ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

வணக்கம் நேயர்களே!
உங்கள் உள்ளம் கவர்ந்த பிரபல எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் அழகிய காதல், குடும்பம், உணர்வு நிறைந்த நாவல்கள் அனைத்தும் இங்கு ஒலி வடிவிலும், வாசிப்பு வடிவிலும் பகிரப்படுகின்றன.

படிக்க நேரமில்லாதவர்களுக்கும், கதைகளை கேட்டு ரசிக்க விரும்புபவர்களுக்கும் இந்த சேனல் ஒரு சிறந்த இடமாக இருக்கும். மனதை வருடும் கதைகள், நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள், வாழ்க்கையை உணர்த்தும் சம்பவங்கள் — இவை அனைத்தையும் நீங்கள் இங்கு அனுபவிக்கலாம்.

உங்களுடைய கருத்துகளை கமெண்ட்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பிடித்திருந்தால் Like & Share செய்யுங்கள்
உங்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுக்கும் நம் சேனலை அறிமுகப்படுத்துங்கள்.

மறக்காமல் Subscribe செய்து Bell Icon கிளிக் பண்ணி All option தேர்வு செய்து விடுங்கள் — புதிய கதைகள் உடனுக்குடன் உங்களை வந்தடையும்.
நன்றி…
Welcome to our channel for Ramanichandran Tamil novel audiobooks — listen to heart-touching romantic, family, and love stories in audio narration anytime, anywhere.
Don’t forget to Subscribe
Thank you for your support ❤️



ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/GvkGFd2vSX8
RC Novels Presents,
அதற்கொரு நேரமுண்டு
Written by Ramanichandran
Narrated by RJ Abinaya Nagaraj

மனோகரி தனது குடும்பத்தின் கட்டுப்பாடுகளுக்குள் வளர்ந்தாலும், உள்ளுக்குள் தனித்த சுதந்திர எண்ணங்களுடன் வாழ்கிறாள். அவளின் வாழ்க்கையில் திடீரென பல திருப்பங்கள் உருவாகின்றன. குடும்ப மரியாதை, உறவினர்களின் எதிர்பார்ப்பு, காதல், தவறான புரிதல்கள் ஆகியவை அவளை மனஅழுத்தத்தில் தள்ளுகின்றன.

கதையில் மனோகரிக்கும் தியாகு என்பவருக்கும் இடையே மெதுவாக உருவாகும் பாசம் முக்கிய அம்சமாக வருகிறது. ஆனால் சூழ்நிலைகள், குடும்ப சிக்கல்கள், மற்றவர்களின் தலையீடு காரணமாக அவர்கள் உறவு பல தடைகளை சந்திக்கிறது. ஒருபுறம் மனோகரியின் மனவேதனை, மறுபுறம் அவளை புரிந்துகொள்ள முயலும் நாயகன் — இவை கதையை உணர்ச்சிபூர்வமாக நகர்த்துகின்றன.

நாவலின் பல பகுதிகளில் குடும்ப உறவுகள், பெண்ணின் மனநிலை, மரியாதை, பொறுப்பு, காதலின் உண்மை ஆகியவை நன்றாக வெளிப்படுகின்றன. இறுதியில் பல தவறான புரிதல்கள் நீங்கி, உண்மையான அன்பும் நம்பிக்கையும் வெல்லும் வகையில் கதை நகர்கிறது.

இந்த நாவல் மென்மையான காதல், குடும்ப உணர்வுகள், மற்றும் பெண்ணின் உள்ளுணர்வுகளை விரும்பும் வாசகர்களுக்கு பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

1 week ago | [YT] | 113

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/VDS3ITmgwXw
ரமணிசந்திரனின். "கண்ணிலே இருப்பதென்ன " கதையை RJ சுஜா குரலில் கேட்டு மகிழுங்கள்.
காதல், நம்பிக்கை, , மனவே-தனை ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்ட நாவல்.

நாயகி வினயமாலா, ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்டாக வேலை செய்கிறாள். தைரியமான, நேர்மையான, தன்னம்பிக்கை கொண்ட பெண். வேலை இடத்தில் பெண்களை தவறாக அணுகும் ஆண்களை அவள் நேராக எதிர்கொள்கிறாள். அவளுடன் வேலை பார்க்கும் வின்சென்ட் அவளின் நல்ல நண்பனாக மாறுகிறான். ஆனால் வினயமாலாவின் உள்ளத்தில் ஆழமான காயம் ஒன்று மறைந்திருக்கிறது.

அந்த காயத்தின் காரணம் அவளுடைய கணவன் நரேந்திரன். வேலை தேடி சென்றபோது அவள் அவனை சந்திக்கிறாள். ஆரம்பத்தில் சிறிய misunderstandings மூலம் தொடங்கும் அவர்களின் உறவு, சீக்கிரமே காதலாக மாறுகிறது. குடும்ப எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் சொர்க்க வாழ்க்கை போல மகிழ்ச்சியாக செல்கிறது.

ஆனால் அதன்பிறகு நரேந்திரனின் நடத்தையில் மாற்றம் தெரிகிறது. வீட்டுப் பணிப்பெண் கற்பகம், நரேந்திரன் மற்றொரு பெண்ணுடன் சுற்றுவதை வினயமாலாவிடம் சொல்கிறாள். முதலில் அதை நம்ப மறுக்கும் வினயமாலா, பின்னர் தானே கண்கூடாக அவனை மற்றொரு பெண்ணுடன் பார்க்கிறாள். அதனால் அவளின் உலகமே சிதறி விடுகிறது.

கணவனின் துரோகம், உடைந்த நம்பிக்கை, மனஅழுத்தம் ஆகியவற்றால் வினயமாலா அவனை விட்டு பிரிந்து தனியாக வாழ ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளது மனதில் இன்னும் அவன் மீதான காதலும், கோபமும், ஏக்கமும் கலந்தே இருக்கும்.

1 week ago | [YT] | 94

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/ENAtLG4EQ6A

எழுத்தாளர் பிரேமா காமேஸ்வரன் அவர்களின் கை கோர்க்கும் போதெல்லாம் பகுதி 2 கதையின் நிறைவுப் பகுதியை ஆர் ஜே சுபீதா கண்ணன் குரலில் கேட்டு மகிழுங்கள்.

குடும்ப பாசமும் காதலும் ஒன்றாக பின்னிப்பிணையும் அழகான பயணம்தான் *கை கோர்க்கும் போதெல்லாம்*.
விஷ்ணு மற்றும் நித்தியா கல்யாணி பல தடைகளையும் உறவுச் சிக்கல்களையும் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள்.
குடும்பத்தின் ஒற்றுமை, தியாகம், நம்பிக்கை ஆகியவை அவர்களின் வாழ்க்கையை புதிய திருப்பத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
இறுதியில் காதலும் உறவுகளும் வெற்றி பெற்று, அனைவரின் மனதையும் நெகிழ வைக்கும் நிறைவை கதை தருகிறது.

1 week ago | [YT] | 60

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/XNgk-aR2YUg
தீபா செண்பகமின், "மங்கை மான் விழியாள்" RJ சுஜா குரலில்...
நேற்று, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கிளம்பும் நேரம் அவசரமாக வந்து வண்டி கிளம்பும் நேரம் ஜஸ்ட் மிஸ் என்பது போல் வண்டியில் ஏற , அவள் லக்கேஜை தூக்கி உள்ளே வர உதவி செய்தவன் அவன் தான். யாரோ என நன்றி நவில வாய் திறந்தவள், “தாங்க்ஸ் எல்லாம் வேணாம், இது கடமை மானு” என இளித்ததில், அப்படியே ரயிலிலிருந்து குதித்து விடலாம் போல் இருந்தது. ஆனாலும், இவனுக்காக எதுக்கு நம்ம குதிக்கனும்? என்ற சிலுப்பலோடு , இருக்கை எண் தேடி சைட் லோயரில் சென்று அமர்ந்தாள்.

இருக்கை உறுதியாகி, இன்னும் படுக்கை கிடைக்காமல் இருக்க, எதிர் சீட்டில் வந்து அமர்ந்தவனும் சாட்சாத் வழுதி தான். அரண்மனைகார வீட்டு தாத்தாவின் பேரன். அவள் அண்ணனின் நண்பன்.

“இங்க எதுக்கு வந்து உட்கார்ந்து இருக்க?” இவள் நெற்றிக்கண்ணை திறக்க,

இவள் கேள்விக்கு பதிலாக “ரொம்ப தாங்க்ஸ் சார், சின்ன பிள்ளையை வச்சுக்குட்டு நைட் பூரா எப்படி உட்கார்ந்துட்டு வர போறோம்னு பயந்தேன், உங்க சீட்டை எனக்கு கொடுத்து, ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்கீங்க” என கை பிள்ளையோடு , எதிர் இருக்கை லோயர் பெர்த்தில் இருந்த பெண்மணி நன்றி தெரிவித்தார்.


அன்புடன்,
தீபா செண்பகம்.

2 weeks ago | [YT] | 39

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/ht0mNRXZW0U
RC Novels Presents,
ஏற்றம் புரிய வந்தாய்
Written by Ramanichandran
Narrated by RJ Jothi Vijayan

அனுராதா என்ற தன்னம்பிக்கை. கொண்ட பெண்ணின் வாழ்க்கையில் புகழ்பெற்ற ஓவியர் மித்ரன் வருகிறார்.
ஆரம்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகளும் மனஅகலமும் இருக்கும்.
அனுராதாவின் அன்பும் நேர்மையும் மித்ரனின் கடினமான மனதை மெதுவாக மாற்றுகிறது.
வாழ்க்கை சோதனைகள், புரிதல் குறைபாடுகள் மற்றும் உணர்ச்சி போராட்டங்கள் இருவரையும் நெருக்கமாக்குகின்றன.
இறுதியில், உண்மையான அன்பும் புரிதலும் அவர்களை இணைத்து வாழ்க்கையில் உயர்வை தருகிறது.

2 weeks ago | [YT] | 136

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/YUF4PQxFC60

Paper Space FM Presents Konjam Vanjam Kondenadi

எழுத்தாளர் மோனிஷா தமிழ் மோனி அவர்களின் கொஞ்சம் வ*ஞ்சம் கொண்டேனடி கதையை ஆர் ஜே சித்ரா குரலில் கேட்டு மகிழுங்கள்.

அக்காவை குடும்பத்திலிருந்து பிரித்து மலேசியாவிற்கு அழைத்துச் சென்ற மாமாவின் மீது
கோபத்துடன் வாழ்கிறான் நாயகன்.

பல வருடங்கள் கழித்து மாமன் மகளை காதலில் விழவைத்து
அவளைத் திருமணம் செய்து மாமாவை தனிமைப்படுத்த திட்டமிடுகிறான்.

ஆனால் கோபத்தில் தொடங்கிய காதல்,உண்மையான காதலாக மலர,
கோபம் வென்றதா... காதல் வென்றதா என்ற உணர்ச்சிப் போராட்டம் ஆரம்பமாகிறது.

3 weeks ago | [YT] | 79

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/UoqV3mdCT_o
ரமணிசந்திரனின். "கொடிக்கு காய் பாரமாகுமா " கதையை RJ ஜோதி விஜயன் குரலில் கேட்டு மகிழுங்கள்.

சுமாலினியின் புகுந்த வீட்டு முகவரி கையில் இருந்தபோதும், அந்த வீட்டுப் பக்கம் செல்ல ரஞ்சனுக்கு விருப்பமில்லை. திருமணம் என்ற பெயரில், தமக்கை மிகுந்த துன்பம் அனுபவித்த இடமாயிற்றே! சுமாலினி மகளின் பள்ளிக்குச் சென்றே அவளைப் பார்த்தது ஏன் என்று புரிந்தவனாக, ரஞ்சனும் பள்ளிக்கே சென்றாள்.  ரொம்ப காலமாகப் புகழ் பெற்ற பாரம்பரியம் உள்ள பெரிய பள்ளி. பழமையோடு வளமும் வசதியும் உடைய பள்ளி என்று நன்றாகத் தெரிந்தது.
அந்த மட்டும் செலவைப் பாராமல், அக்கா மகளை ஒரு சிறந்த பள்ளியில்தான் படிக்க வைக்கிறார்கள்! பரவாயில்லை என்று நல்லதாக ஒன்று எண்ணும்போதே, அவனுள் கோபம் குமுறியது. என்ன பரவாயில்லை? அவர்களிடம் பணம் இருக்கிறது என்று காட்டுகிறார்கள்! அவ்வளவுதானே? அதுதானே என்றைக்குமே அவர்களது பழக்கம்? முதல் அகழியே, அந்தப் பணம்தானே? அலட்சியமாகத் தூக்கி எறிந்து பேசுவதும், திமிராக நடப்பதும் . . . அவர்களிடம் கொட்டிக் கிடப்பதாகவும், மற்றவர்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள் என்பது போலவும் எண்ணுவதும், காட்டுவதும்! அவர்களது இயல்பே அந்தத் திமிர் தானே!  அனிதாவுக்குக் காது குத்தியபோது, குழந்தையின் காதுக்கு ஏற்றபடி போட்ட வைரத’ தோட்டைக் “கண்ணில் போட்டுப் பாரடா, கரிக்கிறதா என்று பார்ப்பபோம், இவ்வளவு சின்னதை எங்கே தேடி வாங்கினார்களோ”  என்று வக்கணை பேசியது, மறக்கக் கூடியது அல்லவே! இத்தனைக்கும் ஒழுக்கம் கெட்ட மகனைப் பெற்று வைத்துக்கொண்டு! அப்போது, அவர்களை விடப் பெரிதும் இறங்கிய நிலைதான்.   தேடி வந்து அக்காவைத் திருமணம் செய்தபோது, சுமாலினியின் அழகுக்காக என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். “சுமி அதிருஷ்டக்காரி” என்று பலரும் பேசியது கூட, ரஞ்சனுக்கு லேசாக நினைவிருந்தது. ஆனால், வசதி குறைந்த பெண்ணை மணந்தால், அவர்கள் வீட்டு அராஜகங்களைச் சகித்துப் போவாள் என்று எண்ணித்தான் அவர்களாகத் தேடி வந்து திருமணம் செய்தார்கள் என்று விரைவிலேயே தெரிய வந்ததும், குடும்பத்தில் எல்லோரும் எப்படித் துடித்துப் போனார்கள்! ஏனெனில் அன்பில் பாசத்தில், அவர்கள் கோடீசுவரர்கள் ஆயிற்றே! இன்றைக்கு அவர்களிடமும் பணம் இருக்கிறது. ஆனால், அக்காவின் அழிந்துவிட்ட ஆனந்தம் திரும்பக் கிடைக்குமா? ஆனால், இது போன்ற யோசனைகளால் என்ன பயன்?

4 weeks ago | [YT] | 158

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/ystVBe-dWEY
RC Novels Presents,
ஓர் உறவு தந்தாய்
Written by Ramanichandran
Narrated by RJ Suja
“ கண்ணில் படவில்லை என்றால், தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது, சும்மா, பார்வை வட்டத்துள் விழவில்லையா? இந்தக் கேள்வியை, யாரிடம் கேட்க முடியும்? விடை தெரியாவிட்டால், அவளது மண்டை வெடித்து விடாதா? “என்ன யோசனை? ஒருவேளை, எங்கள் இருவர் கண்களுக்கும் தெரியாமல், கண்கட்டு வித்தை ஏதும் செய்துகொண்டிருந்தீர்களா?” எண்ணத்தை மறைத்து, “ஐயோ, அதெல்லாமில்லை. வட்ட வட்டமாக, பஜ்ஜியை என்ன அழகாகச் செய்திருக்கிறார்கள் என்று, ஆ . ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்!” என்று சமாளித்தாள் சுமனா. “சும்மாவா? இதற்காகத்தானே, பல்லாயிரக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்!” “அவ்வளவா?!” என்று கேட்ட வளின் அகன்ற கண்களில் ஏக்கம் படர்ந்தது. “ஆனால், அதற்குக் கேட்டரிங் படித்திருக்க வேண்டும்தானே? ஆனால், கேட்டரிங் படிக்கக் காசு வேண்டுமே. ஆகிரமத்தில், செலவு மிகவும் குறைவான படிப்புக்குத்தான், உதவி வாய்ப்பு உண்டு.” வாய் வார்த்தைகள் முடியும்போதே, சுமனாவின் முகம் லேசாகக் கன்றிச் சிவந்தது. என்ன, ஓர் அன்னியனிடம் போய் . . . அவன் பெயர் கூடத் தெரியாது, சொந்தக் குறைகளைக் கொட்டிக்கொண்டு இருக்கிறோமே என்று, அவளது மனம் கூசியது.

1 month ago | [YT] | 129

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/0zoNGmReIs0

எழுத்தாளர் விஜிபிரபுவின் - நதி நீ கரை நான்...
குரல் : rj புவனா செல்வம்

பொறுப்பில்லாத் தந்தை.. குழந்தைகளின் நலனுக்காக அவரைப் பொறுத்துக் கொள்ளும் தாய். இவர்களுக்கு மகளாக பிறந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாய் இருக்கும் நாயகி. தந்தையின் வற்புறுத்தலுக்கா க வெளி மாநிலத்திற்கு வேலைக்குச் செல்லும் நாயகியை காதல் கொள்ளும் ராஜ குடும்பத்து நாயகன். அவளின் விருப்பமின்றி தந்தை கொடுத்த வாக்குக்காக நாயகனின் காதலை மறுத்து ஊர் திரும்பும் நாயகி அதனால் எதிர் கொள்ளும் துன்பங்களும்.. அதிலிருந்து அவளை மீட்டு நாயகன் எப்படி அவளை கரம் பிடிக்கிறான் என்பதையும் கூறும் அற்புதமான குடும்பக் கதை இது.

நதி நீ கரை நான்... |

1 month ago | [YT] | 90

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels)

https://youtu.be/NlCzCSAFnPQ
ரமணிசந்திரனின். "ஊனமறு நல்லழகே " கதையை RJ சுஜா குரலில் கேட்டு மகிழுங்கள்.

1 month ago | [YT] | 108