறார். ஆனால் அந்த வாகனம் திருடப்பட்ட பிறகு, அதற்கு பலர் உரிமை கோரும் சூழ்நிலை உருவாகிறது. வாகனத் திருட்டு மாஃபியாவை மையமாகக் கொண்டு, நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.

“மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

யோகி பாபு, இதுவரை நடித்திராத வகையில், யதார்த்தம் கலந்த உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார். மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், மதன் தட்சணாமூர்த்தி (அயலி), சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, M.சௌந்தர்யா சரவணன், சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் லெனின் பாரதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்திற்கு D. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை மு.காசிவிஸ்வநாதன், கலை இயக்கத்தை பி. சேகர் மற்றும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷ் ஆகியோர் கவனித்துள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் *“அர்ஜுனன் பேர் பத்து”* திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 days ago | [YT] | 8

Vtv Tamil Cinema

'டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்' திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது.

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம். 

இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின் சீக்வலில் இருண்ட மற்றும் மர்மமான உலகிற்குள் மீண்டும் பார்வையாளர்கள் செல்ல இருக்கிறார்கள். அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அஜய் ஞானமுத்து கதையை இன்னும் விரிவுபடுத்தியுள்ளார். சில கதைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை.

சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மற்றும் திரையுலகிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் வெளியீட்டு தேதி படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, "முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு திரைப்படத்தின் சீக்வலும் வெற்றி பெறுவது எளிதல்ல. ஆனால், ‘டிமான்டி காலனி 2’ மூலம் இயக்குநர் அதை சாத்தியப்படுத்தினார். படம் வெளியான பிறகு, ஒரு ரசிகர் என்னிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘தி ஷைனிங்’ பட அனுபவத்தை ‘டாக்டர் ஸ்லீப்’ எவ்வாறு தொடர்ந்ததோ, அதைப் போலவே இந்த அனுபவம் இருந்தது என்று அவர் கூறினார். அத்தகைய கருத்துகளை கேட்கும்போது, இந்த சீக்வலின் அங்கமாக நானும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலும் அதிகரித்தது. இன்று ‘டிமான்டி காலனி 3’ படத்தின் ஃபைனல் வெர்ஷன் பார்த்த பிறகு, இந்தப் படத்தில் இணைந்திருப்பதை பெருமையாக உணர்கிறேன். ரசிகர்களுக்காக பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தில் உள்ளது. அருள்நிதி, அஜய் ஞானமுத்து மற்றும் முழு குழுவும் இந்தப் படத்தை மிகுந்த பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விரைவில் படத்தின் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை தொடங்கவுள்ளோம்" என்றார்.

ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவற்றுடன் இணைந்து, பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் டங்கல் டிவி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு படம் வழங்கப்படுகிறது.

*நடிகர்கள்:* அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆண்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹூசைன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை: ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்,

எழுத்து, இயக்கம்: அஜய் ஆர். ஞானமுத்து, 

இசை: சாம் சி.எஸ்.,

ஒளிப்பதிவு: சிவக்குமார் விஜயன்,

படத்தொகுப்பு: குமரேஷ்.டி

5 days ago | [YT] | 6

Vtv Tamil Cinema

தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் *“அட்டாக்கர்”* படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார்.

வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமாக “அட்டாக்கர்” அமைகிறது. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அடையாளங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரைப்பட ஆய்வாளர் ஜி. தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய வாலிபால் வீரர்களான ஜி.ஆர். வைஷ்ணவ் மற்றும் எல்.எம். மனோஜ் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்று படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் பேசிய *இயக்குநர் பா.இரஞ்சித்,* “எனது கிராமத்தில் வாலிபால் விளையாட்டை அறிமுகப்படுத்திய முதல் நபர் நான்தான். அந்த விளையாட்டு பல இளைஞர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்று வாலிபாலை மையமாகக் கொண்டு ஒரு தமிழ் திரைப்படம் உருவாகுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ‘அட்டாக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

பேசிய ஜி. தனஞ்செயன், “தினேஷ்ராஜ் சிறந்த தயாரிப்பாளர். திட்டமிட்ட பட்ஜெட்டில் தரமான படைப்புகளை உருவாக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், அவர் தயாரிக்கும் படங்கள் தரத்திலும், பிரம்மாண்டத்திலும் தனித்துவம் பெற்றவை. ‘அட்டாக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் பேசுகையில், “ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் ‘அட்டாக்கர்’ எங்களுக்கு மிகவும் சிறப்பான படம். விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கும், புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்தப் படத்தில் பல புதுமுக கலைஞர்களும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றுகின்றனர். நடிகர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தீவிர வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்களில் ஒருவரான அஜித் லால் உள்ளிட்ட பல தேசிய அளவிலான வாலிபால் வீரர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விளையாட்டின் துடிப்பையும், மனித உணர்வுகளையும், நமது மண்ணின் கலாச்சார அடையாளங்களையும் இணைக்கும் ஜனரஞ்சகமான திரைப்படமாக ‘அட்டாக்கர்’ உருவாகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படைப்பாக இது அமையும்” என்றார்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட “அட்டாக்கர்” படத்தின் புரோமோ வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திரைப்படங்களில் ஒன்றாக “அட்டாக்கர்” உருவெடுத்துள்ளது.

1 week ago | [YT] | 14