Tamil Novels Audiobooks

All novels posted here are shared with the permission of the novel owners.
நாட்டுடைமையாக்கப்பட்ட கதைகளும், ஒரு சில எழுத்தாளர்களின் அனுமதியுடன் அவர்களுடைய கதைகளும் பகிரப்படும்.





Tamil Novels Audiobooks

https://youtu.be/wJDOXsKTduA
கலைஸ்ரீயின், "மெய்யில் உறைந்த வனமலரே" RJ சுஜி சண்முகம் குரலில் கேட்டு மகிழுங்கள்.
காடே உலகமென வாழும் முரட்டு ரேஞ்சர் வெற்றி! மறுபுறம் முதுமலைக் காட்டின் யானைகளை ஆராய்ச்சி செய்ய வரும் நிதாஷினி!
இவர்களின் மோதலில் தொடங்கும் காதல், காட்டின் சவால்களையும் குடும்ப ஈகோக்களையும் கடந்து எவ்வாறு வெல்கிறது?
திருப்பங்களும் தீராக் காதலும் நிறைந்த ஒரு கம்பீரமான வனக் காதல் பயணம்!

11 hours ago | [YT] | 28

Tamil Novels Audiobooks

https://youtu.be/Lbq5vPQ7ZO8

மாநிறத்தில் லட்சணமான முகம், காற்றில் கலைந்த அடர்ந்த கூந்தல், கோபத்தில் சிவந்திருந்த அவளது பெரிய விழிகள் அவளை இன்னும் ஆ*பத்தான அழகியாக காட்டியது. கருப்பு ஜீன்ஸும், அடர் சிவப்பு குர்த்தியும் அணிந்திருந்தவள், பயந்து நிற்கும் பெண்ணைப் போல அல்ல... வேட்டைக்காரர்களின் நடுவே சிக்கிய பெண் சிங்கம் போலவே நின்றாள்.
ராஜதேவா மெல்ல அவளருகே வந்தான். அவளது அஞ்சாத பார்வை அவனுக்கு புதிதாய் தோன்றியது. இதுவரை அவனைக் கண்டு நடுங்காதவர்கள் அந்த ஏரியாவில் எவரும் இல்லை. ஆனால் இந்த சின்னப் பெண் மட்டும், அவன் கண்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அசராமல் நின்ற விதம், அவனுள் இதுவரை அறியாத ஒரு உணர்வை கிளறியது.

13 hours ago | [YT] | 11

Tamil Novels Audiobooks

https://youtu.be/Tg7bKkAgMIs
நிதாஸ்ரீயின், "தலைவனிடம் தூது போவதாரடியே" rj ஜானுவின் குரலில் கீடு மகிழுங்கள்.

செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அர்ஜுன், குடும்பத்தின் கட்டாயத்தால் தனக்குப் பிடிக்காத அனன்யாவை திருமணம் செய்து கொள்கிறான். உடல் தோற்றத்தை மட்டுமே வைத்து அவளை வெ*றுக்கும் அர்ஜுனின் கடுமையான வார்த்தைகளையும், அன்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அனன்யா அமைதியாகத் தாங்கிக் கொள்கிறாள். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குள் தொடர்ந்து மோ"தல்கள் ஏற்பட்டாலும், சில எதிர்பாராத தருணங்கள் அர்ஜுனின் மனதில் மாற்றத்தின் விதையை விதைக்கத் தொடங்குகின்றன. வெ*றுப்பாகத் தொடங்கிய இந்த உறவு உண்மையான காதலாக மலருமா என்பதே கதையின் மையம்.

18 hours ago | [YT] | 91

Tamil Novels Audiobooks

https://youtu.be/swYh42j0RjQ
"அடர்ந்த வனத்தில் தொடங்கிய சந்திப்பு... தினமும் மோதும் இரு இதயங்கள்...! கோ*பத்தின் பின்னால் மறைந்திருக்கும் காதல், உயிரையே பணயம் வைக்கும் ஆ*பத்துகளின் நடுவே மலரத் தொடங்குகிறது. இறுதியில் வெல்லப் போவது அவர்களின் பிடிவாதமா... காதலா?"

1 day ago | [YT] | 55

Tamil Novels Audiobooks

https://youtu.be/Lbq5vPQ7ZO8

மாநிறத்தில் லட்சணமான முகம், காற்றில் கலைந்த அடர்ந்த கூந்தல், கோபத்தில் சிவந்திருந்த அவளது பெரிய விழிகள் அவளை இன்னும் ஆ*பத்தான அழகியாக காட்டியது. கருப்பு ஜீன்ஸும், அடர் சிவப்பு குர்த்தியும் அணிந்திருந்தவள், பயந்து நிற்கும் பெண்ணைப் போல அல்ல... வேட்டைக்காரர்களின் நடுவே சிக்கிய பெண் சிங்கம் போலவே நின்றாள்.
ராஜதேவா மெல்ல அவளருகே வந்தான். அவளது அஞ்சாத பார்வை அவனுக்கு புதிதாய் தோன்றியது. இதுவரை அவனைக் கண்டு நடுங்காதவர்கள் அந்த ஏரியாவில் எவரும் இல்லை. ஆனால் இந்த சின்னப் பெண் மட்டும், அவன் கண்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அசராமல் நின்ற விதம், அவனுள் இதுவரை அறியாத ஒரு உணர்வை கிளறியது.

1 day ago | [YT] | 47

Tamil Novels Audiobooks

https://youtu.be/lYrL8EHmv9g
மூன்று ஆண்டுகள் பிரிந்திருந்த கணவன்–மனைவி கதிர்நயனனும் பிரக்யாவும் மீண்டும் சந்திக்கும் தருணத்தில், பழைய கா*யங்கள் மீண்டும் உயிர்பெறுகின்றன.
காதல், கோபம், த*வறான புரிதல்கள், இழந்த குழந்தையின் வ*லி ஆகியவை அவர்களின் உறவை சோதிக்கின்றன.
பிரக்யாவின் மனதை மீண்டும் வெல்ல கதிர்நயனன் போராட, மறைக்கப்பட்ட உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன.
காதலுக்கும் பழிவாங்கும் உணர்வுக்கும் இடையே தத்தளிக்கும் இருவரின் வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது.
இறுதியில், இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்து அவர்கள் காதல் வெல்லுமா என்பதே "உன்னில்.. ஒரு நஷா இராவணா..!!"

2 days ago | [YT] | 102

Tamil Novels Audiobooks

https://youtu.be/QQuRt9tMh8g

கம்பீரமான காவல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் திறமையான கல்லூரி மாணவி பவித்ரா இருவரும் காதலித்து, அனைவரின் முன்னும் தங்கள் உறவை வெளிப்படுத்துகிறார்கள்.
இருவரின் காதல் குறும்பும், நகைச்சுவையும், ஆழமான பாசமும் நிறைந்த இனிய தருணங்களால் மலர்கிறது.
ஆனால் கார்த்திகேயனின் உறவினர்களில் சிலரின் பொறாமை மற்றும் குடும்ப அரசியல் அவர்களின் காதலுக்கு தடையாக மாறுகிறது.
இதற்கிடையில் மற்றொரு குடும்பத்தில் மறைக்கப்பட்ட உறவுகள், து*ரோகம் மற்றும் இரட்டை வாழ்க்கை புதிய பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
காதல், குடும்ப மோதல்கள், சதிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய உணர்வுப்பூர்வமான காதல் நாவல்தான் "பன்னீரில் ஆடும் ரோஜாக்கள்".

2 days ago | [YT] | 81

Tamil Novels Audiobooks

https://youtu.be/jJrMoN_xVgI


காதலும் குடும்பப் பாசமும் பின்னிப் பிணைந்த கிராமிய பின்னணியில் நகரும் உணர்வுபூர்வமான நாவல் இது.
பாலமுருகன் மற்றும் மீனா இடையேயான ஆழமான காதல், சூழ்நிலைகளால் பல சோதனைகளை எதிர்கொள்கிறது.
குடும்ப உறவுகள், தியாகம், பொறுப்பு மற்றும் மரபுகளுக்கிடையேயான மோதல்கள் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன.
ஒவ்வொரு திருப்பமும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் உறவுகளின் மதிப்பையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
இறுதியில், காதல், நம்பிக்கை மற்றும் குடும்ப ஒற்றுமையின் வெற்றியை மனதை நெகிழ வைக்கும் வகையில் சொல்லும் முழு நீள நாவல்.

3 days ago | [YT] | 106

Tamil Novels Audiobooks

hhttps://youtu.be/b3d60C1bcVI


மூன்று மாடிகள் கொண்ட அந்த திருமண மண்டபத்தில் மொட்டை மாடிக்கு
வந்தவள் மூச்சு வாங்கியபடி நிற்க, மீண்டும் சத்தங்கள் எல்லாம் ஓய்ந்து
நிசப்தமாக, அவள் வந்து சேர்ந்து விட்டாள் என்பதை உணர்ந்து காணொளி
அழைப்பாக அழைத்தான் ஜெகதீஸ்வரன்.

அழைப்பை ஏற்றவளை கண்களுக்குள்ளும் மனதிற்குள் நிறைத்து கொண்டவன்,
புகைப்படமாகவும் சேமித்துக் கொண்டான்.

கண்களை உருத்தாத செம்பவள நிற பட்டுப் புடவையில் பாந்தமாக இருந்தவள்
அவனை காந்தமாக ஈர்த்தாள்.

நெற்றியில் சந்தனம் குங்குமம் கீற்றாய் அரக்கு நிற நீள் வட்ட பொட்டின் மீது
தீட்டி இருக்க, நெற்றியோரம் வழிந்த ஒற்றை துளி வியர்வையில் ஒரு சில
கூந்தலிழைகள் ஒட்டிக்கொண்டிருந்தது.

சற்று பெரிய ஜிமிக்கி அவள் கன்னத்தில் உரசிக் கொண்டு இருக்க,
உள்ளங்கழுத்தை ஒட்டி எப்பொழுதும் அவள் அணிந்திருக்கும் சிறு
சங்கிலியோடு இன்று கூடுதலாய் மார்பு வரை இருந்த நீண்ட ஆரத்தையும்
அணிந்திருந்தவளின் வலது புற தோளில் வழிந்து கொண்டிருந்தது அவள் சூடி
இருந்த மல்லிகை சரம்.

அவளில் அலைபாய்ந்த அவனது விழிகளை கட்டுப்படுத்தி அவள் முகத்தை
மீண்டும் பார்க்க அஞ்சனம் பூசிய விழிகள் அவனை மொத்தமாய் அடித்து
சாய்த்தது.

மார்பில் கையை வைத்து லேசாக தட்டிக் கொடுத்தவன், "யூ ஆர் கி*ல்லிங் மீ..."
என்றான் முணுமுணுப்பாக.

லேசாக மூச்சு வாங்கிய படி "ஜெகன்..." என்று அழைத்தவள் கண்களை
வஞ்சனை இன்றி நிறைத்தான் ஜெகதீஸ்வரன்.

அடர் ஊதா நிற சட்டை அணிந்து இருந்தவன் எப்பொழுதும் போல
முழுக்கையை முழங்கைக்கு கீழ் மடித்துவிட்டிருந்தான். அலுவலகம் முடிந்து
கிளம்புவதற்காக ஆயத்தமாகி இருந்ததில் சட்டையின் மேல் இரு பட்டன்களை
திறந்து விட்டிருக்க கழுத்தைச் சுற்றி இருக்கும் தங்கச் சங்கிலி முழுதாய்
தெரிய, மார்பின் ரோமங்கள் லேசாக தெரிந்தது.
சில நிமிடங்கள் இருவருக்கும் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட
தோன்றவில்லை. பார்வையால் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருக்க,
ஒரு கட்டத்தில் சக்தியால் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

காதல் சொல்லி இரண்டாம் நாளில் பிரிந்து வந்திருக்க மூன்றாம் நாளில்
மூச்சை அடைத்ததோ அந்தப் பிரிவு இருவருக்கும்?

அவள் பார்வைத் தாழ்ந்த நொடி தொண்டையை செறுமிய ஜெகனின் சத்தத்தில்
மீண்டும் அவனைப் பார்த்தாள் சக்தி.
"சக்தி..." அவன் அழைக்க, அவன் விழிகளை அவள் பார்க்க....

3 days ago | [YT] | 89