This channel was hosted by me a fisherman from Rameswaram, Tamil Nadu. I created this channel to showcase the daily life of a fisherman man with live footage. My primary goal is for you to experience our daily life as you were there with us. I love fishing more than anything. I have been fishing since my childhood and now my primary job is also fishing.

" கடலே துணையாய்! கடலே கதியாய்!"

கடலில் வலைபோட்டு வாழ்விற்கு விசைதேடும் மீனவன் நான். பாம்பன் பாலம் இணைக்கும் அதிசய தீவாம் இராமேஸ்வரம் எனது ஊர். எனது சிறு வயது முதலே மீன் பிடித்தல் மீது அதீத ஆர்வம் எனக்கு. பள்ளிக்கு செல்லாமல் கடலில் மீன் பிடித்த காலமும் உண்டு. அன்று கடல் மேல் நான் கொண்ட காதலுக்கு இன்றளவும் கப்பம் கட்டுகிறது கடல் , “மீனாய் எனக்கு!”.மீன்பிடித்தல் எனது வாழ்வாதாரத்தின் முதன்மை தொழில் ஆகும். மீன்பிடித்தலை மையமாக கொண்டே என் வாழ்க்கை சுழல்கிறது. ஒரு மீனவனின் தினசரி வாழ்க்கையையும் அவனது வாழ்க்கைமுறையையும் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதே இந்த வளைஒளி பக்கத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்…