Doctor M.Karthika Ayurveda Tamil

Welcome to my Youtube Channel
Dr.M.KARTHIKA BAMS


Im Dr.M.KARTHIKA registered Ayurvedic Doctor. Im creating videos about medicinal value in easily available things, Yoga and Thanjavur Rajarajeeswaram Temple history.


------------------------------------------------------

I uploaded videos for Hair care, Face care, Skin Care,Constipation, Acidity,Weight gain, Weight loss, Yogasana instructions, Thanjavur Temple history, Oil making videos etc..

********************************

Watch my videos and give your comments in Comment box.

Don't forget to Subscribe

Health is Wealth

ராஜராஜீஸ்வரம் ( தஞ்சை பெரிய கோவில், பெருவுடையார் கோவில் ) வரலாறை உரிய சரித்திர ஆதாரங்கள் கொண்டு அறிய என் videos நிச்சயமாக உதவும். Subscribe செய்து ஆதரவை தாருங்கள். நன்றி 🙏🏻 நம் வரலாறு..... நம் அடையாளம்.... நம் பெருமை...


Doctor M.Karthika Ayurveda Tamil

தஞ்சை பெரிய கோவிலும் மடத்தனமான உளறல்களும் 😜

🤣 தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜர் சிறிய நந்தியை தான் வைத்திருந்தாராம் அந்த நந்தி மேல் சூரிய ஒளி விழுந்து எதிரொளித்து கோவிலின் மேல் இருக்கும் ஒரு ஓட்டையின் வழியாக கீழ் தளத்தில் கருவறையில் இருக்கும் இறைவன் மேல் விழுமாம்.

🤣 ஆனால் அந்த ஓட்டையை நாயக்கர்கள் அடைத்துவிட்டு ராஜராஜ சோழர் வைத்திருந்த நந்தியை அகற்றிவிட்டு இப்போது இருக்கும் பெரிய நந்தியை நாயக்கர்கள் வைத்தார்கள் என்று மடத்தனமாக பொய் பரப்பப்படுகிறது.

🤣 சூரிய ஒளி கோவிலின் மேல் பகுதியில் இருக்கும் ஓட்டை வழியாக சென்றால் அது எப்படி கற்களை கடந்து ஊடுருவியோ எதிரொளித்தோ இறைவன் மேல் விழும் என்று சிந்திக்க தெரியாத சிலர் பொய்யை உண்மை போல் சித்தரிக்கிறார்கள். இதை கேட்கும் சில மக்களும் இந்த பொய்யை ஏதோ அரிய வகை கண்டுபிடிப்பு போல் நினைத்து கொள்கிறார்கள்.

❌ பொய்யை பரப்புவோருக்கு சூரிய ஒளி செல்லும் விதம் பற்றிய அறிவோ தஞ்சை பெரிய கோவில் கட்டுமானம் பற்றிய அறிவோ தேவையே இல்லை. வாயிலே வடை சுடுவது போல் கதை அளந்துவிடலாம்.

❓ தமிழர்கள், படித்து சிந்திக்க தெரிந்த தமிழர்கள் இதை நம்பலாமா? பெரிய நந்தியை நாயக்கர் வைத்தார் என்ற பொய்யை உண்மை போல் மிகைப்படுத்த சித்தரிக்கப்பட்ட இது போன்ற
கட்டுகதைகளை உண்மை என நம்பிவிடாதீர்கள்.

ராஜராஜ சோழர் வைத்திருந்த சிறிய நந்தியை ஆகற்றிவிட்டு இப்போது இருக்கும் பெரிய நந்தியை நாயக்கர் வைத்தார் என்று 1990 களுக்கு பிறகு தான் பொய் பரப்பப்பட்டுள்ளது. பெரிய நந்தியை ராஜராஜர் வைத்தார் என்பதுவே வரலாற்று உண்மை.

(( பெரிய நந்தியை நாயக்கர் வைத்தார்கள் என்று உளறுவோரிடம் அதற்கு கல்வெட்டு ஆதாரம் கேளுங்கள் தெரிச்சு ஓடுவார்கள். 1990 களுக்கு பிறகு ஆதாரம் இன்றி நந்தியை நாயக்கர் வைத்தார் என்று வாயிலே வடை சுட்டு எழுதப்பட்ட புத்தகங்களை மட்டுமே ஆதாரமாக கூறுவார்கள் 😜 ))


#tamil #tamilnadu #thanjavur #thanjaiperiyakovil

2 years ago | [YT] | 3

Doctor M.Karthika Ayurveda Tamil

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் 🙏🏻

தஞ்சை பெரிய கோவில் பெரிய நந்தியின் உண்மை வரலாறு.

😡 ராஜராஜ சோழர் வைத்த பெரிய நந்தியை நாயக்கர் வைத்தார் என்று பொய்யை பரப்பி இன்று ராஜராஜர் வைத்த நந்தியின் வரலாறை சீரழித்துவிட்டார்கள். 😡

❓ 1990 களுக்கு முன்பு வரை தமிழை தாய் மொழியாக கொண்ட ஆய்வாளர்கள் எவருமே அவர்கள் எழுதிய நூல்களில் தஞ்சை பெரிய கோவிலில் பெரிய நந்தியை நாயக்கர் வைத்தார் என்று எழுதவில்லை. பெரிய நந்தி ராஜராஜர் வைத்தது கிடையாது என்றும் எழுதவில்லை.

😱 தஞ்சை பெரிய கோவிலில் பெரிய நந்தியை நாயக்கர் வைத்தார்கள் என்று அடித்து கூற எந்த கல்வெட்டு சான்றுகளும் கிடையாது. பின்னர் எப்படி நாயக்கர் தான் பெரிய நந்தியை வைத்தார் என்று பேச்சு எழுந்தது என்று சிந்தித்து பாருங்கள்.

🤬 1990 களுக்கு பிறகு தான் தஞ்சை பெரிய கோவில் பெரிய நந்தியை நாயக்கர்கள் வைத்தார்கள் என்று பொய்யை பரப்பி உள்ளார்கள். 1990 களுக்கு முன்பு எழுதப்பட்ட ஆய்வு நூல் எதிலாவது பெரிய நந்தியை நாயக்கர் வைத்தார்கள் என்று உள்ளதா என்று யோசியுங்கள் தேடி பாருங்கள் உண்மை புரியும்.

😜 வாயிலே வடை சுடுவது போல் ராஜராஜர் வைத்த நந்தியை நாயக்கர் வைத்தார்கள் என்று பொய்யை பரப்பி, ராஜராஜர் வைத்த நந்தியை நாயக்கர்கள் கோவிலில் ஓரமாக வைத்துவிட்டு நாயக்கர்கள் தான் இப்போது இருக்கும் பெரிய நந்தியை வைத்ததாக பொய்யை பரப்பிவிட்டுவிட்டார்கள். (ஆதாரம் இல்லாமல் இப்படி வாயிலே வடை சுட்டால் அதற்கு பெயர் வரலாறு இல்லை கட்டுக்கதை)

தஞ்சை பெரிய கோவில் இன்று மராட்டியர்களின் பரம்பரை சொத்தாக இருப்பது பெரும்பான்மையான தமிழர்களுக்கு தெரியவில்லை. அது போல் தான் இந்த உண்மையும்.

#tamil #tamilnadu #thanjavur

2 years ago (edited) | [YT] | 1

Doctor M.Karthika Ayurveda Tamil

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர நாள் கொண்டாட்டம் .......

மாமன்னரது பெயரை சொல்லி அவர் எழுப்பிய ராஜராஜீஸ்வர வரலாறை சீரழித்த பொய்யர்களுக்கு மத்தியில் இன்று நடை பெறுகிறது.

மாமன்னர் எழுப்பிய பெரிய நந்தியை நாயக்கர் வைத்ததாக பொய்யை பரப்பி, கோவிலை அந்நியர்கள் படையெடுத்து இடித்துவிட்டாதாக பொய்யை பரப்பி, கோவிலின் முதல் நுழைவு வாயிலுக்கு மராட்டியர் நுழைவு வாயில் என புது பெயர் சூட்டி வரலாறை சீரழித்து கொண்டிருக்கும் பொய்யர்கள் மத்தியில் இன்று மாமன்னருக்கு பிறந்தநாள் விழா!!!

வாய் கூசாமல் பொய்யை பரப்புவோர் முகத்திரை கிழிய அருள் புரியுங்கள் மன்னரே!

2 years ago | [YT] | 1

Doctor M.Karthika Ayurveda Tamil

தஞ்சாவூர் கோவிலை இடிச்சுட்டாங்களாம். முதல் தளத்தை முழுவதும் இடிச்சுட்டாங்களாம். என்ன ஒரு கோமாளித்தனமான கேவலமான பேச்சுக்கள்.
😜 கோவில் ல எல்லாத்தையும் இடிச்சவங்க கோவில் விமானத்தையும் லிங்கத்தையும் எதுவுமே பண்ணாம விட்டாங்களாம்.
Hahaha....
1990 க்கு பிறகு தான் கோவில் இடிக்கப்பட்டதாக பொய்யை பரப்புகிறார்கள். பொய் சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா.
எவ்வளவு அடிச்சுவிட்டாலும் பொய் ஒரு போதும் உண்மை ஆகாது. பொய்யின் சாயம் வெளுக்கும் போது கோவிலை இடிச்சுட்டாங்க ன்னு பொய்யை பரப்புவோர் அன்னை தமிழின் முன்பும் உண்மை வரலாற்றின் முன்பும் தலை குனிந்து நிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

2 years ago | [YT] | 0