@TamillilQuran

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இந்த YouTube சேனல், அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் பிரசித்திபெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் மார்க்க சொற்பொழிவுகளை தொகுத்து வழங்குகின்றது.

🎧 இவை உங்கள் தினசரி மார்க்க வாழ்வில் வழிகாட்டியாக அமையும்.
📥 புதிய வீடியோக்கள் உடனுக்குடன் கிடைக்க, தயவுசெய்து இந்த சேனலை Subscribe செய்யவும்.
🔔 Bell Icon-ஐ கிளிக் செய்வதையும் மறக்காதீர்கள்!

📝 குறிப்பு:
இந்த சேனல் எந்தவொரு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களதும் உத்தியோகபூர்வ சேனல் (Channel) இல்லை என்பதனை நான் இங்கு உறுதிபடுத்திக் கொள்கின்றேன்.

Jezakallahu khair


#TamillilQuran @TamillilQuran #tamillilquran #TAMILLILQURAN


TAMIL LIL QURAN

ஆடையும் அலங்காரமும்... உங்களை அழகாக்கும் என்று நினைக்கிறீர்கள்..!

14 minutes ago | [YT] | 8

TAMIL LIL QURAN

அல்குர்ஆனின் மிக நீண்ட, மகத்தான அத்தியாயமான சூரா அல்-பகரா பற்றி நாம் பல விஷயங்களை அறிந்திருப்போம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையின் வெற்றிக்கும், மன அமைதிக்கும் இந்த சூராவில் பொதிந்துள்ள சில ஆழமான, புதிய பார்வைகளையும், அதை உங்கள் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் பார்ப்போம்.

​நாம் பொதுவாக சூரா பகராவை தீமைகளிலிருந்து பாதுகாப்புப் பெற ஓதுகிறோம். ஆனால், இந்த சூராவின் மிக முக்கியமான நோக்கம் பொறுப்புணர்வை ஏற்பது மற்றும் சாக்குகளைத் தவிர்ப்பது ஆகும். இந்த சூராவின் ஆரம்பத்தில் பனூ இஸ்ரேலர்கள் பற்றி அல்லாஹ் நீண்ட தூரம் பேசுகிறான். அவர்களுக்கு ஏகப்பட்ட அருட்கொடைகள் வழங்கப்பட்டும், அவர்கள் மாடு எப்படி இருக்க வேண்டும், என்ன நிறம் என்று தேவையற்ற கேள்விகளைக் கேட்டு, கட்டளைகளை தள்ளிப்போட சாக்குப்போக்குகளைத் தேடினார்கள். இதற்கு நேர்மாறாக, சூராவின் இறுதியில் ஈமான் கொண்டவர்களின் பண்பாக அல்லாஹ் கூறுவது, நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்பதாகும். உங்கள் அன்றாட வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், கடமைகளை தள்ளிப்போடும் குணத்தையும், சாக்குப்போக்குகள் சொல்வதையும் நிறுத்திவிட்டு, உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும் என்ற உளவியல் பாடத்தை இந்த சூரா நமக்குத் தருகிறது.

​இந்த சூராவை உங்கள் தினசரி வாழ்க்கையில் இணைத்து, இஸ்லாமிய விழுமியங்களுடன் வெற்றி பெற மூன்று முக்கிய வழிகள் உள்ளன.
​முதலாவதாக, காலை மற்றும் இரவு நேரப் பாதுகாப்பு. யார் சூரா அல்-பகராவின் கடைசி இரு வசனங்களை ஓர் இரவில் ஓதுகிறாரோ, அவருக்கு அதுவே போதுமானதாகும் என்று புகாரி 5009-வது ஹதீஸில் நபியவர்கள் கூறியுள்ளார்கள். தினமும் காலையிலும், படுக்கைக்குச் செல்லும் முன்பும் ஆயத்துல் குர்ஸி மற்றும் கடைசி இரு வசனங்களை ஓதுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, எதிர்மறை ஆற்றல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். மன அமைதிதான் வெற்றியின் முதல் படி.
​இரண்டாவதாக, பரகத் மற்றும் வீட்டின் சூழல். சூரா பகராவை ஓதுங்கள், அதைப் பற்றிப் பிடிப்பது பரகத் ஆகும், அதை விட்டுவிடுவது நஷ்டமாகும், சூனியக்காரர்களால் இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று முஸ்லிம் 804-வது ஹதீஸில் நபியவர்கள் கூறினார்கள். உங்கள் வீட்டில் அடிக்கடி சூரா பகராவை ஓதுங்கள் அல்லது ஒலிக்கச் செய்யுங்கள். நபியவர்கள் கூறியபடி, சாத்தான் இந்த சூரா ஓதப்படும் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். வீட்டில் அமைதியும் பரகத்தும் இருந்தால், நீங்கள் செய்யும் தொழில், வேலை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் தானாகவே வெற்றி தேடி வரும்.

​மூன்றாவதாக, மனத் தூய்மை எனும் மேலாண்மை. சூரா பகராவின் 216-வது வசனத்தில், நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம், ஆனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். நீங்கள் ஒரு பொருளை விரும்பலாம், ஆனால் அது உங்களுக்கு தீமையாக இருக்கலாம். அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அன்றாட வாழ்வில் ஏதேனும் தடங்கல் அல்லது தோல்வி ஏற்படும் போது சோர்ந்து போகாமல், அல்லாஹ்வின் திட்டம் என் திட்டத்தை விட மேலானது என்ற இஸ்லாமிய விழுமியத்தை மனதில் வையுங்கள். இந்த நேர்மறை சிந்தனை உங்களை அடுத்த இலக்கை நோக்கி ஓட வைக்கும்.
​சுருக்கமாகக் கூறின், சூரா பகரா என்பது வெறும் ஓதிப் பார்க்கும் அத்தியாயம் மட்டுமல்ல; அது உங்கள் வாழ்வை ஒழுங்குபடுத்தும் ஒரு சிறந்த வழிகாட்டி. அதை ஓதுவதோடு, அதன் அர்த்தத்தைப் புரிந்து சாக்குப்போக்குகளைத் தவிர்த்து உழையுங்கள், வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்.

3 hours ago | [YT] | 81

TAMIL LIL QURAN

“தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்” 🌙✨

அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா
தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🕋🤍

அல்லாஹ்வுடைய கருணை, அமைதி, பரக்கத்
நம் அனைவரின் இல்லங்களிலும் என்றும் நிலைத்திருக்கட்டும்… ஆமீன் 🤲💖

📺 Subscribe Our YouTube islamicbayan Channels:

▶️ @TamillilQuran
▶️ @TamillilQuran & Hadees
▶️ @Jummaminbar
▶️ @fajirtvtamil

#EidUlAdha #EidMubarak #Hajj2026 #TamilIslamicPost #TamillilQuran #Jummaminbar #fajirtvtamil #IslamicReminder #Bakrid2026

1 day ago | [YT] | 226

TAMIL LIL QURAN

https://youtu.be/ha79aw0oDhw
🕋 அரஃபா தினம் – ஹஜ்ஜின் மிக முக்கியமான புனித நாள்! 🤲
இந்த நாளில் செய்யப்படும் துஆக்கள் மறுக்கப்படாத நாள் என இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது.
🌙 ஹிஜ்ரி 1447 அரஃபா தினத்தில் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு, அதிகமாக துஆ செய்து, நன்மைகளைப் பெறுவோம்.
📿 இன்று ஓத வேண்டிய முக்கிய துஆ:
“லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு...”
🤍 இந்த புனித நாளை வீணாக்காமல் திக்ர், துஆ, இஸ்திஃபார் மூலம் கழிப்போம்.
📤 இந்த செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மையைப் பெறுங்கள்.

2 days ago | [YT] | 54

TAMIL LIL QURAN

https://youtu.be/dt_RfNZqv1Y
🔴🕋 ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தக்பீர்! நாமும் சேர்ந்து கூறுவோம் தக்பீர்! #TamillilQuran #thakbeer

2 days ago | [YT] | 106

TAMIL LIL QURAN

நபி ஸல் அலைஹிவஸல்லம்
ஹஜ்ஜதுல் விதா உரை.

மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில் இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த
இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும் இந்த (பிறை 9ஆம்) நாளையும் இந்த (மக்கா)
நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும்
பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால்
அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல.

தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம்
செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின்
குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.

அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது
கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி
வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக எங்கள் குடும்பத்தில் கொலை
செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு
விடுகிறேன்.
அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான்
என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான
வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.

பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக
அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள்
மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி
அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய
வேண்டிய கடமையாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி
தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின்
எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே
வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள்.
ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை
நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள்
தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப்
படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப்
பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை
குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம்.

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக
ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும்
நிராசையடைந்து விட்டான். எனினும் நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில்
அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ
மகிழ்ச்சியடைவான்.

மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும்
ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி
அல்லாதவரை விட ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட ஒரு வெள்ளையருக்கு
கருப்பரை விட ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும்
இல்லை.
'மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில்
கூறுவீர்கள்?" என்று கேட்டார்கள்.
கூடியிருந்தோர் 'நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே
நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்" என்றார்கள்.
நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி பின்பு மக்களை
நோக்கித் திருப்பி 'அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!" என்று மூன்று முறை கூறினார்கள்.
இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்.
ஏனெனில் செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு
விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்.

நபி ஸல் அலைஹிவஸல்லம்
ஹஜ்ஜதுல் விதா உரை.

(ஸஹீஹ் முஸ்லிம் ஸ{னனுத் திர்மிதி முஸ்னது
அஹ்மது இப்னு ஜரீர் இப்னு ஹிஷாம்)

3 days ago | [YT] | 1,135

TAMIL LIL QURAN

யார் இந்த சமீரா மஹ்பூப்டீன்?
அவர் ஏன் காசாவுக்கான flotilla வில் கலந்து கொள்ள வேண்டும்?

சமீரா மஹ்பூப்டீன், மாவனெல்லயைச் சேர்ந்தவர், 10 வருடங்களுக்கு மேலாக கொழும்பில் வசிப்பவர், தனது இரத்தத்தில் ஊறிய தன்னார்வத் தொண்டுகளால் free palestine movement உடன் இணைந்து பலஸ்தீனுக்காக குரல் கொடுத்து வரும் இரு பிள்ளைகளின் தாய். st Johns ambulance உடன் இணைந்து முதலுதவிப் பணிகளுக்காக முன்னிற்கும் ஒரு first respondent .

இதற்கு மேலே அவரைப் பற்றிச் சொல்வதற்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர் மெலனி குணதிலக அவரது Fb இல் இட்ட பதிவு பொருத்தமாக இருக்கும்.

அரகலயவில் உண்ணாவிரதமிருந்த பௌத்த பிக்குவின் உடல்நிலையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லும் போது இரவாகியிருந்தது. நாங்கள் உடனே st Johns ambulance இடம் விரைந்தோம். அங்கு சென்றபோது ஹிஜாப் அணிந்த சிறிய பெண்ணொருவர் medicine cabinet ஐ ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அவரிடம் பௌத்த பிக்குவின் நிலையைச் சொல்லி அவருடைய Blood Pressure, Sugar அளவுகளை பார்க்கக் கூடியவர்கள் யாரும் இங்கு இல்லையா எனக் கேட்டோம்.

உடனே அவர் வாருங்கள் போவோம் என்றார். உங்களைத் தவிர பெரியவர்கள் யாரும் இல்லையா என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் நான் இரண்டு பிள்ளைகளின் தாய், ஹாமுதுருவின் உடல் நிலையை பரிசோதிக்க இந்த முதிர்ச்சி போதாதா என்று கேட்டார். சிறுமியாக நினைத்த அந்தப் பெண்ணின் பேச்சினால் வாய் பிளந்தாலும் வாயடைத்துப் போனோம்.

அவர் தேவையான kit களுடன் ஹாமுதுருவை நோக்கி விரைந்தார். நாங்கள் பின்னால் ஓடினோம். மிகவும் கரிசனையுடன் நோய் விசாரித்து பரிசோதனைகளை முடித்துவிட்டு அவசரத்தின் போது கையாள வேண்டிய விடயங்களையும் சொல்லித் தந்து விட்டுப் போனார். அதிர்ச்சியால் நாங்கள் உறைந்து போனோம்.

அவருடைய ஆளுமைக்கும் தலைமைத்துவப் பண்புக்கும் முன்னால் அவரது வயதைக் கேட்க நாங்கள் வெட்கப்பட்டோம். எந்த risk ஐயும் எடுத்து மனிதர்களுக்கு உதவும் உண்மையான மானிடவாதி. உறுதியின் மொத்த வடிவம். அரகலயவின் போது அவர் night shift தான் செய்தார். அவருடன் இருந்து இரவில் தேநீர் அருந்தும் போது உலக அரசியல் பற்றியும் உலக நடப்புகள் பற்றியும் எங்களுக்கு விளக்குவார்.
ஸமீரா , நீங்கள் ஒரு RockStar
இஸ்ரேல் சார்புக் கண்ணால் பார்ப்பவர்களுக்கு உங்களைப் பற்றி நீங்கள் எதனையும் நிறுவ வேண்டியதில்லை. ஏனென்றால் அவர்கள் ஒன்றில் அவர்களிடம் இருந்து வாசி பெறுபவர்கள் அல்லது உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத முட்டாள்கள்.

நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள். வாழ்த்துக்கள்!

3 days ago | [YT] | 107

TAMIL LIL QURAN

மனிதர்கள் முடியாது என்று கூறியது கூட சாத்தியமாகிவிடும்,
ஏனெனில், “குன் ஃபயகூன்” என்று கூறினால் அசாத்யமும் சாத்தியமாகிவிடும். 🤍

3 days ago | [YT] | 334

TAMIL LIL QURAN

https://youtu.be/_0gvF7dVU70
🕋🤲 அரஃபா தினத்தில் ஓதும் சக்திவாய்ந்த துஆ! | Arafah Day Dua in Tamil 🌙 #TamillilQuran #arafadaydua

3 days ago | [YT] | 77

TAMIL LIL QURAN

https://youtu.be/dSA1whsMBVk
🕋🌙ஹஜ் செய்த நன்மை கிடைக்க வேண்டுமா? இந்த 10 அமல்களைச் செய்யுங்கள்! #TamillilQuran #hajj2026 #hajj

3 days ago | [YT] | 35