நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திலகத்தின் புகழை இளம் தலைமுறையினரும் அறிய வேண்டும் என்பது நோக்கம் !
2020 ஆம் ஆண்டு சுதந்திர திருநாள் அன்று இனிதே ஆரம்பித்து பல நடிகர் திலகத்தின் படங்கள் , பாடல்கள் மற்றும் காட்சிகள் பற்றிய ஆய்வு ,அலசல் ஆகியவற்றை பதிவு செய்து இளம் தலைமுறையினரும் நடிகர் திலகத்தின் புகழை அறிய வேண்டும் என்ற நோக்கில் இப்பணியை தொடர்ந்து இருக்கிறோம் .
நடிகர் திலகம் எனும் மையப்புள்ளியில் இணைந்திருக்கும் இந்த வண்ணக்கோலங்கள் இனிவரும் வரும் காலங்களில் மேன்மை பெறும் என்ற நம்பிக்கையோடு உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர் நோக்கி உள்ளோம் !
we are continuing this work with the aim of making the younger generation aware of the fame of Legendary actor Nadigar Thilagam” Sivaji Ganesan
Follow on Facebook : www.facebook.com/profile.php?id=100063455119586
Follow us on Instagram: www.instagram.com/endendrum_sivaji/
ENDRENDRUM SIVAJI
கலை ஈஸ்வரனுக்கு நினைவாஞ்சலி 🎉#sivajiganesan @ENDRENDRUMSIVAJI
1 day ago | [YT] | 275
View 6 replies
ENDRENDRUM SIVAJI
ஒப்பாரும் மிக்காரும் இல்லா
கலைத்தாயின் தவப்புதல்வன்
நடிகர்திலகம் அவர்களுக்கு
நினைவு அஞ்சலி மற்றும்
புகழ் வணக்கம் ! #sivajiganesan #Memorialday @ENDRENDRUMSIVAJI
1 day ago | [YT] | 515
View 27 replies
ENDRENDRUM SIVAJI
எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற. இவர் கருப்பு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர் என்று புகழப்படுகிற காமராஜர் அவர்கள் பிறந்த தினம் இன்று ! #kamarajarbirthday @ENDRENDRUMSIVAJI
1 week ago | [YT] | 517
View 10 replies
ENDRENDRUM SIVAJI
#வடிவுக்கரசி (63) #vadivukarasi
#பொன்னாத்தா
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகைகளுள் ஒருவர் வடிவக்கரசி. பாரதிராஜாவால் ‘சிகப்பு ரோஜாக்கள்’ (1978) படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். வடிவக்கரசி யின் பெரியப்பா புராணத் திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.
1982-ல் ‘வா கண்ணா வா’ திரைப்படத்தில் சிவாஜிக்கு (வளர்ப்பு) மகளாக நடித்தார். மூன்று வருடத்திற்குப் பிறகு வெளியான ‘முதல் மரியாதை’ படத்தில் மனைவி பாத்திரம்.
சிவாஜிக்கு ஜோடி என்றதும் தன்னை கே.ஆர்.விஜயா மாதிரி கற்பனை செய்து கொண்டு சந்தோஷத்தில் மிதந்தார் வடிவக்கரசி. பார்த்தால் வயதான பாத்திரம். காதில் பசை தடவி தண்டட்டிகளை தொங்க விட்டு கிராமத்துப் ‘பொம்பளை’யாக மாற்றினார்கள். என்றாலும் சிவாஜிக்கு இணை என்பதில் சந்தோஷம்.
ஆனால் வசனத்தை படித்துப் பார்க்கும் போதுதான் வடிவுக்கரசிக்குப் புரிந்தது. சிவாஜியை திட்டித் தீர்ப்பது போன்ற வில்லி பாத்திரம். கோபம் தாங்கவில்லை. இயக்குநர் தன்னை ஏமாற்றி விட்டார் என்கிற கோபத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
ஆனால் பாரதிராஜா அந்தப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி நடிக்க வைக்க, அவர் மீதுள்ள கோபத்தையெல்லாம் நடிப்பில் காண்பித்தார். ‘பொன்னாத்தா’ என்கிற அந்தப் பாத்திரம்தான் வடிவுக்கரசியின் மீது அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
அவசரத்தில் அள்ளி முடிந்த கூந்தல், நெற்றியில் பெரிய பொட்டு, காதில் தண்டட்டி, நூல் சேலை, சிடுசிடு பார்வை, கடுகடு பேச்சு என்று வடிவுக்கரசியின் அவதாரம் ‘பொன்னாத்தா’ என்கிற கேரக்டரின் வழியாக முற்றிலும் வேறு வடிவில் உருக்கொண்டிருக்கிறது.
மலைச்சாமியை அபாண்டமாக குற்றம் சாட்டி பொன்னாத்தா நீளமாக பிலாக்கணம் வைத்த வசனம் பேசுவாள் பொன்னாத்தா (வடிவுக்கரசி) . " “பொங்கப்பானையா பொங்கினாத்தான் இந்தச் சிறுக்கி மனசு அடங்கும் போலயே.. எனக்கும் நல்லது கெட்டது கேட்க நாலு சாதி சனம் இருக்குய்யா.. இந்தச் சிறுக்கி மவ ஒரு தப்பு பண்ணிப்புட்டேன்.. இல்லேன்னு சொல்லல. ஒரு நா ஒரு பொழுது.. ஒருத்தனோட படுத்து எழுந்திருச்சு ஒரு புள்ளயோட வந்தேன். அதுக்காக உன் கூட ஆயுசு முழுக்க தண்டனையா.. ஆஸ்தி பாஸ்தியோட அறுபது பவுன் நகையோட இருந்த என்னை, துருப்பிடிச்ச தொரட்டுக்கொம்பும் பத்து வெள்ளாடாடோடும் வந்த உனக்கு கட்டி வெச்சானே.. என் அப்பன், அவனைச் செருப்பால அடிக்கணும்”...
இதைக் கேட்டவுடன் அதுவரை தன் மனைவியைத் தொட்டுக்கூட பேசாத மலைச்சாமி, ஆத்திரத்துடன் ஒரு மிதி மிதிக்கிறார். “ஆத்தி..” என்று அலறியபடி கீழே சாய்கிறாள் பொன்னாத்தா. இந்த காட்சி திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளியது.
பிற்பாடு இயக்குநர்களோ, உதவி இயக்குநர்களோ கொடுமைக்கார மனைவியின் பாத்திரத்தை எளிதில் மற்றவர்களுக்கு விளக்குவதற்காக ‘முதல் மரியாதை படத்துல வடிவுக்கரசி நடிச்சாங்கள்ல..’ என்று மேற்கோள் காட்டி புரிய வைக்கும் அளவிற்கு ‘பொன்னாத்தா’ லேண்ட்மார்க் பாத்திரமாக ஆனது.
Endrendrum Sivaji
2 weeks ago | [YT] | 389
View 11 replies
ENDRENDRUM SIVAJI
#manjula நடிகை மஞ்சுளா நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் எங்கள் தங்க ராஜா. 1973 ஜுலை 14 இதே நாளில் படம் வெளியானது.
எங்கள் தங்க ராஜா வெளியாகி அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பல திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது. சென்னையில் மட்டும் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என மூன்று திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இவ்வகையில் நடிகர் திலகத்தின் ராசியான மற்றும் இளமையான ஜோடியாக ரசிகர்கள் அங்கீகரித்தார்கள.
எங்கள் தங்க ராஜாவை தொடர்ந்து, என் மகன், அவன்தான் மனிதன்,மன்னவன் வந்தானடி, அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, உத்தமன், , அவன் ஒரு சரித்திரம், நெஞ்சங்கள் போன்ற படங்களில் நடித்தார்.
சத்தியம் படத்தில் கமலஹாஸன் ஜோடியாகவும் முதல் குரல் படத்தில் வில்லியாகவும் நடித்து இருந்தார் மஞ்சுளா.
எங்கள் தங்க ராஜா, என் மகன், அவன்தான் மனிதன்,மன்னவன் வந்தானடி. ஆகிய படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடியது.
இவற்றில் உத்தமன் படம் இலங்கையில் வெள்ளி விழா படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகத்திற்கு இளமையான ஜோடியாக விளங்கிய நடிகை மஞ்சுளா பிறந்த தினம் இன்று ❣️
Endrendrum Sivaji
2 weeks ago | [YT] | 324
View 8 replies
ENDRENDRUM SIVAJI
நவரச திலகம் முத்துராமன் பிறந்த தினம் #muthuraman #bday
1956-ம் ஆண்டு நடிகர் திலகம் நடித்த ரங்கூன் ராதா என்ற படத்தில் அவருக்கு சிறு வேடமாக வக்கீல் கதாபாத்திரம் வழங்கப்பட்டது. அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். அதன் பிறகு பிரதான பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் அதிகளவில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த பின்னர் அனைத்துப் படங்களிலும் பிரதான பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் . சிறு வேடங்களில் தோன்றினாலும் சரி அவரது பங்களிப்பு மிகச் சிறப்பாகவே இருக்கும். அவருக்கே தோதான குரலில் பேசி விழிகளை உருட்டியும் நடித்த நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது ., பல படங்களில் பக்குவமான நடிப்பையும் வெளிப்படுத்தத் தொடங்கினார்.
நடிகர் திலகத்துடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் முத்துராமன் .சிவந்த மண் .நிறைகுடம் , காவல் தெய்வம் , ஊட்டி வரை உறவு ,நெஞ்சிருக்கும் வரை , அவன்தான் மனிதன் , திருவிளையாடல் , பழனி , வைர நெஞ்சம் , சித்ரா பௌர்ணமி , வாணி ராணி , ராஜராஜ சோழன் ,தர்மம் எங்கே , எங்கிருந்தோ வந்தால் , ராமன் எத்தனை ராமனடி போன்ற ஏகப்பட்ட படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்திருந்தார் .மூன்று தெய்வங்கள் என்ற படத்தில் திருடனாக நடித்திருப்பார் முத்துராமன். அதில் சிவாஜி மற்றும் நாகேஷுடன் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளில் மிளிர்ந்தார்.
நடிகர் திலகத்துடன் எப்போதும் தோழமையுடனும் அன்புடனும் இருந்தார் நவரச திலகம் முத்துராமன் . நடிகர் திலகமும் அவர் மீது மாறாத அன்பு கொண்டிருந்தார் . அவர் திடீர் மறைவின்போது பக்கத்தில் இருந்தவர்களிடம் ‘டேய்! முத்துராமன் சீக்கிரம் போய்ட்டான்டா.. நல்லா இன்னும் அதிக காலம் வாழவேண்டியவன் தான், என்ன பண்றது போயிட்டான். உடல் நலிவுற்று கஷ்டப்படாம..யாரையும் கஷ்டப்படுத்தாம கண்ணை மூடிட்டான் . நல்ல மரணம். பொசுக்குன்னு போயிட்டான். அவன் அதிர்ஷ்டக்காரன்டா. "என்றாராம் .
ஆரவாரமில்லாது அமைதியான நடிப்பை வழங்கிய ஒரு ஒப்பற்ற கலைஞனாக முத்துராமன் பிறந்த தினம் இன்று ! @ENDRENDRUMSIVAJI
2 weeks ago | [YT] | 576
View 19 replies
ENDRENDRUM SIVAJI
#சிவாஜி: என் விழியில்
நீ இருந்தாய்.. என்
விழியில் நீ இருந்தாய்
#பாலாஜி: உன் வடிவில்
நான் இருந்தேன் ..உன்
வடிவில் நான் இருந்தேன்
சிவாஜி & பாலாஜி: நீ இன்றி நான்
இல்லை நான் இன்றி
நீ இல்லையே !
திரையுலகில் இவர்கள் நட்புக்கு ஈடு இணை எது?
#கேபாலாஜி #சிவாஜிகணேசன்
Endrendrum Sivaji
3 weeks ago | [YT] | 582
View 20 replies
ENDRENDRUM SIVAJI
நடிப்பில் சிவாஜி முத்திரை பதித்தது போல் பாடல்களில் முத்திரை பதித்தவர் கவியரசர் கண்ணதாசன். வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், அந்த கால சினிமாவில் மிகவும் பிஸியாக பாடலாசிரியராக வலம் வந்தார்.
அதேபோல் சிவாஜியும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருந்துள்ளது. அதேபோல நண்பர்களுக்கு உண்டான மோதல்களும் இருந்து இருக்கிறன.
சிவாஜி நடிப்பில் பல படங்களை கண்ணதாசன் தயாரித்துள்ளார். சிவாஜியின் இல்லற ஜோதி என்ற படத்திற்கு கதை ஆசிரியராகவும் இருந்துள்ளார்..
கண்ணதாசன் மிகவும் சென்சிடிவானவர். எந்த அளவு நட்பு கொள்கிறாரோ, அந்த அளவு சடாரென அவர்களுடன் முறைத்தும் கொள்வார். கண்ணதாசனுக்கும், சிவாஜிக்கும். அவர்களுக்கிடையில் ஒரு சிறு மனத்தாங்கல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதுமில்லை பேசுவதுமில்லை. அவர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல் எழுதாமலும் இருந்தார்.
அப்போது இந்த படத்துக்கு கண்ணதாசன் தான் பாடல் எழுதி ஆகவேண்டும் என்று பீம்சிங் விடாப்பிடியாக பேசி சிவாஜியை சம்மதிக்க வைத்தார். இந்த படத்தின் விழாவிற்கு சிவாஜியும் வந்திருந்தார், கண்ணதாசனும் வந்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி இது, ஆனால் இருவரும் முகத்தை நேருக்கு நேராக ஏறிட்டு பார்த்துக் கொள்ளவில்லை. விழா பந்தலில் கண்ணதாசனும், சிவாஜியும் சற்றுத் தள்ளித் தள்ளி அமர்ந்திருந்தனர். கண்ணதாசன் சிவாஜிக்கு சற்று பின்னர் தள்ளி அமர்ந்திருந்தார். கண்ணதாசனை சிவாஜி கண்டுகொள்ளாமலே இருந்தார்.
கண்ணதாசன் எப்படி சிவாஜியிடம் பேசுவது என்று அவரும் அமைதியாக இருந்தார். திடீரென பின் பக்கம் திரும்பிய சிவாஜி, தன் உருட்டு விழியால், ஒரு முரட்டு பார்வையை கண்ணதாசனை நோக்கி வீசுகிறார். இந்தப் பார்வைதான் கண்ணதாசனை இந்த படத்திற்கான பாடல் எழுத தூண்டியது.
“என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய், நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா.."
பாசமலர் படத்தில் கண்ணதாசன் எழுதிய மலர்ந்து மலராத பாதி மலர் போல பாடலை கேட்ட சிவாஜி, அழுத்து புலம்பிய நிலையில், அப்போதே கண்ணதாசனை வரவழைத்து கட்டி தழுவிக் கொண்டுள்ளார்.
தற்போதும் கண்ணதாசன் - சிவாஜி கணேசன் காம்பினேஷன் பாடல்களை பலரும் விரும்பிக் கேட்கும் வகையில் இருவரும் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
காவிய பாடல்கள் பல இயற்றி இன்றும் திரைப்பட துறையையும் விஞ்சி மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று ❣️
#kannadadasan Endrendrum Sivaji
4 weeks ago | [YT] | 330
View 8 replies
ENDRENDRUM SIVAJI
மெல்லிசை மன்னர்
#MSV BirthDay 24.June 1928
16 ஜூன் 1963 அன்று ஒரு சிறப்பு விழாவில் M. S. விஸ்வநாதன் மற்றும் T. K. ராமமூர்த்தி ஆகியோருக்கு மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இது மெட்ராஸ் டிரிப்ளிகேன் கல்ச்சுரல் அகாடமியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு இந்து குழும வெளியீடுகள், குறிப்பாக விழாவில் திரு. டி.எம்.ராமச்சந்திரன், இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் மற்றும் சித்ராலயா கோபு ஆகியோரால் வழிமொழியப்பட்டது.
நடிகர் திலகத்தின் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து படத்தின் வெற்றிக்கு பெரும்பங்கு வகுத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் .அவர் பிறந்த தினம் இன்று !
#msv #MSViswanathan #EndrendrumSivaji
4 weeks ago | [YT] | 232
View 5 replies
ENDRENDRUM SIVAJI
நடிகை #சந்திரகலா நினைவு தினம்
1963 இல் கன்னடத் திரைப்படங்களில் அறிமுகமானார். ராஜ்குமார், கல்யாண் குமார், உதய் குமார், ஆகியோருடன் இணைந்து நடித்தார். 1971 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசன், சாவித்திரி ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தமிழில் வெளியான பிராப்தம் என்ற படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் . நடிகர் திலகத்துடன் மூன்று தெய்வங்கள் (நடிகர் சிவகுமாரின் இணை ) படத்திலும் நடித்து இருந்தார் .
இவர் தனது காலத்தின் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களுடன் நடித்தார். தெலுங்கில் இவர் என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜூ தமிழில் எம் ஜி இராமச்சந்திரன், முத்துராமன், சிவகுமார் ஆகியோருடன் நடித்து விட்டார் .
சந்திரகலா 21 ஜூன் 1999 அன்று 48 வயதில் புற்றுநோயால் இறந்து போனார் .
Endrendrum Sivaji
1 month ago | [YT] | 173
View 3 replies
Load more