சிறந்த தமிழ் பேச்சுகள்
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
உரைவீச்சு
🌸 திருக்குறள் 3 🌸
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
✨ பொருள்:
மலர் போன்ற தூய மனம் கொண்ட உயர்ந்தவரின் வழியைப் பின்பற்றுபவர்களின் புகழும் நற்பெயரும் உலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.
💡 நல்லவர்களைப் பின்பற்றுவது வாழ்க்கையை உயர்த்தும்.
#திருக்குறள் #குறள்3 #தமிழறிவு #நல்லொழுக்கம் #உரைவீச்சு
2 weeks ago | [YT] | 30
View 1 reply
உரைவீச்சு
திருக்குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
📖 பொருள்:
எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், தன்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் உயர்ந்தவர்களை மதித்து வணங்கும் பண்பு இல்லையெனில் அந்த கல்வியால் பெரிதும் பயன் இல்லை.
🌱 கல்வி அறிவை வளர்க்கும்;
🙏 பணிவு மனிதனை உயர்த்தும்.
#திருக்குறள் #குறள்2 #வள்ளுவர் #தமிழ் #பண்பாடு #அறிவு #பணிவு
2 weeks ago | [YT] | 28
View 2 replies
உரைவீச்சு
📖 திருக்குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
📝 பொருள்:
எழுத்துக்களுக்கு 'அ' எப்படி முதன்மையோ, அதுபோல உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆதிபகவனே முதன்மை.
✨ வாழ்க்கையின் ஆதாரத்தை நினைவூட்டும் வள்ளுவரின் முதல் குறள்.
#திருக்குறள் #Thirukkural #தமிழ் #வள்ளுவர் #Uraiveechu
3 weeks ago | [YT] | 32
View 0 replies
உரைவீச்சு
🎙️ பேச்சுக்கலையின் சிறப்புகள்
🗣️ தெளிவாகப் பேசும் திறனை வளர்க்கிறது.
💡 சிந்தனைத் திறனை மேம்படுத்துகிறது.
🤝 மனித உறவுகளை வலுப்படுத்துகிறது.
👂 பிறரைக் கவனமாகக் கேட்கும் பழக்கத்தை உருவாக்குகிறது.
📚 அறிவை பகிர்ந்து வளர்க்க உதவுகிறது.
🎯 வாழ்க்கை இலக்கை அடைய வழிகாட்டுகிறது.
"சொல்லின் வலிமை மனிதனின் வெற்றியை நிர்ணயிக்கிறது!"
உங்களுக்கு பேச்சுக்கலையின் எந்த சிறப்பு மிகவும் பிடித்தது? கருத்தில் பகிருங்கள்! 👇
#பேச்சுக்கலை #உரைவீச்சு #தமிழ்
4 weeks ago | [YT] | 20
View 0 replies
உரைவீச்சு
குறள்:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
#திருக்குறள் #உரைவீச்சு #thirukkural #uraiveechu
1 year ago | [YT] | 18
View 0 replies
உரைவீச்சு
குறள்:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி.
விளக்கம்:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
#திருக்குறள் #உரைவீச்சு #thirukkural #uraiveechu
1 year ago | [YT] | 12
View 0 replies
உரைவீச்சு
குறள்:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
விளக்கம்:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
1 year ago | [YT] | 8
View 0 replies
உரைவீச்சு
குறள்:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
விளக்கம்:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
1 year ago | [YT] | 21
View 2 replies
உரைவீச்சு
குறள்:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
விளக்கம்:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
#uraiveechu #thirukkural
1 year ago | [YT] | 25
View 0 replies
உரைவீச்சு
குறள்:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
விளக்கம்:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
#thirukkural #uraiveechu
1 year ago | [YT] | 23
View 0 replies
Load more