Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan-யூட்யூப் சேனலுக்கு வரவேற்கிறோம்!
இந்த சேனல் இஸ்லாமிய உண்மையான அறிவை தமிழில் பகிர்ந்து, குர்ஆன் மற்றும் ஹதீஸின் போதனைகளை விளக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. நம்முடைய நம்பிக்கையை வலுப்படுத்த, நபி (ஸல்) அவர்கள் கூறிய வழிகாட்டல்களை வாழ்க்கையில் செயல்படுத்த உதவுவது நம்முடைய நோக்கம்.
🔹 இந்த சேனலில் நீங்கள் காணப் போவது:
✅ தமிழ் இஸ்லாமிய பயான் (Islamic Tamil Bayan)
✅ குர்ஆன் விளக்கம் (Quran Tafseer Tamil)
✅ நபி (ஸல்) வாழ்க்கை பாடங்கள்
✅ இஸ்லாமிய வாழ்க்கை வழிகாட்டல்
✅ நோன்பு, தவக்குல், சகிப்பு சக்தி பற்றிய விளக்கங்கள்
✅ இன்றைய வாழ்க்கையில் இஸ்லாத்தின் தீர்வுகள்
📌 அல்லாஹ்வின் (SWT) வழிகாட்டுதலுடன் வாழ்பவர்களாக நாம் மாறுவோமாக! இந்த பயணத்தில் நம்முடன் இணைந்து பயனடைய சந்தாதராகுங்கள்!
CONTACT: hazrathkajamohideen@gmail.com
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
இனாம் குளத்தூர் ஆயிஷா பள்ளிவாசல் ரயில்வே கேட் அருகில்
#qiyamullayil #tholugai #namaz #inamkulathur #trichy
location link👇👇👇
maps.app.goo.gl/93gTQunc7mo9svfT8
4 months ago | [YT] | 4
View 0 replies
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
🌙 அஸ்ஸலாமு அலைக்கும் வஹ்ரமதுல்லாஹ்!
தாருல் உலூம் மதரஸதுர் ரிழ்வானின் ஏற்பாட்டில், ஹிஃப்ழு மற்றும் மக்தப் பிரிவுகளுக்கான 2025ஆம் ஆண்டின் அரையாண்டுத்தேர்வு இன்று 27-09-2025 நடைபெற்றது.
🕘 ஹிஃப்ழு பிரிவு: காலை 9:00 – 12:00
🕑 மக்தப் பிரிவு: மதியம் 2:00 – 4:00
மாணவர்கள் நேரத்திற்கு முன்பாக வந்தனர், பாடங்களில் காட்டிய முயற்சி மற்றும் ஒழுக்கம் பாராட்டதக்கது.
தேர்வு ஒழுங்காகவும் அமைதியாகவும் நடைபெற்றமைக்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு நன்றிகள் 🌟
🤲 அல்லாஹ் மாணவர்களுக்கு தங்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அருள்வானாக!
வஸ்ஸலாமு அலைக்கும் வஹ்ரமதுல்லாஹி வபரக்காத்துஹூ!
9 months ago | [YT] | 5
View 0 replies
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
✨ மீலாதுவிழா & மவ்லிதின் உண்மையான நோக்கம்! ✨
மீலாதுவிழாவும், மவ்லிதும்
இவ்விரண்டின் நோக்கமே பெருமானார் (ஸல்) அவர்களது பிறப்பு, இறப்பு மற்றும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களது சாதனைகள், குண இயல்புகள் முதலான அருளுக்குரிய அண்ணலாரின் தோற்றம் குறித்து சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாகும்.
அது மட்டுமல்ல, நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள், வாழ்ந்து வாழ்ந்தார்கள், மறைந்தார்கள் எனும் பேர்து நபி (ஸல்) அவர்கள் இறைவனுமல்ல, இறைகுமாரருமல்ல என்ற ஏகத்துவப் பிரகடனத்தை அகிலம் முழுவதும் பறைசாற்றுவதும் மீலாது விழாவின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
இதனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது:
“நபியே! நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் அருட்கொடையினாலும் அவனது கிருபையினாலும் இவை யாவும் கிடைத்துள்ளன. எனவே இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அவர்கள் (இங்கு) திரட்டி வைத்திருக்கின்ற செல்வத்தைவிடவும் இது மேலானதாகும்.”
(அல்குர்ஆன் 10:58)
இங்கு, 'அருள்' என்று நபி (ஸல்) அவர்களையே அல்குர்ஆன் கூறுகிறது.
ஸய்யிதுனா இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஃபள்லுல்லாஹ் என்பது (மார்க்க) ஞானமாகும். அல்லாஹ்வின் ரஹ்மத் முஹம்மது (ஸல்) அவர்களேயாவர்.”
(நூல்: துர்ருல் மன்ஃதூர் லிஸ்ஸுயூத்தி 2:308)
மேலும், “நான் அல்லாஹ்வின் ரஹ்மத் ஆவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
(நூல்: ஹாகிம் 1:100)
“நபியே, நாம் உங்களை அகிலத்தாருக்கு ரஹ்மத் – அருட்கொடையாகவே அனுப்பியிருக்கிறோம்.”
(அல்குர்ஆன் 21:107)
மேலும், அண்ணலாரை நபியாக அல்லாஹ் அனுப்பியது முஃமின்களுக்கு அல்லாஹ் செய்த பேருபகாரம் என்று குர்ஆன் கூறுகிறது:
“நபி (ஸல்) அவர்களை அகிலத்தாருக்கு நபியாக அனுப்பி முஃமின்களின் மீது அல்லாஹ் பேருதவி செய்திருக்கிறான்.”
(அல்குர்ஆன் 3:164)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ்வின் (அருட்கொடைகள் நிகழ்வுற்ற) நாட்களை நினைவூட்டுவீராக! (என்று நாம் ஏவினோம்).”
(அல்குர்ஆன் 14:5)
பெருமானாரின் பிறந்த தினம், குர்ஆன் அருளப்பட்ட நாள், மாநபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்ற நாள் – இவ்வாறான நாட்கள் யாவும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிகழ்வுற்ற நாட்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஹஜ்ஜின் பிரதான வணக்கங்களான ஸஈ செய்வதாயினும், கல் எறிவதாயினும், குர்பானி கொடுப்பதாயினும் இவ்வாறான யாவும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிகழ்வுற்ற நாட்களை நினைவூட்டுவதாகும்.
முஹர்ரம் பத்தாம் நாள் கொடுங்கோலன் ஃபிர்அவ்னும் அவனது சமூகமும் அழிக்கப்பட்டு, மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமூகத்தினருக்கும் வெற்றி கிடைத்தது பற்றி மதீனத்து யூதர்கள் நோன்பு நோற்றவர்களாக அந்நாளைக் கொண்டாடினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அதனை அங்கீகரித்ததுடன், தாமும் நோன்பு நோற்கும்படி பணித்தார்கள்.
(நூல்: புகாரீ, முஸ்லிம்)
மேலும், ஒவ்வொரு திங்கள் கிழமையும் நோன்பு நோற்பதுடன் தமது சமூகத்தவர்களுக்கும் நோன்பு நோற்பதனை சுன்னத்தாக்கினார்கள்.
அதற்குரிய காரணத்தினை: “நான் பிறந்ததும், என்மீது குர்ஆன் இறக்கி அருளப்பட்டது திங்கள் கிழமையாகும்” என்று கூறியவண்ணம் அகமகிழ்ந்தார்கள்.
(நூல்: முஸ்லிம் 2738, அபூதாவூத் 2425, திர்மிதீ 749, நஸஈ 2382, இப்னுமாஜா 1713, அஹ்மத் 5:296, இப்னு குஸைமா 2087, இப்னு ஹிப்பான் 3642, பைஹகீ 4:286, இப்னு அபீஷைபா 3:78, பஙவீ 1789, துஹ்பத்துல் அஷ்ராப் ஃபில் குப்ரா 9:12118)
சய்யிதினா கஅப் இப்னு ஸுஹைர் (ரளி) அவர்கள் ஃபத்ஹு மக்கா (மக்கா வெற்றி) யின்போது கஅபாவில் வைத்து மாநபி (ஸல்) அவர்களிடம் பிராயச்சித்தம் தேடிவந்த நேரத்தில் மாநபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்துரைத்த கவிதைத் தொகுப்பினை யாவரும் அறிந்ததே.
அதில்: “உருவப்பட்ட வாட்களிலேயே ஒளிமயமான இந்திய நாட்டின் வாளைப்போன்று தாங்களாவீர்கள்” என்ற வரியினை கஅப் இப்னு ஸுபைர் (ரளி) அவர்கள் பாடியபோது நபி (ஸல்) அவர்கள் தமது மேனியிலிருந்த ஆடையினை அவருக்குப் போர்த்தினார்கள்.
இந்த ஆடையினைத் தமக்குப் பத்தாயிரம் வெள்ளிக் காசுகளுக்கு விற்கும்படி முஆவியா (ரளி) வேண்டியபோது கஅப் (ரளி) அவர்கள் விற்க மறுத்துவிட்டார்கள். கஅப் (ரளி) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களது குடும்பத்தாரிடமிருந்து அதனை இருபதாயிரம் வெள்ளிக் காசுகளுக்கு முஆவியா (ரளி) அவர்கள் வாங்கிக்கொண்டார்கள்.
அதுமட்டுமின்றி, அந்த முபாரக்கான மேலாடையை முஆவியா (ரளி) அவர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பெருநாள் குத்பாவின்போது அணிந்து மகிழ்வார்கள்.
பள்ளிவாசலில் மாநபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்துரைத்துப் பாடுதல், அதனைக் கூடியிருந்து கேட்டல், அதற்காக வெகுமதி வழங்குதல் ஆகியவை நபி (ஸல்) அவர்களின் (சுன்னத்தான) செயல்முறையாகும்.
(நூல்: ஹிதாவுல் அல்பாப் பக் 185)
மேலும், வெள்ளிக்கிழமையின் சிறப்புக்குரிய காரணங்களைக் கூறும்போது அன்று ஆதம் நபி (அலை) அவர்கள் பிறந்த நாள் என்னும் காரணத்தினை காருண்ய நபி (ஸல்) அவர்கள் சொல்லிக் காட்டினார்கள்.
அல்குர்ஆன், ஈஸா (அலை) அவர்களது கூற்றினை சூரத்துல் மர்யம் 33 ஆவது வசனத்தில் நமக்கு நினைவூட்டுகிறது:
“நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், நான் உயிர் பெற்றெழும் நாளிலும் என்மீது சாந்தி நிலை பெற்றிருக்கும்.”
(அல்குர்ஆன் 19:33)
இதேபோன்று ஸய்யிதுனா யஹ்யா (அலை) அவர்களுக்கும் அவர்களது பிறந்த மற்றும் இறந்த நாளைக் குறிப்பிட்டு வாழ்த்துக் கூறப்படுகிறது.
(அல்குர்ஆன் 19:15)
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்றபோது பைத்துல்லஹ்ம் (பெத்லஹேம்) இல் இறங்கி இரண்டு ரகஅத் தொழுதார்கள்.
ஸய்யிதுனா ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அதனைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம்: “நீங்கள் இறங்கித் தொழுத இடம் ஈஸா (அலை) அவர்கள் பிறந்த இடமாகும்” என்று கூறினார்கள்.
(நூல்: பைஹகீ ஃபித்தலாயில் 2:366, நஸஈ 1:222, ஹைதமீ ஃபீ மஜ்மஇஸ்ஸவாயித் 1:47, ஃபத்ஹுல்பாரீ 7:199)
அல்லாஹ் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடையான நபி (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது எப்படித் தவறாகும்? 🤔
💬 உங்கள் கருத்தை கமெண்டில் பகிருங்கள்!
10 months ago | [YT] | 3
View 0 replies
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
✨ மவ்லிதின் உண்மை – ஆதாரங்களோடு! ✨
நபி (ஸல்) அவர்களின் பிறப்பை கண்ணியப்படுத்துவது முஃமின்களின் ஈமான் வலுப்படச் செய்யும், அல்லாஹ்வின் அருளை வரவழைக்கும், சன்மார்க்க அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட நன்மைக்குரிய செயல் என்பதற்கு உறுதியான சான்றுகள்! 📚
👉 கீழே உள்ள ஆதாரங்களையும் அறிஞர்களின் கூற்றுகளையும் கவனமாகப் படிக்கவும்:
பள்ளிவாசலில் மவ்லிது
உமர் (ரளி) அவர்களின் ஃகிலாஃபத்து காலத்தில் மஸ்ஜிது நபவீயில் வைத்து பெருமானாரின் புகழை, ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரளி) அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த உமர் (ரளி) அவர்கள் சினத்துடன் ஹஸ்ஸான் அவர்களைப் பார்த்தார்கள்.
உடனே ஹஸ்ஸான் அவர்கள் அபூஹுரைராவைப் பார்த்து:
"நான் நபியவர்களின் ஜீவிய காலத்தில் அவர்களைப் புகழ்ந்து மஸ்ஜிதுந் நபவீயில் பாடியபோது ஜிப்ரயீல் (அலை) அவர்களைக் கொண்டு அல்லாஹ் என்னை வலுப்படுத்துவானாக என்று கூறவில்லையா?" என்றார்கள்.
அபூஹுரைரா (ரளி) அவர்களும் "ஆம்" என்று பதிலுரைத்தார்கள்.
(நூல்: புகாரீ 4196, முஸ்லிம் 4644)
பெருமானார் (ஸல்) அவர்களது பிறப்பின் நற்செய்தியினை அபூலஹபிடம் அவரது அடிமைப் பெண் துவைபா கூறிய போது அதனைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற அபூலஹப் அவரது ஆட்காட்டி விரலை அசைத்து அடிமையை உரிமைவிட்டார்.
அதனால் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வேதனை வழங்கப்படுவதுடன், அந்த விரலிலிருந்து அவர் குடிப்பதற்காக பாலும் சுரக்கிறது.
(நூல்: புகாரீ 3:363, ஃபத்ஹுல் பாரீ 1:124, சுஹைலீ ஃபிர்ரவ்ளில் அன்ஃப் 5:192, இப்னு கதீர் பிதாயா வந்நிஹாயா 272, இப்னு கதீர் ஸீரத்துந் நபவீ 1:124)
இந்த ஹதீதினை முஸ்னத் அப்துர்ரஸ்ஸாக் 7:478, பஙவீ ஃபிக்ஹுஸ் ஸுன்னா 9:76, இமாம் பைஹகீ, இப்னு ஹிஷாம், சுஹைலீ போன்ற வரலாற்றுக் கலை அறிஞர்களும் அவரவர் நூல்களில் பதியவைத்துள்ளனர்.
காஃபிர்களைப் பற்றி அல்லாஹுதஆலா கூறுகிறான்:
"அவர்களுக்கு மறுமையில் (நரக) நெருப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவர்கள் இவ்வுலகத்தில் செய்தவை அழிந்து விட்டன. இன்னும் அவர்கள் செய்துகொண்டிருந்தவை வீணானவையே ஆகும்."
(அல்குர்ஆன் 11:16)
இந்த ஆயத்திற்கு எதிரான தகவலைத் தருவதாக அபூலஹபின் நிகழ்ச்சி அமைந்துள்ளதே என்று நாம் சந்தேகப்படலாம்.
அதற்குரிய விரிவான விளக்கத்தினையும் இமாம் இப்னு ஹஜர், அப்துர்ரஸ்ஸாக் பன்னானீ, ஹாஃபிழ் தஹபீ போன்ற ஹதீது கலை விரிவுரையாளர்கள் மூன்று விதமான பதில்களை விரிவாகக் கூறியிருக்கிறார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்களிடம் அண்ணலாரின் பெரிய தந்தையார் அபூதாலிப் அவர்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:
"தற்போது அவர் நரகின் மேல் விளிம்பில் உள்ளார். நான் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவர் நரகின் கீழ் பகுதியில் வீழ்ந்திருப்பார்."
(நூல்: முன்னஃப் இப்னு அபீ ஷைபா)
அபூலஹப், அபூதாலிப் போன்றவர்களுக்கு நரகிலிருந்து விடுதலை இல்லையாயினும், நரகிலேயே சிலருக்கு வேதனை கடினமானதாகவும், வேறு சிலருக்கு வேதனை குறைவானதாகவும் ஆக்கப்படும். ஏனெனில், நரகிலும் பல படித்தரங்கள் உண்டு. முனாஃபிக்குகள் நரகின் கடைசி (இறுதி) படித்தரத்தில் உள்ளவர்கள்.
அல்லது நரகில் உள்ள முஃமின்களை வெளியேற்றுவதற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரைப்பது போன்று, அபூர்வமான நற்கிரியைகள் உள்ள காஃபிர்களின் குறைவான நரக வேதனைக்காகவும் பரிந்துரைப்பார்கள்.
அல்லது அபூலஹப், அபூதாலிப் போன்றவர்களுக்கு நரக வேதனையிலும் சில தளர்வு என்பது நபி (ஸல்) அவர்களுக்காக மட்டுமுள்ள தனிச் சலுகையாகவும் இருக்கும்.
ஆகவே, அல்குர்ஆன் 11:16 வசனத்தின் கருத்தும் அபூலஹப், அபூதாலிப் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள ஹதீதுகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. எதிராக இருந்தால் மட்டுமே, ஆயத்தின் கருத்தினால் ஹதீதின் கருத்து விலக்கிக்கொள்ளப்பட்டது என்று கூறப்படும்.
மேலும், அபூலஹப் பற்றி அப்பாஸ் (ரளி) அவர்கள் இஸ்லாம் ஆவதற்கு முன்னர் கண்ட கனவாகத்தான் அதை அறிவிக்கிறார்கள். ஆகவே, அதனை ஏற்கவேண்டியதில்லை என்றும் சந்தேகம் எழுவதுண்டு.
இஸ்லாம் ஆவதற்கு முன்னர் கண்ட கனவுகள் அல்லது நடந்து முடிந்த நிகழ்வுகளை இஸ்லாம் ஆனதன் பின் அறிவித்தால் அது ஏற்கப்படும் என்பதே ஹதீதின் பொது விதியாகும்.
அதுமட்டுமல்ல, ஸய்யிதுனா யூசுஃப் (அலை) அவர்களின் முஃஜிஸாவை வெளிப்படுத்தும் முகமாக, மிஸ்ரு நாட்டின் காஃபிர் அரசனின் கனவு பற்றியும், அதற்கு யூசுப் (அலை) அவர்கள் அளித்த கனவு விளக்கம் பற்றியும் அல்லாஹு தஆலா அல்குர்ஆன் அத்தியாயம் 12 இல் 43ஆவது வசனத்தின் தொடக்கத்தில் விவரமாகக் கூறிக் காட்டுகிறான்.
இதுபோன்றே பெருமானார் (ஸல்) அவர்களின் மாண்பையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவதாகவே அப்பாஸ் (ரளி) அவர்களின் கனவும் அமைந்திருக்கிறது.
கேள்வி: மீலாது விழா கொண்டாடுபவர்களும், மவ்லிது ஓதுபவர்களும் அபூலஹபின் வாரிசுகள் என்று சிலர் கூறுகிறார்களே?
பதில்: ஐயோ பாவம், குறுமதியாளர்கள். அபூலஹப் மவ்லிது ஓதியிருந்தால் அவன் எப்போதோ முஸ்லிமாகியிருப்பான். ஏனெனில், அதில் வரும் ஸலவாத்தின் வாக்கியங்களை ஓதத் தகுதியானவர் முஃமின்கள் மட்டுமே என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்.
(அல்குர்ஆன் 33:56)
ஆகவே நாமும், மவ்லிதையும், மீலாதையும் எதிர்ப்பவர்கள் அபூஜஹ்லின் வாரிசுகள் என்று கூறவேண்டியதில்லை.
சுருக்கம்:
பெருமானாரின் பிறப்பை அறிந்த காஃபிர்களின் தலைவரான அபூலஹப் மகிழ்ச்சியினால் அவரது அடிமைப் பெண் துவைபாவிற்கு விடுதலை வழங்கியதால் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நரக வேதனை குறைக்கப்படுமெனில், முஃமின்களான நம்மவர்களுக்கு மீலாது மற்றும் மவ்லூது விழாக்கள் கொண்டாடுவதால் ஏன் விமோசனமும் அபிவிருத்தியும் கிடைக்காமல் போய்விடும்?
அபிவிருத்தியும் அல்லாஹ்வின் அருளும் அவ்விரண்டினால் கிடைக்கும் என்பதுதான் சன்மார்க்கச் சான்றோர்களின் தீர்ப்பாகும்.
அதுமட்டுமின்றி, நபிமார்கள் மற்றும் இறைநேசர்களின் வரலாறுகளைத் தொடர்ந்து கேட்கும்போது முஃமின்களின் ஈமான் வலுப்படுகிறது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:
"நபியே, எதன் மூலம் உம்முடைய இதயத்தை உறுதிப்படுத்துவோமோ, அந்த தூதர்களின் வரலாற்றுச் செய்திகளை நாம் உமக்குக் கூறுகிறோம். இவற்றினால் உமக்கு உண்மையும் முஃமின்களுக்கு நல்லுபதேசமும் நினைவூட்டலும் வந்திருக்கின்றன."
(அல்குர்ஆன் 11:120)
அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"நபி (ஸல்) அவர்களது காலம் முதல் மூன்று நூற்றாண்டுகளாக மவ்லிது ஓதும் வழமை இல்லாவிட்டாலும் அதனை ஓதி வருவது பித்அத் ஹஸனாவாகும்."
(நூல்: பதாவா குப்ரா 1:196)
அல்லாமா ஸகாவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மவ்லிது ஓதும் வழக்கம் ஏற்பட்டாலும், அன்று முதல் முஸ்லிம்கள் அதனை நகரங்கள் முதல் குக்கிராமம் வரை ஒதியே வருகின்றனர். அதனை ஓதிவருவதால் மக்களுக்கு நிரப்பமான பாக்கியங்களும் கிடைக்கவே செய்கின்றன."
(நூல்: ஸீரத்துல் ஹலபிய்யா 1:83-84)
அல்லாமா இப்னு ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"மவ்லிதினை ஓதிவருபவர்களின் நாட்டங்களும் தேட்டங்களும் நிறைவேறுகின்றன. மேலும் அவ்வருடம் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கும் பாதுகாப்பாகும்."
(நூல்: ஸீரத்துல் ஹலபிய்யா 1:83-84)
இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"மவ்லிது ஓதுபவர்கள் அண்ணலாரை கண்ணியப்படுத்துவதுடன் அண்ணலாரின் பிறப்பு பற்றி மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதாலும் மவ்லிது ஓதுவது நன்மை வழங்கப்படும் பித்அத் ஹஸனாவாகும்."
(நூல்: பதாவா ஹாவீ 1:292)
மேலும், பெருமானார் (ஸல்) அவர்களது பிறப்பிற்காக நாமும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதும் அதற்காக தான தர்மங்கள் செய்வதும், உணவு சமைத்து பரிமாறுவதும் நன்மைக்குரிய செயல்களாகும்.
(நூல்: ஃபதாவா ஹாவீ 1:196)
மேலும், எவரது வீட்டில், அல்லது மஹல்லாவில், அல்லது பள்ளிகளில் மவ்லிதுகள் ஓதப்படுகின்றனவோ அங்கு மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றனர். அல்லாஹ்வின் அருளும் வந்திறங்குகிறது.
(நூல்: அல்வஸாயில் ஃபீ ஷரஹில் மஸாயில் லிஸ்ஸுயூத்தி)
மேலும், ஜைனுத்தீன் தஹ்லான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
"பெருமானர் (ஸல்) அவர்கள் பிறந்த நாளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், மவ்லிது ஓதுவதும் அவர்களை கண்ணியப்படுத்துவதே ஆகும்."
(நூல்: துரருஸ்ஸனிய்யா 190)
அல்லாமா ஹாபிழ் இராக்கி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"சாதாரண காலங்களில் ஏழைகளுக்கு உணவளிப்பதும், நண்பர்கள் மற்றும் உற்றார்களுக்கு விருந்தளிப்பதும் நன்மை தருபவை என்பதில் எவ்விதமான எதிர்க்கூற்றுகளும் இல்லை. அவ்வாறிருக்க, பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த நாளில் அவர்களின் பிறப்பின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதற்காக உணவளிப்பது, விருந்தளிப்பது (குர்ஆன், ஸலவாத்து, மவ்லிது ஓதுவது) எப்படித் தவறாகும்?"
(ஷரஹு மவாஹிபுல்லதுன்னிய்யா லிஸ்ஸர்கானீ)
மேலும், இப்னு தைமிய்யாவின் பிரதான மாணவர்களுள் ஒருவரான இப்னுல் ஹஸ்மு கூறுகிறார்:
"அண்ணலாரின் பிறந்த நாள் சபைகளில் கேட்கப்படும் அழகிய கூற்றுகளும், அவர்களது வரலாற்றுச் சம்பவங்களும் கேட்பவர்களின் உள்ளத்திற்கு நிம்மதியையும் அஹ்மது நபியிடம் இருந்து அகமிய ஒளியையும் கிடைக்கச் செய்கின்றன."
இதுபோன்றே பித்அத்தினை வன்மையாகக் கடிந்து கூறுகின்ற அஷ்ஷைகு இப்னு தைமிய்யா கூறுகிறார்:
"பெருமான் (ஸல்) அவர்களது பிறப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காகச் செய்துவரும் செயல்முறைகள், நடைமுறைகள் நன்மைக்குரியதாகும்."
(நூல்: இக்திலாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2, ஸீரத்துல் ஹலபிய்யா 1:83, மதாரிஜூஸ் ஸாலிகீன் 498)
இவ்வாறு, மீலாது, மவ்லிது பற்றி முன்னோர்கள் சிறப்பித்துக் கூறுவதுடன், சன்மார்க்க அறிஞர்களில் தற்கால மேன்மக்களும் அவ்விரண்டும் நன்மைக்குரியவைதாம் என்றே கூறுகின்றனர்.
மேலும், அவரவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இந்த இமாம்களின் கூற்றுகளை விமர்சிக்கவுமில்லை; மறுத்துரைக்கவுமில்லை.
ஆனால், சொற்பமான வெகு சிலரே மவ்லிது–மீலாது குறித்து "தவறானது" என்று கூறுகின்றனர். இவர்களது கூற்று சன்மார்க்க ரீதியிலும் உலகளாவிய நடைமுறையின்படியும் ஏற்கத்தக்கதாக இல்லை.
ஏனெனில், ஒவ்வொரு நாட்டின் தலைவர்களுக்காக எடுக்கப்படும் சிறப்பு விழாக்கள், அந்தந்த நாட்டிற்குரிய சுதந்திரம் மற்றும் குடியரசு விழாக்கள், தனிப்பட்ட கல்லூரிகள் ஸ்தாபன நிறுவனர்களின் விழாக்கள், அரபி மத்ரஸாக்களில் கத்முல் புகாரீ, கத்முல் குர்ஆன் விழாக்கள், பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் விழாக்கள், ஒவ்வொரு இயக்கத்தாரும் அவரவர் இயக்கம் தொடர்பாக எடுக்கும் விழாக்கள் மற்றும் விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று வெகு விமரிசையாகக் கொண்டாடுவதனைக் காண்கிறோம்.
அதுமட்டுமின்றி, அந்த விழாக்களில் பல்சமய சான்றோர்களும் ஆன்றோர்களும் கலந்துகொள்கின்றனர்.
ஆனால், நபிமார்கள், இறைநேசர்களின் விழாக்கள் என்று வரும் போது வாய் கூசாமல் "பித்அத்" என்று கூறுவது அருவருக்கத்தக்க செயலாகும்.
💬 இதைப் பற்றி உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்!
#moulid #miladunnabi #milad #milad2025 #mohammad #prophetmuhammad #tamilbayan #tamilislamicbayan #tamilmuslim #tamilquran #tamilhadees
#tamilhadith #tamildawahmedia #deen #islamtamil #islamicreminder #islamicstatus #sunnah #ahlusunnahwaljamaah #ahlusunnah #qurantamil #duatamil #tawakkul #imanbooster #tamilduamuslim #islamicmotivation
10 months ago | [YT] | 2
View 1 reply
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
🌹 மவ்லிது – நபி ﷺ அவர்களின் மகத்துவம் 🌹
💡 உங்களுக்கு தெரியுமா?
அல்லாஹ், நபி ﷺ அவர்கள்மீது ஸலவாத்து கூறுகிறான். மலக்குகளும் கூறுகிறார்கள். நாமும் கூற வேண்டிய அவசியத்தை குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது!
📖 குர்ஆன் சான்றுகள்:
🔹 “நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத் கூறுகிறார்கள். முஃமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்.”
(அல்குர்ஆன் 33:56)
🔹 “நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொள்வதற்காகவும், அவருக்கு உதவி செய்வதற்காகவும், அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும் தூதரை அனுப்பினோம்.”
(அல்குர்ஆன் 48:9)
📚 ஹதீஸ் சான்றுகள்:
1️⃣ இமாம் புகாரீ (ரஹ்) – அபுல்ஆலியா (ரஹ்) கூறியது:
அல்லாஹ் ஸலவாத்து கூறுவது என்பது, மலக்குகளின் முன்னிலையில் நபி ﷺ அவர்களை புகழ்ந்து கூறுவதாகும். (புகாரீ 4797)
2️⃣ ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரளி) – நபி ﷺ அவர்களை மஸ்ஜிதில் பாடி புகழ்ந்தபோது, நபி ﷺ அவர்கள் அவருக்கு மிம்பர் கொடுத்து ஊக்கப்படுத்தினார். மேலும், ஜிப்ரயீல் (அலை) அவர்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கப் பிரார்த்தித்தார்கள்.
(திர்மிதீ 2846, அஹ்மத் 172, அபூதாவூத் 5015)
🌹 முடிவு:
மவ்லிது என்பது நபி ﷺ அவர்களை கண்ணியப்படுத்தும், புகழ்ந்துரைக்கும், ஸலவாத்தை அதிகரிக்கும் ஒரு நன்மையான அமல்.
➡️ குர்ஆனும் ஹதீஸும் நமக்கு இதற்கான ஆதாரங்களைத் தெளிவாக காட்டுகின்றன.
#moulid #miladunnabi #milad #milad2025 #mohammad #prophetmuhammad #tamilbayan #tamilislamicbayan #tamilmuslim #tamilquran #tamilhadees
#tamilhadith #tamildawahmedia #deen #islamtamil #islamicreminder #islamicstatus #sunnah #ahlusunnahwaljamaah #ahlusunnah #qurantamil #duatamil #tawakkul #imanbooster #tamilduamuslim #islamicmotivation
10 months ago (edited) | [YT] | 3
View 0 replies
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
🎥 Watch Now: https://youtu.be/Ds_fK2VM4Nw
உங்கள் ஈமானில் என் உறுதியில்லை?
(Why don’t you have certainty in your Emaan?)
Tamil Bayan | Kaja Hajrath
உங்கள் ஈமானுக்கு உறுதிச் சிந்தனை எங்கே தொலைந்திருக்கு?
இந்த வியாதி மாதிரியான சிந்தனையைப் பற்றி ஓரளவாகப் பேசக்கூடிய ஒரு பயன் தரும் உரையை இணைத்துள்ளோம்.
இன்ஷா அல்லாஹ் — நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஊக்கமாக இருக்கும்.
#tamilbayan #tamilislamicbayan #tamilmuslim #tamilquran #tamilhadees
#tamilhadith #tamildawahmedia #deen #islamtamil #islamicquotes #islamicreminder #islamicstatus #sunnah #ahlusunnahwaljamaah #ahlusunnah #qurantamil #duatamil #deenquotes #muslimquotes #tawakkul #imanbooster #tamilduamuslim #allahquotes #islamicmotivation
10 months ago | [YT] | 0
View 0 replies
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
✨ புதிய வீடியோ வெளியீடு ✨
எந்த இபாதத்தில் அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்கும்? 🤲
➡️ Tamil Bayan | Kaja Hajrath
#tamilbayan #tamilislamicbayan #tamilmuslim #tamilquran #tamilhadees
#tamilhadith #tamildawahmedia #deen #islamtamil #islamicquotes #islamicreminder #islamicstatus #sunnah #ahlusunnahwaljamaah #ahlusunnah #qurantamil #duatamil #deenquotes #muslimquotes #tawakkul #imanbooster #tamilduamuslim #allahquotes #islamicmotivation
10 months ago | [YT] | 1
View 0 replies
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
காசாவில் நடந்த மிகச் சிறிய வெள்ளிக்கிழமை குத்பா 🕌
இமாம் கூறினார்:
"பசியால் பேசும் வலிமை எனக்கு இல்லை,
பசியால் கேட்கும் வலிமை உங்களுக்கும் இல்லை.
வாருங்கள், தொழுகையை நிலைநிறுத்துவோம்."
இதைப் பார்க்கும்போது என் இதயம் மிகவும் வருந்துகிறது… 💔
அல்லாஹ் அவர்களுக்கு sabr தந்து, பாதுகாப்பும், வெற்றியும் அருளுவானாக 🤲
நாமும் எப்போதும் துஆவில் காசா மக்களையும், எங்கெல்லாம் நம் இஸ்லாமிய சொந்தங்கள் இஸ்லாத்துக்காக கஷ்டப்படுகிறார்களோ அங்கேயும், நம் முஃமினான சகோதர சகோதரிகளையும், நம் எல்லாருடைய இம்மையும் மறுமையும் வெற்றிக்காகவும் துஆவில் மறக்காமல் சேர்த்துக்கொள்ளுவோம்.
11 months ago | [YT] | 8
View 0 replies
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
"பித்அத் ஹஸனா"விற்குரிய ஐந்து ஆதாரங்கள்
1. நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
"இஸ்லாத்தில், எவர் அழகிய சுன்னத்தினை நடைமுறைப்படுத்துகிறாரோ அதற்குரிய நன்மை அவருக்கும் உண்டு. அவரைத் தொடர்ந்து அதனைச் செய்துவருபவர்களின் நன்மைகள் அவரவருக்கும் வழங்கப்படுவது போன்று அதனை முதலில் நடைமுறைப்படுத்தியவருக்கும் அதே அளவு நன்மை உண்டு. இஸ்லாத்தில் தீமையான வழிமுறையை யார் ஏற்படுத்தினாரோ அதற்குரிய தீமை அவருக்கு உண்டு. அவரைத் தழுவி அதனைச் செய்பவர்களுக்குக் கிடைக்கும் தீமை போன்றதே அவருக்கும் உண்டு"
(அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் ரளி — நூல்: முஸ்லிம் 1017, நஸஈ 2254, இப்னுமாஜா 191)
2. இதே கருத்தில் மற்றொரு ஹதீதினை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா 192)
3. இதே கருத்தில் பிறிதொரு ஹதீதினை அபூஜுஹைபா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: இப்னுமாஜா 195)
4. இதே கருத்தில் வேறொரு ஹதீதினை ஹுதைபத்துல் யமானீ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: அஹ்மத் 23:289, பஸ்ஸார் 2963, தஹாவீ ஃபீ முஷ்கிலில் ஆஃதார் 251-1542, ஹாகிம் ஃபில் முஸ்தத்ரக் 2:516-518)
5. இதே கருத்தில் இன்னொரு ஹதீதினை வாதிலத்து பின் அஸ்கஃ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: ஹைதமீ ஃபீ மஜ்மஉஸ்ஸவாஇத் 770, தபரானீ ஃபில் அவ்ஸத் 1:172)
____________________________________________________________________________________________________________
இவை யாவற்றையும் விட அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் தெளிவாக அறிவிக்கிறார்கள்:
"நமது தீனில் இல்லாத ஒன்றினை எவர் அது ஏற்படுத்தினாலும் மறுக்கப்பட்டதாகும்"
(நூல்: புகாரி 2697, முஸ்லிம் 1718, அபூதாவூது 4606, இப்னுமாஜா 14)
_________________________________________________________________________________________________________________
அண்ணலாரின் அமுதவாய் அருளிய இந்தச் சொற்களை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.
நமது தீனில் முன்பே உள்ள ஒன்றை முன்மாதிரியாகக் கொண்டு வேறு ஒன்றினை ஏற்படுத்தினால் அது ஏற்புடையதாகும் என்பதை இவை வெளிப்படுத்துகின்றன.
இவ்வாறு விளங்குவதற்கு:
இல்முல் உஸூலில்: மஃப்ஹூம் முகாலபா
இல்முல் பதீஉவில்: மத்ஹப் கலாமீ
இல்முல் மன்திகில்: கியாஸு இஸ்திஃத்னாயி
_________________________________________________________________________________________________________________
மேலும், நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
"எவர் நன்மையைக் காண்பித்துக் கொடுத்தாரோ அவருக்கும் அதனைச் செய்பவர்களின் நன்மை போன்ற அளவு நன்மைகள் உண்டு"
(நூல்: முஸ்லிம் 1893, அபூதாவூது 5129, திர்மிதீ 2671)
"எவர் அவருக்கு அதற்கான தீமையும், அவரைத் தீமையைக் காண்பித்து வழிகாட்டினாரோ தொடர்ந்து அதனைச் செய்துவருபவர்களின் தீமை போன்ற தீமையும் அவருக்கும் உண்டு"
(நூல்: முஸ்லிம் 2674, அபூதாவூது 4609, திர்மிதீ 2674)
"ஒருவர் அநீதமாகக் கொல்லப்படும்போதெல்லாம், முதன்முதலில் கொலை செய்து வழிகாட்டிய காபீலுக்கும் அந்தத் தீயதில் பங்கு உண்டு"
(நூல்: புகாரி 3335, முஸ்லிம் 1677, திர்மிதீ 2673, நஸஈ 3975, இப்னுமாஜா 2645, அஹ்மத் 3630)
_________________________________________________________________________________________________________________
அல்லாஹு தஆலா அருளுகின்றான்:
"எவரொருவர் நன்மையான செயல் ஒன்றுக்குப் பரிந்துரைப்பாரோ அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது. எவரொருவர் தீய செயல் ஒன்றுக்குப் பரிந்துரைப்பாரோ அவருக்கும் அதிலிருந்து ஒரு பங்கு உண்டு. அல்லாஹ்வோ அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் கொண்டவனாவான்"
(அல்குர்ஆன் 4:85)
"நிச்சயமாக நாமே இறந்தோரை உயிர்ப்பிக்கிறோம். அவர்கள் முற்படுத்தி வைத்தவற்றையும், அவர்கள் மரணித்த பின்னும் நன்மையைச் சேர்த்து வைக்கின்ற அவர்களின் (நற்செயலான) அடிச்சுவடுகளையும் நாம் எழுதுகிறோம்"
(அல்குர்ஆன் 36:12)
_________________________________________________________________________________________________________________
விளக்கம்:
"அவர்கள் முற்படுத்தியவை" என்பது சுன்னத்து ஹஸனாவையும் மற்றும் தீய நடைமுறையான சுன்னத்துஸ் ஸய்யிஆவையும் குறிக்கும் என்று விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
11 months ago | [YT] | 2
View 0 replies
Rock City Maulana Kaja Hazrath Tamil Bayan
"ரமலான்" மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது எந்த இஸ்லாமிய ஆண்டில்?
உங்கள் Islamic knowledge-ஐ test பண்ணிக்கோங்க!
#tamilbayan #tamilislamicbayan #tamilmuslim #tamilquran #tamilhadees
#tamilhadith #tamildawahmedia #deen #islamtamil #islamicquotes #islamicreminder #islamicstatus #sunnah #ahlusunnahwaljamaah #ahlusunnah #qurantamil #duatamil #deenquotes #muslimquotes #tawakkul #imanbooster #tamilduamuslim #allahquotes #islamicmotivation
11 months ago | [YT] | 10
View 0 replies
Load more