Channel is about talking with you social issues and Ponniyin selvan audio book and tv shows and review of debates.




Kadhaippom Vaa

நான் அஞ்சு வருஷம் வேலை செஞ்ச காலேஜ் what's up குரூப்ல, ஸ்டாஃப் எல்லாம் 15 வருஷத்துக்கு முன்னாடி டூருக்கு போயிட்டு வந்த போட்டோ ஷேர் பண்ணி இருந்தாங்க...

அந்த அஞ்சு வருஷத்துல ஒரு டூருக்கு கூட நான் போனதில்ல...
ஸ்டாப்ஸ் யாருமே என்ன ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை...

பொதுவா ஒரு வருஷம் டூர் போனா அடுத்த வருஷம் அடுத்த ஸ்டாப் போவாங்க... அஞ்சு வருஷமும் விடாம எல்லா டூருக்கும் போன ஸ்டாப்ஸ் எனக்கு தெரியும்...

போயிட்டு வந்து நடந்த விஷயங்களை கத கதையா பேசுவாங்க... அவங்களும் என்னை கேட்டது இல்ல... நானும் அவங்ககிட்ட என்னை ஏன் டூருக்கு செலக்ட் பண்ணல அப்படின்னு கேட்டதும் இல்லை....

நான் அப்படிதான் நான் யார்கிட்டயும் கேட்க மாட்டேன்... நான் எப்படி மத்தவங்கள புரிஞ்சு நடந்துக்கிறேனோ அதே மாதிரி அவங்களும் என்னை புரிந்து நடக்கணும்னு ஆசைப்படுற ஆளு நானு... இன்னும் சொல்லப்போனால் குறைந்தபட்ச நேர்மையோடு 🫰❤️

ஆனா வருத்தம் நிறைய இருந்துச்சு... ஒரு பேச்சுக்கு கூட அவங்க யாருமே என்னை கேட்டதில்லை அவங்க என்ன கன்சென்ட் பண்ணதும் இல்லை. அப்ப எனக்கு கல்யாணம் கூட ஆகல மனசுக்குள்ள எங்க அம்மா கிட்ட மட்டும் தான் பேசிக்குவேன்

சினிமாவுல ஒளிப்பதிவாளர் ஆகனும் அப்படின்னு ஆசைப்பட்டது கூட,விதவிதமான லொகேஷன்ல சூட் பண்ண போகலாம். புது புது இடங்களை பார்க்கலாம் அப்படின்னு ஆசை...

அதன் பிறகு கார் வாங்கிட்டு சவுத் இந்தியால நிறைய இடங்களை கார்லயே சுத்தியாச்சு... இமாச்சல், டெல்லி, வாரணாசி, ஆக்ரான்னு பிளைட்டுல போயிட்டு வந்தாச்சு....

இன்டர்நேஷனல் பிளைட்ல, முதல் முறையாக வியட்நாம் போய் ஒரு பத்து நாள்.... அடுத்ததாக சைனா ஒரு பத்து நாள், அடுத்ததாக ஓமான் ஒரு பத்து நாள்....

இப்படி எல்லா ஊர்களுக்கும் போய் திரும்பத் திரும்ப சென்னைக்கு வந்துட்டு இருக்கும்போது.... சரியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஜூன் மாசம் நாலாம் தேதி இங்கிலாந்து நியூ கேசில் ஏர்போர்ட்ல வந்து குடும்பத்தோட இறங்கனோம்....

ஸ்கூல்ல டூர் போகலன்னா என்ன? காலேஜ்ல வேலைய செய்யும் போது டூருக்கு போகலைன்னா என்ன?
சினிமாவுல தொடர்ந்து பணிபுரியட்டா என்ன?
புதிய புதிய இடங்களுக்கு பயணிக்கணும் என்பது தான் என்னுடைய அடிமனது ஆசை...
அந்த ஆசையை எங்க அம்மா வழி நடத்தி, என்னோட மனைவி மூலமா தீர்த்து வச்சதுன்னு நான் நம்புறேன்...❤️🫰

இல்லனா வீடு தங்காம ஊர் சுத்துது இந்த நாயின்னு என்னை திட்டும்போது... இதோ இருக்கிற கடலூர் Ot க்கே நான் போனதில்லன்னு எட்டாவது படிக்கும்போது எங்க அப்பா வடமலை கிட்ட சண்டை போட்டு ஞாபகத்துக்கு வருது...

சில அடி மனசு ஆசைகளுக்கு இந்த பிரபஞ்சமும் இயற்கையும் உதவி செய்யும்... அப்படித்தான் நான் இதை பார்க்கிறேன்❤️

கண்ண மூடி கண்ண திறக்கறதுக்குள்ள.... இங்கிலாந்து வந்து இரண்டு வருடங்கள் போயிடுச்சு....
மூன்றாவது வருஷம் உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றான ஸ்காட்லாந்துல, இன்றிலிருந்து தொடக்கம்...❤️

வழக்கம் போல உங்களுடைய ஆசிர்வாதங்களும் வாழ்த்துகள் வேண்டி.... அப்படியே ஸ்பெஷலா,
ஐரோப்பாவில் இன்னும் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டி, அடி மனசு ஆசை இருக்கிறது... அப்படியே ஸ்காட்லாந்துல வீடு வாங்கி இங்கேயே செட்டில் ஆகி, ஐரோப்பாவை சுத்தி பார்க்கிற கனவை உங்க ஆசிர்வாதங்கள் மூலமா நிறைவேற்றி வைக்கணும் அப்படின்னு நான் வேண்டிக்கிறேன்❤️🫰

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

#Jackiesekar #uklife #chennai #darlington #scotland #edinburgh

1 month ago | [YT] | 81

Kadhaippom Vaa

எவ்வளவுக்கு எவ்வளவு நேசித்த ஒரு நகரம்... சட்டுனு தமிழ்நாடும் சென்னையும் புடிக்காம போயிடுச்சு....

ஒன்ற கோடி பேர் ஓட்டு போட்டு அஞ்சரை கோடி பேர் வாழ்க்கையில மண்ணள்ளி போட்டு இருக்காங்க...

எல்லா அமைச்சரும் ரில்ஸ் மோகத்துல குறிப்பா மருத்துவமனைக்கே போறாங்க...

சுற்றுச்சூழல் அமைச்சரு அவர் எந்த துறை அமைச்சரனே தெரியாம சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அவரே சொல்றாரு இதுல ரீடேக் போலாமா அப்படின்னு கேக்குறாரு ...😄

Underarmsல hair remove பண்றதுக்கு, அதுக்கு கீழ ஒன்ற அடியில இருக்குற அந்தரங்க சமாச்சாரத்திற்கும் சேர்த்து, neem cream தடவி, பத்து நிமிஷம் கழிச்சு wet tissue ல தொடச்சி எடுத்தா பளபளன்னு இருக்கும்....

இது தெரியாம ரேசர் போட்டு சுரசொரனு இழுத்து கஷ்டப்பட்டுட்டோமே, பிளேடு கிழி வாங்கிட்டோமே அப்படின்னு வருத்தப்பட்டு இருப்போம்....

ரெண்டு நாளு கழிச்சி, முடி வளரும் போது, கைய சேர்த்து வைக்க முடியாது, ஜட்டி போட்டா குத்தும், அது ஓரளவுக்கு வளர வரைக்கும், வெளியே சொல்ல முடியாத ஒரு எரிச்சல் மயிர் இருக்கும்....

நான் பார்த்து பார்த்து கஷ்டப்பட்ட ஒரு வீட்டை, வாடகைக்கு விட்டு அவ டைல்ஸை உடைத்து, ஜன்னல் கண்ணாடியை உடைத்து வீடு ஃபுல்லாக ஆணி அடிச்சு, வீட்டை ரொம்ப நாஸ்தியா வச்சிருந்தா, நமக்கு எவ்வளவு எரிச்சல் இருக்கும்,
அந்த எரிச்ச மயிறு மனநிலை தான் இப்பவும்....

வீட்டு அம்மாவும் பொண்ணு சேர்ந்து நேத்து நைட்டு பானி பூரி ரெடி பண்ணாங்க...
என் பொண்ணு சொன்னா...
இனிமேல் சென்னைக்கு போக வேண்டிய அவசியமே இல்ல அப்படின்னா 🤣

நேத்து காலைலயும் இன்னைக்கும் என் பொண்டாட்டி இந்த 25 வருஷத்துல முதல் முறையா பூரி சுட்டா😂 தொட்டுக்க என்ன தெரியுமா?

சென்னா பட்டூரா 😂😂😂

உங்க அக்காளுக்கு சூப்பு வைக்க தெரியும்ன்றதே, எனக்கு இப்பதாண்டா தெரியும் அப்படின்னு கன்னி ராசியில கவுண்டர் சொல்ற கதையா...

செவலைப்புள்ள பூரியா இல்லாம குஷ்பூ இட்லி மாதிரி நல்லா.... சாரி உதாரணத்துக்கு கூட சொல்ல கூடாது...

நல்லா புஷ்டியா உப்பலா... 25 வருஷத்துக்கு அப்புறம் பூரி சென்னப்பட்டூரா ஓட,காலையில என் பிளேட்டுக்கு வந்துச்சு ...

நானும் சொல்றேன் சென்னைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை... 😂😂

நல்லா படிச்சிருந்தால் ஆவது Scotland ல ஐடி கம்பெனிலையாவது வேலையில் இருந்து இருக்கலாம்....

நல்லா படிக்கல வேற... 😂 பார்ல குடி குடிச்சிட்டு வர ஸ்காட்லாந்துகாரன் கிட்ட பிச்சை எடுத்து கூட பொழச்சிக்கலாம் அப்படின்னு தோணுது 😂

What is the procedure to change the country 😂😂😂

- ஜாக்கிசேகர்

#jackiesekar #edinburgh #scotland #uklife #chennai #Tamilnadu #fun

1 month ago | [YT] | 37

Kadhaippom Vaa

தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது,

திமுக இளைஞர் மன்றம் என்ற மன்றத்தை நடத்தி வந்தார்... அதில் அறிஞர் அண்ணாவுக்கு மணிவிழா நடத்த அண்ணாவிடம் தேதி கேட்க சென்றிருந்தார்...


அறிஞர் அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் அவரை சந்திக்க முடியாது என்று அவரது உதவியாளர்கள் சொல்லிவிட்டார்கள்...

ஸ்டாலின் அவர்களும் அறிஞர் அண்ணாவை சந்திக்க முடியவில்லை என்ற மன வருத்தத்துடன் வீடு வந்து விட்டார்...

அறிஞர் அண்ணாவுக்கு, கலைஞர் கருணாநிதி அவர்களின் மகன் மு க ஸ்டாலின் அவர்கள் உங்களை சந்திக்க வந்தார். உங்கள் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் அவரை அனுப்பி விட்டோம் என்று தகவலை அண்ணாவுக்கு சொல்லி இருக்கிறார்கள்...

அண்ணா உடனே அவனை கூப்பிடு, அவன் எதுக்கு வந்தான் என்று ஸ்டாலின் அவர்களை அழைத்து வர சொல்லி இருக்கிறார்...

அண்ணாவின் 7007 என்ற எண் உடைய  மஞ்சள் கலர் கார், ஸ்டாலின் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது...
அண்ணா அவர்களின் கார் ஓட்டுநர்,
டிரைவர் சண்முகம்.... உங்களை அறிஞர் அண்ணா அழைத்துக் கொண்டு வரச் சொன்னார் என்று சொல்கிறார்...உடனே ஸ்டாலின் அவர்களும், அறிஞர் அண்ணாவின் காரில் ஏறி, அண்ணாவை சந்திக்க செல்கிறார்...

அறிஞர் அண்ணா ஸ்டாலின் அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார் அதற்கு ஸ்டாலின் அவர்கள்... திமுக இளைஞர் மன்றம் என்ற ஒரு மன்றம் வைத்திருக்கிறோம் அதில் உங்களுக்கு மணிவிழா நடத்த உத்தேசித்து இருக்கிறோம்... அந்த விழாவில் கலந்து கொள்ள தேதி கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்...

அதற்கு அறிஞர் அண்ணா நான் பிறகு சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்... அதற்கு ஸ்டாலின் அவர்கள்... இப்பயே சொல்லுங்க என்று உறுதியாக கேட்டிருக்கிறார்..


அதற்கு ஸ்டாலின் அவர்களைப் பார்த்து, அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லி இருக்கிறார்...
"என்ன உங்க அப்பனை மாதிரியே பிடிவாதக்காரனா இருக்குற '
என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஸ்டாலின் அவர்களைப் பார்த்து சொன்ன அந்த பிடிவாதம் தான்.... அவங்க அப்பா கலைஞர் மாதிரி, எதற்கும் அசைந்து கொடுக்காத அந்த பிடிவாதம் தான்... இந்திய அளவில்  சங்கிகளை கதற வைத்துக் கொண்டிருக்கிறது.


கொரோனா காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதுமே, இங்கே கொடுக்கக்கூடிய மருந்துகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை எல்லாம் ஆந்திராவுக்கு, விஜயபாஸ்கர் போன்றவர்கள் எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஆட்சிப் பொறுப்பேற்றதுமே அதை தடுத்து நிறுத்தியவர் ஸ்டாலின்.

3500 கோடி கொடுக்கிறோம், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு இந்தியை இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருப்பவர் தான் ஸ்டாலின்...

மாநில உரிமைகளை மதிக்காமல் ஒன்றியத்தில் அதிகார குவிப்பு செய்து கொண்டிருக்கும், ஒன்றிய அரசு கொடுக்கும் குடைச்சல்கள் நிறைய....

மெட்ரோ ரயில் நிதி ஒதுக்குதல் ஓசூர் விமான நிலையம், அதுமட்டுமல்ல தேசிய பேரிடர்  தொகையாக 50000 கோடி கேட்டு இன்னும் ஒரு பைசா கூட கொடுக்காமல் ஜல்லி அடித்துக் கொண்டும், குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசினையும் அது கொடுக்கும் குடைச்சல்களையும் தாங்கிக் கொண்டு, அதே நேரத்தில்  மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பணிந்து போகாமல் நெஞ்சு நிமிர்த்தி நிற்பதற்கு காரணம் அந்த பிடிவாதம் தான்.

கட்டம் சரியில்லை, துண்டு சீட்டு, என்ற விமர்சனங்களை தவிடு பொடியாக்கி,

ம்மால......
Stalin is more dangerous then karunanidhi  என்று கதற வைக்கிறது...

வாழ்ந்து காட்டுதலை விட பழி தீர்த்தல் வேறென்ன இருக்கிறது...❤️

டிவியை பார்த்து துப்பாக்கி சூட்டினை அறிந்து கொண்டேன் என்று சொன்ன முதல்வர் ஆட்சி செய்த மாநிலத்தை....

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.... என்று கர்ஜித்து பதவியேற்ற போது தமிழகம் நிமிர்ந்ததை அனைவரும் அறிவர்.❤️

பிடிவாதக்காரரும்,
தமிழகத்தின் முதல்வருமான மு. க ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... பூரண நலத்துடன், மாநில சுயாட்சி காத்து எதிரிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட, எல்லாம் வல்ல இயற்கை உங்களுக்கு துணை நிற்கட்டும்  ❤️

நாங்களும் துணை நிற்போம் ❤️
தமிழ்நாடு தழைத்தோங்க திமுக வை ஆதரிப்போம்❤️

#Jackiesekar
#MKStalin | #DMK | #HBDMKStalin
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

4 months ago | [YT] | 94

Kadhaippom Vaa

இன்னும் எவ்வளவு பெரிய அவமானங்களை தாங்க போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை....

மற்றவர்களிடமாவது எதிர்த்துப் பேசிவிடலாம்.... ஆனால் எதிர்த்துப் பேச வாய்ப்பே இல்லாமல், உள்ளும் புறமும்,அகமும், உண்மையும் தெரிந்த ஒருவரிடம் வாய்சாவடால் விட நான் என்ன வடக்கு ஊதியா?

ஒரு பிரச்சனையை வேற லெவலுக்கு பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு பிரம்மாஸ்திரத்தை எடுத்து, பஜாகக் என்று விடும் போது, அதை ஜஸ்ட் லைக் தட் ஆக, இரண்டு விரல் உதட்டில் வைத்து, வெத்தல பாக்கு எச்சை பச்சக் என்று துப்புவது போல, லெப்ட் ஆண்டில், பிரம்மாஸ்திரத்தை ஹேண்டில் பண்ணினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

யோசித்துப் பாருங்கள்... நாக்கு மேலே ஒட்டிக்கொண்டு, கவுண்டர் வார்த்தை வராமல், சகலமும் நடுங்கி விடும் அல்லவா?
எனக்கும் அப்படி நடுங்கின கதையை தான் சொல்ல போறேன்...

இன்னும் சொல்லப்போனால் வடிவேல் ஒரு படத்துல, என் கட்சிக்காரன் அப்படி என்னடா பேசிட்டான்? அப்படின்னு பொலம்புவாரே அந்த மொமென்ட்தான்...

மனைவியின் அலுவலகத்தில் மராமத்து பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன... இங்கிலாந்தில் குளிர்காலம் முடிந்து, வெயில் காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் பணிகள் ஜருராக நடந்து கொண்டிருக்கின்றன...

வாரத்துக்கு இரண்டு நாட்கள் அலுவலகத்துக்கு வந்தால் போதும், மற்ற நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்தால் போதும் என்று அலுவலகத்தில் சொல்லி இருக்கிறார்கள்....
அடுத்த குளிர் காலம் தொடங்குவதற்குள் அலுவலகத்தை சீர் செய்து விட வேண்டும், அதனால் துரித கதியில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன....

அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்ய இடம் இல்லை என்பதால், ஷிப்ட் முறையில், ஆட்களைப் பிரித்து வாரத்துக்கு இரண்டு நாட்கள் வருவது போல schedule அமைத்திருக்கிறார்கள்.
எங்கள் வீட்டைப் பொறுத்தவரை,
யாழினி பள்ளிக்கும், மனைவி அலுவலகம் சென்றதுமே, வீடு ஜாக்கி சினிமாஸ், ஜாக்கி டிவி, கதைப்போம் வா சேனல் ஸ்டுடியோவாக, தியேட்டராக, நண்பர்களோடு அரட்டை அடிக்கும் இடமாக வீடு மாறிவிடும்,

அலுவலக பராமரிப்பு காரணமாக, மனைவி ஐந்து நாட்களும், வீட்டில் தான் இருக்க வேண்டிய சூழல்...

மனைவி சமையல் கட்டில், எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு, பொறியும் வேளையில் நான் , மனைவியை சீண்டும் விதமாக, இப்படி ஐந்து நாட்களும் வீட்டிலேயே இருந்தால்? என் காதலிகளை வீட்டுக்கு அழைத்து வந்து நான் எப்படி சந்திப்பது? என்று கேட்டேன்...

உடனே என் மனைவி,
வாரத்துக்கு ரெண்டு நாள்... நான் ஆபீஸ் போறேன் இல்ல,

ஆமாம்...

அந்த ரெண்டு நாளைக்கு, உன்னோட காதலிகளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து புடிங்கினா போதும்...
என்று சொல்லிவிட்டு, என்னை பார்க்காமலேயே, பிரித்து வைத்த காய்ந்த மிளகாயை, வானலியில் போட்டு வதக்க ,
மூக்கில் நெடியேறி நான் தும்ப ஆரம்பித்தேன்.

உடனே எனக்கு மைண்ட் பிளாக்கில்,
மனைவி வாயில் வெற்றிலை பாக்கு போட்டு,நன்றாக , குதப்பி இரண்டு விரல்களை உதட்டுக்கு நடுவில் வைத்து, பச்சக் என்று வெற்றிலை பாக்கு எச்சில் துப்ப, முகத்தில் தெரிந்த, வெற்றிலை பாக்கு எச்சில் சாரலை, இடது கையால் துடைத்துவிட்டு, அவசரமாக பாத்ரூமுக்கு சென்று என் முகத்தை கண்ணாடியில் பார்க்க ஆரம்பித்தேன்.

பிரியங்களுடன்....
மொக்கை வாங்கிய கதையை மீசையில் மண் ஒட்டாமல் எழுதும்,
ஜாக்கிசேகர்.

#Jackiesekar #lovers #love #loveforever #uklife #england #darlington #லண்டன் #london #funnymoments

4 months ago | [YT] | 19

Kadhaippom Vaa

வாழ்க்கையை 100 சதவிகிதம் சிஸ்ட்ட மேட்டிக்காக நான் அமைத்துக்கொண்டதே இல்லை… அப்படி அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர்களுக்கு இந்த இயற்கையும் சரி.. சமுகமும் சரி.. பெரியதாய் கிழித்து விடவில்லை.. அவ்வப்போது அபத்தங்களை வாழ்வில் சரிபாதியாக சேர்த்துக்கொள்வதும் உண்டு..

அபத்தம் என்பதற்கு பைத்தியக்காரதனம் என்று சொல்லலாமா?????

உதாரணத்துக்கு வீட்டுக்கு செல்ல சுத்து வழி என்று தெரிந்தும் … பிடித்த தெருவில் பயணிக்க அரை கிலோ மீட்டர் செவழிக்கிறேன்...

அந்த தெருவில் என்ன இருக்கும்..--?

ஒரு பரந்து விரிந்த அழகான மரம் இருக்கும்…

கொஞ்சம் தள்ளி முன் பக்கம் கார்டன் பூத்து குலுங்க ஏக்கத்தோடு பார்த்து மனதை தேற்றிக்கொள்வது போல அழகான வீடு இருக்கும்..

சல்லையாக போட்டு இருக்கும் டீ ஷர்ட் ஊடே உள்ளே போட்டு இருக்கும் பிரா கலர் தெரிய எப்போதாவது கண்ணில் தட்டுபடும். நாய் மேய்க்கும் பெண் என்று நிறைய அந்த சாலையில் இருக்கும்கள்

காதலிக்கும் பெண் இருக்கும் வீட்டு வழியே வேலையே இல்லாமல் சென்று, சென்று வருவது…

காதலி வேலை செய்த அலுவலகம் விடுமுறை தினத்தில் கூட அந்த வழியாக சென்று வருவது எல்லாம் பைத்தியக்காரதன லிஸ்ட்தான்.

இப்படி பைத்தியக்கார விஷயங்கள் நிறைய… சொல்லிக்கொண்டு போகலாம்..

நமக்கு நன்றாகவே தெரியும் அது பைத்தியக்கார செயல் என்று ஆனாலும் அதனை மாற்றிக்கொள்ள முடியாது… உதாரணத்துக்கு பென்ஸ் வாங்கி முன்னாடி பக்கம் எலுமிச்சையும் மிளகாயும் கட்டுவது போலத்தான்..

உங்கள் வாழ்க்கையிலும் அப்படி பைத்தியக்காரதனங்கள் நிறைய இருக்கலாம்.. சிலர் வெட்கம் காரணமாக வெளிப்படுத்திக்கொள்ள தயங்குவார்கள் எனக்கு அப்படி பட்ட விஷயமே இல்லை..

சமீபமாக ஒரு பெண்ணை ரொம்பவே பிடித்து இருக்கின்றது… அவள் ஆடாமல் அசையாமல் அங்கேதான் இருக்கின்றாள்… தினமும் பார்க்கிறேன்.. அவளின் சிரித்த முகம் அப்படி பிடித்து இருக்கின்றது…

அந்த பக்கம் மயிலை வாசிகள் தினமும் கடக்கலாம்.. ஆனால் தினமும் அவளுக்கா 45 வினாடிகள் நான் செலவு செய்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது... அவளுக்காக அவள் இருக்கும் இடத்தின் எதிர்புரத்தில் இருக்கு டீ கடையில் தினமும் 20 ரூபாய்க்கு காலை மாலைல டீ குடிக்க வேண்டி இருக்கின்றது.. மாதம் 600 ரூபாய் என்று மிடில் கிளாஸ் மனசாட்சி கணக்கு போடுகின்றது..

டீ குடிக்க மூட் இருந்தால் மாதவபெருமாள் கோவிலில் இருந்து டீ குடிக்க மயிலை குளக்கரைக்கு செல்கின்றேன். அவளை குணா கமல் போல பக்கி போல பார்த்து … பார்த்த விழி பார்த்த படி என்று முகம் கொள்ளா சந்தோஷம் கொள்வதில்லை..

ஆனாலும் ஒரு சினேக புன்னைகையோடு அவளை பார்க்கிறேன்.

ஆனாலும் அந்த சிரிப்பை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்கின்றது மனது…..

பைத்தியக்காரதனம் என்றாலும் சில பைத்தியக்கார மற்றும் அபத்த விஷயங்கள் என்று தெரிந்தாலும் நான் தெரிந்தே அனுமதிக்கிறேன்.. அந்த பிரமாண்டமும் சிரிப்பும் அவள் உடையும் , விரல்களும் நகங்களும் என அம்சமாய் இருக்கின்றாள்…

எதெச்சையாக டீ குடிக்க போய் இப்போது பழக்கமாகவே ஆகி விட்டது…

சென்னை மயிலை குமரன் சில்க்ஸ் வாசலில் பெரிய ஹோர்டிங்கில் சிரித்தபடி இருக்கும் புடவைகட்டிய மாடல் பெண்தான்… கண்ணு எல்லாம் சேர்ந்து சிரிக்குதுன்னு சொல்வாங்களே..??? அப்படி இல்லை..??

ஜாக்கி அந்த பொண்ணு பேரு… என்ன தெரியுமா??

வேண்டாம்…

தெரிஞ்சி என்ன பண்ண போறேன்..---????

என்னை பொருத்தவரை பார்த்தீபன் வீவேக்கிட்ட சொல்றது போல…

சார் ரம்பா சார்…

அவ்வளவுதான் மேட்டர்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
08/02/2018

எட்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் எழுதியது ❤️

5 months ago | [YT] | 13

Kadhaippom Vaa

அண்ணாவின் நினைவு நாள்...
1967 அண்ணா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ததிலிருந்து தமிழ்நாட்டின் வரலாறு மாற்றம் அடைகிறது...

இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் அதிலிருந்து நவீன கால தமிழ்நாட்டின் வரலாறு தொடங்குகிறது...❤️

வட இந்திய ஊடகவியலாளர் சந்தீப் தேசாய் ஆச்சரியப்படுகிறார்.அது எப்படி? தென் மாநிலங்களில் முக்கியமாக தமிழ்நாட்டில், 42 சதவீத பெண்கள் பொருளாதார உயர்வுக்கு காரணமாக இருக்கிறார்கள்...?

ஆனால்
இன்னும் ராஜஸ்தானில் கணவன் எதிரே பெண்கள் உட்கார கூடாது முக்காடு போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்... பத்தாவதுக்கு மேல் படிக்கக் கூடாது... ஆனால் தமிழ்நாட்டைப் பாருங்கள்... இதையெல்லாம் கடந்து வர காரணமானவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர்.

ஹிந்தி எதிர்ப்புக்கான மொழிப்போரில் அறிஞர் அண்ணா அவர்கள் மாணவர்களை போராட்டத்தை கைவிட சொன்ன போது, மாணவர்கள் வெகுண்டு எழுந்தார்கள் போராட்டத்தை கைவிட மறுத்தார்கள்...ஆனால் அண்ணா என்ன சொன்னார்...
யாருக்காக போராடுகிறோமோ அவர்களே மரித்து போனால் அந்தப் போராட்டத்தில் வெற்றி அடைந்து என்ன பொருள்?என்று சொன்னார்....
அதனாலே அண்ணா தனித்தமிழ்நாடு போராட்டத்தை கைவிட்டார்...

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது... சுதந்திரம் பெற்றதும் ஐதராபாத் நிஜாம் தனி நாடாக ஹைதராபாத் இருக்க வேண்டும் என்று நினைத்தார்...
ஆனால் operation bolo, என்ற ராணுவ நடவடிக்கை மூலம், ஐந்தே நாட்களில் ஐதராபாத் நிஜாம் சரணடைந்தார்...
அரசு சொன்ன கணக்குப்படி 40 ஆயிரம் பேர் இறந்ததாக கணக்கு சொல்கிறது ஆனால் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் , அந்த ராணுவ நடவடிக்கையின் மூலம் இறந்து போனார்கள்....
அந்த நிகழ்வை அண்ணா மறந்து இருக்க மாட்டார்... மொழிப்போரில் நானூருக்கும் மேற்பட்டவர்கள்....

அண்ணா... தனி தமிழ்நாடு கோரிக்கையை மாநில சுயாட்சியாக மாற்றி
இங்கிருக்கும் அதிகாரங்களை வைத்துக்கொண்டு, என்னவெல்லாம் செய்யலாம்? தமிழ்நாட்டை எப்படி எல்லாம் முன்னேற்றலாம் என்ற அண்ணாவின் கனவு தான் இன்றைய நவீன கால தமிழ்நாடு...

ஆனால் அன்று அண்ணா உணர்ச்சிவசப்பட்டு தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிடாமல் இருந்திருந்தால், இன்று இந்திய தமிழர்களும் புலம்பெயர்ந்து இருப்பார்கள்...
நான் அண்ணாவை நினைவு கூற நான் அண்ணாவை கொண்டாட நான் அண்ணாவின் புகழ் பாட இந்த காரணங்களை போதுமானது...

ஒரு தலைவன் என்பவன் சிந்திக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும், சூழ்நிலை உணர்ந்து முடிவெடுக்க, அனுபவமும் கற்ற கல்வியும் அவனுக்கு பேருதவியாக இருக்க வேண்டும்...

அண்ணா,
ஆட்சிக் கட்டில் இருந்த இரண்டு வருடங்களில் அண்ணா செய்த சாதனையை இன்றுவரை மாற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கதறிக் கொண்டிருக்கிறார்கள்...
50 வருடம் கழித்தும் இன்னமும் அண்ணாதுரை தான் ஆண்டு கொண்டு இருக்கிறார் ❤️
அண்ணா தான் ஆள்கிறார்!

- ஜாக்கிசேகர்

CNA is our DNA..

#அண்ணா #Anna #rememberinganna #perarignaranna
#அறிஞர்_அண்ணா
#RememberingAnna

5 months ago | [YT] | 15

Kadhaippom Vaa

ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்"
வழக்கமான அதே ஃபார்முலா கொண்ட திரைப்படம் தான்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக
ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்" (2022) வெளியானது...

இந்த படம் #ஜுராசிக்பார்க் திரைப்படங்களின் வரிசையில் ஏழாவது பாகமாகும்,
இது ஒரு standalone sequel ஆக உருவாக்கியிருக்கிறார்கள்.

பூமியின் சுற்றுச்சூழல் டைனோசர்களுக்கு  வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை...மேலும் உயிர் பிழைத்த டைனோசர்கள் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன.


இந்த பகுதிகளில் வாழும் மூன்று மிகப்பெரிய டைனோசர்களின் மரபணுவை எடுப்பதற்காக ஒரு குழு பயணிக்கிறது அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது தான் கதை

ஸ்கார்லெட் ஜோஹன்சன்  ஜோரா பென்னட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்... எனக்கான ஒரே ஆறுதல் அவர் தான்

மூன்று மிகப்பெரிய டைனோசர்கள்... கடலில் வாழும் டைனோசரஸ், நிலத்தில் வாழும் டைனோசரஸ், காற்றில் பறக்கும் டைனோசரஸ் ஆகிய மூன்றின் . மரபணுக்களை எடுத்து மனிதர்களுக்கு உயிர்காக்கும் மருந்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்
அந்த மரபணு எடுக்க முயற்சிக்கும் சாகச பயணம் தான் இந்த திரைப்படம்

இயக்குனர் காரெத் எட்வர்ட்ஸ், இந்த திரைப்படத்தை ஒரு வித்தியாசமான கதை களத்தில் இயக்கியிருக்கிறார்...

1993 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தைப் போல  இருக்க வேண்டும் என்பதற்காக CGI-யை குறைத்து, ஆனிமேட்ரானிக்ஸ் மற்றும் 35mm பிலிமில் படமாக்கப்பட்டு,  உண்மையான டைனோசரை பார்ப்பது போன்று ஒரு ஃபீலை உருவாக்க முயற்சித்து இருக்கிறார்கள்.

இயக்குனர் காரத்
எட்வாட்ஸ் காட்ஜில்லா படங்களை இயக்கியவர்...
ஸ்டீல் பார்க் வழக்கம் போல எக்சுக்குட்டிவ் புரொடியூசர் ஆக இருக்கிறார்.

பத்து வருடத்திற்கு ஒரு பாகம் என்று ஏதாவது ஒரு ஓலா கதையை விட்டாலும் கூட, டைனோசரஸ் ரசிக்க உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெரியவர்கள் ஒரு சில இடங்களில் பயப்படத்தான் செய்வார்கள் குழந்தைகள் இன்னும் ரசிப்பார்கள்
Video link
https://youtu.be/DOZOF40fIwI

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

#jurassicworldrebirthreview
#JurrasicWorldRebirth #darlington #VueCinemas #Jackiesekarreview
#jackiecinemasreview

1 year ago | [YT] | 12

Kadhaippom Vaa

ரகுமான் ரொம்ப கூச்ச சுபாவத்துக்கு சொந்தக்காரர்...
எனக்கு தெரிஞ்சு ஸ்டேஜ் ஷோக்கலில் கடந்த மூன்று வருடங்களாகத்தான் ரொம்ப ஃப்ரீயாக பேசுகிறார்...

இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலம் கலந்து தான் நிறைய பேசுவார் தற்போது தமிழில் அதிகம் பேசுகிறார்...

திவ்யதர்ஷினியோடு ரஹ்மான் பேசியது... ரொம்ப கேஷுவல் டாக்.... அதில் பெரிய பாய் என்று சொன்னதும் பிடிக்கவில்லை என்று சொன்னதும் கட் என்று டிடி சொல்ல அது என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன் என்று ரொம்ப கேஷுவலான டாக்... அதுலயும் கொஞ்சம் மேலே போய்... டிடி இடம் மூஞ்ச பாரு என்று சொல்லுவார்... ரகுமான் அவ்வளவு கேஷுவலாக பேசும் ஆள் இல்லை...

அதற்குள் எல்லோரும் அவர் மீது கல் எரிந்து கொண்டிருக்கிறார்கள்... வீடியோவை முழுதும் பார்க்காமல் முஸ்லிம் சகோதரர்களும் அவர் மீது கல் எரிந்து கொண்டிருக்கிறார்கள்..

அவர் இப்போதுதான் அதையெல்லாம் உடைத்துக் கொண்டு பேசுகிறார்... அந்த இன்டர்வியூவில் கூட தனது முன்னாள் மனைவிக்கு நன்றி தெரிவித்து இருப்பார்...

ஆனால் ஒன்று... அடுத்த பாகத்தில் இளையராஜாவுக்கான ஒரு பதில் இருக்கிறது 🤣 அதில் உதாரணத்துக்கு James Cameron எல்லாம் அழைத்து வருகிறார் ...

நிச்சயம் மீண்டும் இசை புயலை கூண்டில் ஏற்றுவார்கள் 🤣

- ஜாக்கிசேகர்

Video link

https://youtu.be/TGvywH2blC8

#arrahman #dd #interview #ilayaraja #tamilmusic #arrahmancontroversy

1 year ago | [YT] | 11

Kadhaippom Vaa

Good bad ugly... படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

முதல் 30 நிமிடம் பொறுமையை சோதிப்பது உண்மைதான்...

ஆனால் அதன் பின் மாஸ் காட்டுகிறது... முக்கியமாக தொட்டு தொட்டு பேசும் சுல்தானா வேற லெவல் ..😊

இந்த படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்களை பார்த்தேன்... நான் எப்பவுமே சொல்றது தான்... ஒரு படத்தை நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க..


கல்யாணம் பண்ண எல்லாருக்கும் முதலிரவு நடக்கும்... ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி அனுபவம் கொடுக்காது... அதுபோல தான் சினிமாவும்...
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும்... ❤️

எல்லா படத்தையும் ரெபர் பண்றது... நம் வாழ்க்கையையே ரீகால் பண்ணது மாதிரி இருந்துச்சு..
படம் உங்களுக்கு புடிக்கலாம் படிக்காம போலாம்... அத பத்தி எனக்கு கவலை இல்லை...😄

எனக்கு படம் புடிச்சிருக்கு..
ஒரு வேலை நீங்கள் பார்த்தீங்கன்னா உங்களுக்கு இந்த படம் பிடிக்கலாம்...

-  ஜாக்கிசேகர்

Video link
https://youtu.be/7Ds28Gic9ZQ


#GoodBadUgly #goodbaduglyreview #AjithKumar #ak

1 year ago | [YT] | 17

Kadhaippom Vaa

நிறைய விழாக்களில் அண்ணன் சிவசங்கர் அவர்களை பார்த்து இருக்கிறேன்... ஆனால் மிக நெருக்கமாக பார்த்தது தம்பி பாலா வீட்டு குடும்ப நிகழ்வுகளில்... ஆனால் அவரிடத்தில் பேசியதில்லை... அந்த அளவுக்கு பரபரப்பான மனிதர்.

ஏதோ ஒரு மிஸ் கம்யூனிகேஷனில்... அண்ணன் சிவசங்கர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை...

ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் எனது பேஸ்புக் பதிவில் வந்து கமெண்ட் போடுவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை...

அவர் நினைத்திருந்தால்... அவர் உதவியாளர் மூலமாக என்னை தொடர்பு கொண்டு இருக்கலாம்... ஆனால் பொதுவெளியில் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் அண்ணே... என்று உரிமையாக சொன்னதெல்லாம் பெரிய விஷயம்... அது சிவசங்கர் அண்ணன் அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது..❤️

அவர் கமெண்ட்க்கு கீழே அண்ணன் அப்துல்லா வந்து சிவசங்கர் அண்ணே... ஜாக்கி அண்ணா என்கிட்ட சொன்னாரு ஆனா நான் தான் வேலைப்பளுவில் மறந்துட்டேன் என்று சொன்னது.. அப்துல்லா அண்ணா உடைய பெருந்தன்மை ❤️

சென்னை மயிலாப்பூரில் நாலு வருஷம்... ஆழ்வார்பேட்டையில் ஆறு வருஷம்...

ஏற்றும் இறக்கம் கொண்ட அரசியலில்.. அப்துல்லா அண்ணனை ஒருமுறை லாயிட்ஸ் சாலையில்... இரவு 11 மணி வாக்கில் அவரைப் பார்த்தேன்... ரொம்ப டென்ஷனாக இருந்தார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விடைபெற்றோம்... அதன் பிறகு அவர் எம்பி ஆனார்... எம்பி ஆனதற்கு பிறகு அவர் நான் சந்தித்ததே இல்லை... கூச்ச சுபாவம் ஒன்று... இன்னொன்று அவர் நம்ம எப்படி ட்ரீட் பண்ணுவார் என்ற தயக்கமும் ஒரு காரணம்.... கடைசியாக அவரை இங்கிலாந்து வருவதற்கு முன்பாக லீலா பேலஸ் ஹோட்டலில் ஒரு பங்க்ஷனில் சந்தித்தேன்.. அவ்வளவுதான்...

அதுமட்டுமல்ல..
ஆறு வருடம் ஆழ்வார்பேட்டையில் இருந்திருக்கிறேன்... அப்துல்லா அண்ணன் வீடு எங்கே இருக்கிறது என்று இன்று வரை எனக்கு தெரியாது...

யுகே வந்து என் வீட்டுக்கு அப்து அண்ணன் வந்தபோதுதான்... அப்துல் அண்ணன் என்னை ஒவ்வொரு செயலிலும் ரசித்ததை மனைவி சொன்னார்... என் தயக்கத்தை நானே நொந்து கொண்டேன்..

அண்ணன் சிவசங்கர் அவர்களை தொடர்பு கொண்டவுடன்... உடனே அவர் தொடர்பு கொண்டது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...

அண்ணன் சிவசங்கர் அவர்களை இரண்டு விஷயங்களுக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்... ஒன்று ஒரு பள்ளி சிறுமியை வைத்து நூலகம் திறந்தது... மற்றொன்று பேருந்து லாவகமாக ஓட்டிய ஒரு வீடியோ பதிவு... எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம்... சட்டென களத்தில் இறங்கி தீர்வு காண்பது.... பண்டிகை காலங்களில் கோயம்பேடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை குட்டி போட்ட பூனை போல சுற்றி வந்து மக்கள் பணி செய்வது என்று பம்பரமாக சுழல்வது எனக்கு பிடிக்கும்...

ஒரு தமிழகத்தின் எம்பி.... ஒரு தமிழகத்தின் அமைச்சர்... இருவருமே என்னைப் போன்ற ஒரு கடை கோடி திமுக தொண்டனிடம் காட்டும் பரிவு மெய்சிலிர்க்க வைத்தது...

அது அறிஞர் அண்ணாவிடமும் கலைஞரிடம் கற்றுக் கொண்ட பாடம்.... மக்களோடு இரு,மக்களோடு பழகு,மக்களுக்கு தேவையானதை செய்... இது திமுகவில் மட்டுமே சாத்தியம்...

ஏதோ உட்கட்சி தகராறு தலைவர் கலைஞரிடம் பஞ்சாயத்து வந்திருக்கிறது.. ஏதோ கோபத்தில் அந்தத் தொண்டனை திட்டி விடுகிறார்... அவனும் கோபித்துக் கொண்டு செல்ல... தலைவர் கலைஞருக்கு மனசு கேட்காமல் கொஞ்ச நேரத்தில் ஆட்களை அனுப்பி அந்த தொண்டனை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்... அழைத்து வந்த தொண்டனின் பெயரை சொல்லி... நான் அப்படி சொல்லி இருக்க கூடாது... என்னை மன்னித்துவிடு என்று கலைஞர் சொல்ல.... தலைவா நீ எதுக்கு மன்னிப்பு கேக்கணும் என்று அவன் அழ... அது ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்வான விஷயம்... அது திமுகவில் மட்டுமே சாத்தியம்... இது சாதாரண தொண்டனுக்கு நடந்த கதை

டி ஆர் பாலுவுக்கும் கலைஞருக்கும் ஒரு விவாதம்... டி ஆர் பாலு சொன்னது தான் சரி என்றாலும் கலைஞர்... கோபத்தில் நான் கட்சியின் தலைவனா நீ தலைவனா நான் சொல்றது தான் சரி என்று திட்டி அனுப்பி விடுகிறார்... குளிக்க சென்றவருக்கு டி ஆர் பாலுவின் நியாயம் வாதம் இரண்டும் புரிகிறது... துரைமுருகன் சொல்லி டி. ஆர். பாலுவை அழைத்து வரச் சொல்கிறார்...

நேரில் வந்து டி ஆர் பாலுவிடம்..
பாலு நீ சொன்னது தான் சரி... நான் சொன்னது தப்பு... என்ன மன்னிச்சிடு.... என்று கலைஞர் சொல்கிறார்....

டி ஆர் பாலு அவர்களின் புத்தக விழாவில் துரைமுருகன் அந்த பேச்சை குறிப்பிட்டு சொல்ல... மினிஸ்டர் ஆக பல தளங்களில் பயணித்த அந்த 60 வயது மதிக்கத்தக்க மனிதன் சிறு பிள்ளை போல கர்சிப் வைத்துக் கொண்டு அழுதது கண் முன் நிற்கிறது....

இதுதான் திமுக... சாதாரண தொண்டனுக்கும் அமைச்சருக்கும் ஒரே விதமான ட்ரீட்மெண்ட் தான்... தப்புன்னா தப்பு தான்... தலைவன் தொண்டன் என்ற பேச்செல்லாம் இங்கே இல்லை... சுயமரியாதையே முக்கியம்...

அதனால இந்த இயக்கம்... பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் உதயநிதி என்று கொள்கை பிடிப்புடன் பயணப்பட்டுக் கொண்டே வருகிறது...

அண்ணன் சிவசங்கர்... அவர்களுடன் நான் பேசியதில்லை பழகியதில்லை .. வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி அடுத்த நொடி அவர் போனில் என்னுடன் பேச ஆரம்பித்தார்... இந்த எளிமையே திமுகவின் பலம் ❤️

எளிமையின் உருவாய் இயங்கும்
அண்ணன் சிவசங்கர் அவர்களுக்கு... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... இன்னும் பல உயரங்களை தொட்டு மக்கள் சேவை தொடர்ந்து செய்திட எல்லாம் வல்ல இயற்கைத் துணை நிற்கட்டும் ❤️

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
23-03-2025
S. S. Sivasankar
#MinisterSivasankar
#HBD_SSS_ANNA
#HBD_SSS #MinisterSivasankar #மார்ச்23

1 year ago (edited) | [YT] | 46