Tamil Audio Books Of Nirosha Karthick.
Tamil Novels List
1.யசோதையின் இளஞ்சிங்கம்
2.உன் நினைவே சுகமாய்
3.சாரலே ஆசையாய்
4.கனாவில் உன் மொழி.
5.கண்களில் தோற்கிறேன்
6.இசைந்தாடுதே தென்றல்
7.உயிராய் உணர்வாய்
8.இதயம் பேசுதே
9.அன்பின் சீற்றம் அணையுமோ
10.உருகாதே என் பனிப்பூவே
11.கண் பாராயோ..வந்து சேராயோ
12.உன்னை சேர பிறந்தேனே
13.உறவெல்லாம் நீயானாய்
13.உள்ளம் உன்னில் மூழ்குதே
14.உன் விழிகளில் என்னை தேடினேன்
15.காணும் யாவிலும் நீயே
16.அவள் முகம் பார்த்து
17.உயிரினில் இனிக்கிறாய் நீயடா..!!
18.துளி மையல் கொண்டேன்..!!
19.என் கனா நீ
20.தித்திக்குதே காதல்
21.நான் மெய் மறந்து மாற..!!
22.நீ வந்தாய் என் வாழ்விலே
23.கண் ஜாடையில் எனை வெல்கிறாய்
24.கரைந்தே போனதே நெஞ்சம்
25.மெல்ல சிறை செய்தாய்
26.இவன் வசம் நான்
27.கண் மூடினேன் மெய் தீண்டினாய்
28.தீராக் காதல் பேசுமோ விழிகள்
29.ஜீவன் மருகி நின்றேன்
30.இவன் காதல் மோட்சம் நான்
31.நெஞ்சம் மயங்குது மையலில்
32.காதல் நெஞ்சம் மறக்குமோ
33.யமுனையில் உருகிடும் நாள் இதுவோ
my facebook id
www.facebook.com/niroshakarthicknovels
NK Tamil Audio Novels
சூர்யா சரவணன் அவர்களின் என் மனம் கொய்தவள் நாவல் இன்னொரு பகுதி இருக்கிறது,விரைவில் கதையின் மூன்றாம் பாகம் பதிவிடப்படும்
3 weeks ago | [YT] | 82
View 1 reply
NK Tamil Audio Novels
youtube.com/shorts/n2MEF3xYpI...
3 weeks ago | [YT] | 5
View 0 replies
NK Tamil Audio Novels
https://youtu.be/0rauwbuMFzE
சூர்யா சரவணன் "என் மனம் கொய்தவள் நிறைவுப் பகுதி " கதையை rj
ஆருஷா பிரேம் குரலில் கேட்டு மகிழுங்கள்.
“வசந்த் இந்த டென்டர் நமக்குதான் கிடைக்கணும். நீ ராகவ் ஆபிஸில நம்ம ஆளை செட் பண்ணி அவங்க கொட்டேஷனை கொண்டு வரச் வைச்சுரு ” என்று பரந்தாமன் நரித்தனத்தை காண்பித்தார்
“ இந்த முறை டெண்டர் நமக்குத்தான்” என்றான்.
“என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியா எனக்கு தெரியாது, இந்த டெண்டர் நமக்கு கிடைச்சாகணும்” என்று ஆணித்தரமாக அடித்துக் கூறினார்.
3 weeks ago | [YT] | 97
View 0 replies
NK Tamil Audio Novels
https://youtu.be/YUF4PQxFC60
Paper Space FM Presents Konjam Vanjam Kondenadi
எழுத்தாளர் மோனிஷா தமிழ் மோனி அவர்களின் கொஞ்சம் வ*ஞ்சம் கொண்டேனடி கதையை ஆர் ஜே சித்ரா குரலில் கேட்டு மகிழுங்கள்.
அக்காவை குடும்பத்திலிருந்து பிரித்து மலேசியாவிற்கு அழைத்துச் சென்ற மாமாவின் மீது
கோபத்துடன் வாழ்கிறான் நாயகன்.
பல வருடங்கள் கழித்து மாமன் மகளை காதலில் விழவைத்து
அவளைத் திருமணம் செய்து மாமாவை தனிமைப்படுத்த திட்டமிடுகிறான்.
ஆனால் கோபத்தில் தொடங்கிய காதல்,உண்மையான காதலாக மலர,
கோபம் வென்றதா... காதல் வென்றதா என்ற உணர்ச்சிப் போராட்டம் ஆரம்பமாகிறது.
3 weeks ago | [YT] | 98
View 1 reply
NK Tamil Audio Novels
https://youtu.be/MyEZNFUr23M
எழுத்தாளர் சூர்யா சரவணனின் , "என் மனம் கொய்தவள்" கதையின் முதல் பாகத்தை RJ ஆருஷா பிரேம் குரலில்... கேட்டு மகிழுங்கள்
தேவதை போல் வந்து நிற்கும் தாமரையை கண்ட பிரபாவதி, "மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து போகும் வரை நீ வெளியே வரக் கூடாது" என்று சொல்லி விட்டார்.
ராகவனது ஆடி கார் ராஜதுரையின் வீட்டின் வாசலில் நின்றது. அதில் முதலில் இறங்கியது பானுமதி, அவரை தொடர்ந்து சண்முகம் இறங்க, கடைசியாக மிடுக்குடன் கண்ணில் கூலர்சுடன் இறங்கினான் ராகவன்.
ராகவன் காரிலிருந்து இறங்கியவுடன் மாடியில் சிரிப்பு சத்தம் கேட்டு மேலே அண்ணார்ந்து பார்த்தான். அவன் முதலில் பார்த்தது தாமரையை தான். ஆம். தாமரை தலையை வெளியில் நீட்டி தனது மாப்பிள்ளை எப்படியிருப்பார் என்று பார்த்தாள்.
ராகவன் தாமரை தான் பெண் என்று நினைத்துவிட்டான்.
3 weeks ago | [YT] | 123
View 0 replies
NK Tamil Audio Novels
https://youtu.be/bNkZh5hFtos
வணக்கம் நட்புகளே…
பிரேமா கமேஸ்வரனின் கதைகளின் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
அக்கினியின் சாரலில் ஆரம்பித்த பயணம் “கனியுமா காயம் தந்த காலம்?” வந்து சேர்ந்து இருக்கிறது. இந்த எனது எழுத்து பயணம் தொடர முழுக்க முழுக்க நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பும் வார்த்தைகளும் மட்டுமே காரணம். உங்களின் அன்புக்கு பெருநன்றிகள்.
அக்கினியின் சாரல், விடியல் எல்லாம் உன் உலா, நீங்காத நிழலாய் புதினங்களைத் தொடர்ந்து நான்காவது புத்தகமாக வரும் கனியுமா காயம் தந்த காலம் எனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான புதினம்.
காதலின் இருவேறு பரிமாணங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்ட புதினம் இது. தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தில் 2024 வருடம் நடந்த போட்டியில் பரிசு பெற்ற கதை. ஆன்லைன் வாசக பெருமக்களின் பெரும் அன்பையும், விமர்சனங்களையும் எனக்கு பெற்று தந்த புதினம் இது
மங்கையாய் கனவுகளில் தொடங்கி மடந்தையான ஒருவரின் காதல் வாழ்க்கை பயணம்!
பயணம் போகலாமா அவளுக்குத் துணையாக.. வாருங்கள் அவளது உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
கதைக்கு குரலால் உயிர் கொடுப்பது உங்கள் RJ. கிருத்திகா கணேஷ்
இந்த கதை உங்களுக்கு பிடிச்சு இருந்தா Prema kameswaran audio novels சேனலை subscribe பண்ணுங்க… கதைகளை கேட்க விரும்பும் உங்களோட நட்புக்களுக்கும் share பண்ணுங்க… உங்களோட கருத்துக்களை மறக்காம சொல்லுங்க…
3 weeks ago | [YT] | 75
View 0 replies
NK Tamil Audio Novels
"எப்படி தான் மோப்பம் பிடிப்பியோ தெரியாது., அடுத்த தெருவுல இருக்குற கோயில்ல சக்கரை பொங்கல் கொடுக்கிறப்ப., வெண்பொங்கல் கொடுக்கும் போதெல்லாம் கரெக்ட்டா போய் வாங்கிட்டு வந்துடுறா"., என்று ரதி சொல்லவும்.,
அந்த மோப்பம் பிடிக்கிற சக்தி எனக்கு இல்லை., எங்க பாட்டிக்கு தான் இருக்குன்னு நினைக்கிறேன்., கரெக்டா என்னைக்கு சக்கரை பொங்கல்., வெண்பொங்கல் கொடுக்கிறாங்களோ அன்னைக்கு எல்லாம் எங்க பாட்டி என்ன கோவிலுக்கு போக சொல்லி முதல் நாளிலேயே போன்ல ஆர்டர் போடுறாங்க., அவங்களுக்கு தெரிந்திருக்குமோ"., என்று வேண்டுமென்றே ஹேமா ரதியிடம் கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
ரதியோ "ஆமாடி., உங்க பாட்டி கிருத்திகைக்கு கோயிலுக்கு போ., அந்த நாளுக்கு கோவிலுக்குபோ., பிரதோஷத்திற்கு கோயிலுக்கு போ ன்னு சொல்றாங்க., நீ ஆபீஸ் போறதுக்காக கோயில்ல தலையை காமிச்சிட்டு.., சாமிகிட்ட பை பை சொல்லிட்டு ஓடி வந்துடுற.., இது உங்க பாட்டிக்கு தெரியாது.., கேட்டா நான் கோவிலுக்கு போனேன்.., வேணாலும் பூசாரி தாத்தா கிட்ட கேளுங்க., அப்படின்னு சொல்லிட்டு போற..,
உங்க பாட்டி தொல்லை தாங்காம நீ காலையிலேயே அட்டனன்ஸ் போட்டுட்டு வந்துடுற., சாமி நான் வந்துட்டேன் இன்னைக்கு என் கடமைக்கு அப்படின்னு சொல்லிட்டு வர்றவ.., நல்ல பிள்ளையா சக்கரை பொங்கல் வாங்கிட்டு வர்றது யாருக்காவது தெரியுமா".., என்று கேட்டாள்.
"ரகசியத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளனும்., இப்படி எல்லாம் பப்ளிக்கா போட்டு உடைக்கக் கூடாது., நமக்கு தேவை கோவில் சக்கரை பொங்கல்., அந்த டேஸ்ட் கிடைக்கனும்., .,
அது மட்டும் தான் நம்ம பார்க்கணும்"., என்று ஹேமா சொன்னாள்.
குழலியோ அதெல்லாம் சரிதான்., நீ கோயிலுக்கு போறது அது யெல்லாம் பாட்டிக்கு தெரியுது.., ஆனா கோயிலுக்கு போயிட்டு வர சொல்லுற இந்த மாதிரி நாள் எதையாவது சரியா கடைபிடிக்கிறீயா.., நல்ல கேண்டீன்ல வந்து நான்வெஜ் வெளுத்து வாங்குற.,
பாட்டி சனிப்பிரதோஷம் கோயிலுக்கு போக சொன்னாங்க., நீ அன்னைக்கு ஆபீஸ் இல்லாத போதும்., காலையிலேயே போய் சாமி கும்பிட்டு வந்துட்டு மத்தியானம்., மீன் குழம்பு மீன் ப்ரை ன்னு வைத்து வெளுத்து வாங்குறது பாட்டிக்கு தெரியுமா"., என்று அவளிடம் கேட்டாள்.
3 weeks ago | [YT] | 122
View 2 replies
NK Tamil Audio Novels
https://youtu.be/Z2N4GGh-sWw
அவன் மீதான அவளின் காதலை தீபகாந்தனுக்குத் தெளிவாய் எடுத்துரைத்தது.
"சௌமித்ரா.. டேய்.. தேங்க்ஸ்டா.."
"ம்ம்.. நானும் தேங்க்ஸ்.."
"அதை நிமிர்ந்து என் முகத்தப் பார்த்து சொன்னேன்னா எனக்கு இன்னும் சந்தோசமா இருக்குமில்ல.."
கேட்டவனின் கேள்வியில்.. தலை நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவளின் முகத்தினைத் தன் கரங்களால் சிறைப்படுத்தி.. மெல்லக் குனிந்து சௌமித்ராவின் இதழ்களை சிறைபிடித்தான் தீபகாந்தன்..
அணைப்பினுள் அடங்கிக் கொண்டாள் சௌமித்ரா.
3 weeks ago | [YT] | 93
View 0 replies
NK Tamil Audio Novels
https://youtu.be/QbYMD_23hbE
“வேலை இருக்குன்னு சொன்ன, என்முகத்தைப் பார்த்துட்டு இருக்க”.
“ஹலோ நான் ஒண்ணும் உங்களைப் பார்க்கல”.
“அப்பப் போக வேண்டியதுதான”.
“போகாம, இங்கயேவா நிப்பாங்க வரேன்” என ஆனந்தி கிளம்ப,
“ஆனந்தி” என அரவிந்த் அழைக்க,
“என்ன”?
“உனக்கு புடவை ரொம்ப அழகாக இருக்கு” என சொல்லிவிட்டு அரவிந்த் சென்று விட்டான்.
“ஆனந்திக்கு அப்படியொரு சந்தோஷம். முதன்முதலாக தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அன்றைய நாள் முழுவதும் அவன் பேசிய வார்த்தைகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
4 weeks ago | [YT] | 77
View 0 replies
NK Tamil Audio Novels
https://youtu.be/QbYMD_23hbE
“வேலை இருக்குன்னு சொன்ன, என்முகத்தைப் பார்த்துட்டு இருக்க”.
“ஹலோ நான் ஒண்ணும் உங்களைப் பார்க்கல”.
“அப்பப் போக வேண்டியதுதான”.
“போகாம, இங்கயேவா நிப்பாங்க வரேன்” என ஆனந்தி கிளம்ப,
“ஆனந்தி” என அரவிந்த் அழைக்க,
“என்ன”?
“உனக்கு புடவை ரொம்ப அழகாக இருக்கு” என சொல்லிவிட்டு அரவிந்த் சென்று விட்டான்.
“ஆனந்திக்கு அப்படியொரு சந்தோஷம். முதன்முதலாக தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அன்றைய நாள் முழுவதும் அவன் பேசிய வார்த்தைகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
4 weeks ago | [YT] | 62
View 0 replies
Load more