மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மனிதநேயமிக்க வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, 2006 வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம். ........................................................
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஏறக்குறைய ஆறு தலைமுறைகளாக 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், அவர்கள் பணியாற்றி வந்த BBTC (பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்) நிர்வாகம், தன் குத்தகை ஒப்பந்தக் காலம் முடிவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, 2024-ஆம் ஆண்டு மே மாதம் விருப்ப ஓய்வு மற்றும் கதவடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, தங்களின் வாழ்வாதாரத்தைத் இழந்து, கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் அம்மக்கள், 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி அங்கேயே வாழும் உரிமை பெற்றவர்கள் ஆவர். எனவே, அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தலா 2 ½ ஏக்கர் நிலம் வழங்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்த ஆட்சியின் தொழிலாளர் விரோதப் போக்கின் காரணமாக, இத்தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்குப் பாதகமான தீர்ப்பு வந்தது.
தற்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் விசாரணையில் உள்ளது. அங்கு வாழும் பல குடும்பங்களுக்கு வேறு எங்கும் சொந்த வீடோ அல்லது வாழ்விடங்களோ கிடையாது. எனவே, அவர்களின் வாழ்வுரிமையை மாஞ்சோலை பகுதியிலேயே மீட்டெடுத்துத் தர வேண்டுகிறேன்.
இது குறித்த வழக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, "ஏற்க்குறைய 100 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வாழ்ந்து வந்த உண்மை வரலாறுகளை மறைத்துவிட்டு, கடந்த அரசு சார்பில் அங்கு மக்கள் வாழ்வதற்கான எவ்விதச் சூழ்நிலையும் இல்லை" என தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 20.05.2026 அன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மாஞ்சோலை வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை. இதனால் “கோபமுற்ற நீதிபதிகள் கடந்த அரசு நியமித்த வழக்கறிஞர்களின் கருத்தையே கேட்போம்” என்று கருத்து தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
எனவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நமது விஜய் அவர்களின் அரசு தாயுள்ளத்தோடு உச்சநீதிமன்றத்தில் மனிதநேயமிக்க வழக்கறிஞர் ஒருவரை நியமித்து; 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி, மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டுமென என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 21.05.2026
ராஜபாளையம் (பொது) தொகுதியில் நிற்கும் ஒரே தேவேந்திரகுல வேளாளர் சமூக வேட்பாளர் சகோதரி வழக்கறிஞர் மு.ரமாதேவி அவர்கள் மட்டுமே..! இந்த ஒரு காரணம் போதும் இவரை ஆதரிக்க.! பட்டியல் வெளியேற்றம் கேட்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்காளர்கள் புதிய தமிழகம் கட்சி வேட்பாளரான இவருக்கு அளிக்கும் வாக்குகள் தான் நமது சமூக கணக்கில் வரவு வைக்கப் படும்..! எனவே, வெண்கொற்றக் குடை தாங்கி ராஜபாளையத்தில் நகர்வலம் வரும் ஒரு பேரினத்தின் பெருமையை நிலைநாட்ட, அரசியலில் நமது வலிமையை நிரூபிக்க, வாக்களிப்பீர் நமது ரத்த சொந்தமான வேட்பாளருக்கு....!!! வெண்கொற்றக் குடையோடு பட்டொளி வீசிப் பறக்கட்டும் நமது தொப்புள்கொடியான சிவப்பு-பச்சை வர்ணக்கொடி🇧🇾🇧🇾🇧🇾🔥.
நிலக்கோட்டை வத்தலக்குண்டு அருகே உள்ள இராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் இராமச்சந்திரன், வயது 27, தொழில்முனைவோர்; இவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதே வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடுகணபதிபட்டி கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன் மகள் ஆர்த்தி, வயது 21. இவ்விருவரும் காதல் வயப்பட்டுத் திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகின்றன.
திருமணமான நாள் முதல் ஆர்த்தி குடும்பத்தினரிடமிருந்து இராமச்சந்திரனுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இராமச்சந்திரன் தனது தொழில் நிமித்தமாக வரும்போது, ஆர்த்தியின் தந்தையும் உறவினர்களும் வழிமறித்துக் கர்ண கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தை புதிய தமிழகம் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுவாகவே, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்படுவது தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதைக் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டுவர புதிய தமிழகம் கட்சியின் சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனினும், தமிழ்நாடு அரசு செவி சாய்க்காமல் உள்ளது. இதன் விளைவாக, மனிதநேயமின்றி பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் கொடூரம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாகக் கௌரவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி 14.10.2025
"எவருடைய பெயரையும் அரசு கட்டிடங்களுக்குச் சூட்டக் கூடாது" என்று 1997 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாற்றுவது நியாயமானதா?
கிராம, நகர சந்து - பொந்துகளுக்கு ஜாதிப் பெயர்களை நீக்க சொல்லிவிட்டு, 10 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலத்திற்கு 'நாயுடு' என ஜாதி பெயரை சூட்டுவது எவ்விதத்தில் சரியானது?
அவர் தனது வாழ்நாளில் மறுத்த; வெறுத்த 'சாதி பெயரைச் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 'கோவை விஞ்ஞானி ஜி.டி.' அல்லது 'விஞ்ஞானி ஜி. துரைசாமி பாலம்' என்று, ஜாதிய குறியீடு இல்லாமல் பெயர் சூட்டுவதே அவருக்கு செய்யும் உண்மையான மரியாதையாகும்.! ...............................................................
1996-97-க்கு முந்தைய காலகட்டத்தில், பெரும்பாலான மாவட்டங்கள், போக்குவரத்துக்கழகங்களுக்கு சாதியத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. 1997-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி விருதுநகரை மையமாகக் கொண்டு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக, தென் தமிழகத்தில் ஏறக்குறைய ஆறு மாத காலம் தொடர் கலவரங்கள் நிகழ்ந்தன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் சூட்டப்பட்டிருந்த சாதிய, மதத் தலைவர்களின் பெயர்களை நீக்குவது என்றும், எதிர்காலத்தில் அரசின் எந்தக் கட்டிடங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எவரது பெயரும் சூட்டப்படாது என்றும், தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள அனைத்துச் சிலைகளையும் அகற்றி அருங்காட்சியகத்தில் வைப்பது எனவும், தலைவர்களின் பெயர்களில் பல்கலைக்கழக இருக்கைகள் உருவாக்கி, கல்வி வளர்ச்சியில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதற்கு மாறாக, இன்றைய அரசு தொடர்ந்து பல கட்டிடங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், பாலங்களுக்கும் தலைவர்களின் பெயரைச் சூட்டுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அரசின் எவ்வித நிறுவனங்களுக்கும் எந்த தலைவர்களின் பெயர் சூட்டப்படக் கூடாது என்று அன்றைய முதல்வர் கலைஞர் அரசு எடுத்த முடிவுக்கு மாறாக இன்றைய அரசு அவரது பெயரையே பல கட்டிடங்களுக்கு சூட்டி வருகிறது. இதை எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
இந்நிலையில், திடீரென நான்கு தினங்களுக்கு முன்னர், கிராம, நகர்ப் பகுதிகளில் உள்ள தெரு, சாலைகளில் உள்ள சாதிப் பெயரை நீக்க உத்தரவிட்ட அடுத்த நாளே, கோவையின் மையப் பகுதியில், அ.தி.மு.க. காலகட்டத்தில் திட்டமிடப்பட்டு, தற்போது கட்டி முடிக்கப்பட்ட 10 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலத்திற்கு "ஜி.டி. நாயுடு மேம்பாலம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
"எவருடைய பெயரையும் அரசு கட்டிடங்களுக்குச் சூட்டக் கூடாது" என்று 1997 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாற்றுவது தவறானதாகும். கிராமச் சாலைகளில் உள்ள சந்துபொந்துகளுக்கு சாதி தலைவர்களின் பெயர்களை நீக்கச் சொல்லிவிட்டு, 10 கிலோமீட்டர் நீள மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு எனப் சாதிப் பெயர் சூட்டுவது முன்னுக்குப் பின் முரணானது ஆகும்.
ஜி.டி. நாயுடு அவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர். அரசியல் மற்றும் அறிவியல் இரு துறைகளிலும் அவரது காலத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1972-ஆம் ஆண்டு ஜனவரிப் பொங்கல் தினத்தன்று, அவரது தலைமையில் கோவையில் நடைபெற்ற 'கடவுள் உண்டு இல்லை' என்ற கருத்தரங்கில், பி.யு.சி. படிக்கும் பருவத்தில் கலந்து கொண்டு அறிமுகமாகியுள்ளோம். பள்ளிப் பருவத்தில் (1967-71 காலகட்டத்தில்) அவரின் அரிய கண்டுபிடிப்பான விதையில்லாப் பப்பாளி, தக்காளி உள்ளிட்ட பல காய்கறி விதைகளைச் சக மாணவர்கள் வாங்கிப் பயன்படுத்தியுள்ளோம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் ஜி.டி. நாயுடு அவர்கள் 1940-களில் நிகழ்த்திய உரையாடல்களை, அப்பொழுதே ஒலிப்பதிவு செய்துள்ளார். அவர் ஒரு அரிய மனிதர். அற்புதமான மனிதநேயர்'
எப்படியோ, இத்தனை ஆண்டு காலம் கழித்து அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், அவர் தனது வாழ்நாளில் மறுத்த; வெறுத்த 'சாதி' பெயரைச் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 'கோவை விஞ்ஞானி ஜி.டி.' அல்லது 'விஞ்ஞானி ஜி. துரைசாமி பாலம்' என்று, ஜாதிய குறியீடு இல்லாமல் பெயர் சூட்டுவதே அவருக்கு செய்யும் உண்மையான மரியாதையாகும்.
எனவே, அவரது கொள்கைக்கு நேர் எதிரான 'நாயுடு' பெயரைத் தவிர்த்துவிட்டு, 'விஞ்ஞானி ஜி.டி.' என்ற பெயரில் அந்தப் பாலம் பெயரிடப்பட வேண்டும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி 13.10.2025
கரூர் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் - உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.!! ....................................................
செப்டம்பர் 27ஆம் தேதி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் அவர்களின் பரப்புரை நிகழ்ச்சியில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தைத் தாண்டி உலகெங்கும் பேரதிர்ச்சியை உருவாக்கியது.
சம்பவம் அறிந்த அடுத்த நாளே காலை 11 மணிக்குச் சம்பவ இடத்திற்குச் சென்று, விஜய் அவர்களுக்குப் பரப்புரை செய்ய ஒதுக்கப்பட்ட இடம் எவ்விதத்திலும் போதுமானதல்ல; எல்லாத் தவறுகளும் அப்புள்ளியிலிருந்தே தொடங்குகின்றன என்று நாம் கருத்து தெரிவித்ததோடு மட்டுமின்றி, சம்பவத்திற்குக் காரணமான அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டுமெனில் நடுநிலையோடு செயல்படும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஓர் ஆணையம் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்திருந்தோம்.
இப்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணையும், அதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தகுந்ததாகும்.
அரசியலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது தொடர்கதையாகின்றன. தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் யார் பதவிக்கு வந்தாலும் நடைபெறும் தவறுகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருக்கும்.
எனவே, இச்சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டையே, உச்ச நீதிமன்றமும் எடுத்திருப்பதிலிருந்து நியாயத்தின் பக்கமே புதிய தமிழகம் கட்சி என்றென்றும் நிற்கிறது என்பது மேலும் உறுதியாகிறது.
டாக்டர் கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி 13.10.2025
தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 80-வது நினைவு தினம் இன்று.!
உலகம் முழுவதும் 'பறையா' என்ற சொல் இழிவின் குறியீடாக கட்டமைத்து வைக்கப்பட்ட சமகாலத்தில் 'பறையன்' என்றே பெயர் வைத்து பத்திரிகை துவங்கும் அளவு துணிச்சல், மதமாற்றம் வேண்டாம் நாம் வர்ணத்தில் சேராத அவர்ணாக்கள் என்று அம்பேத்கருக்கு அறிவுரை வழங்கும் அளவு தொலைநோக்கு, இங்கிலாந்தில் நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் மற்றும் அம்பேத்கரோடு கலந்துகொள்ளும் அளவு ஆளுமை, வெள்ளையரிடம் கை குழுக்காமல் தங்கள் பகுதியில் நிலவும் சாதிய தீண்டாமையை எடுத்துரைத்த சாதூர்யம், சட்டம் பயின்ற கல்வியறிவு, தனது வாழ்நாள் முழுவதும் சமூகப்பணி செய்த அர்ப்பணிப்பு என முழுத்தகுதியோடு வலம் வந்த வீச்சரிவாள் மீசைக்காரன் 'தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் ' அவர்களுக்கு புகழ் வணக்கம்..!
அயோத்தி தாச பண்டிதரோடு சேரவில்லை என்றால் இவரது புரட்சிகர சிந்தனை பறையர் இன மக்களை என்றோ திராவிட நஞ்சற்ற சமூக விடுதலைக்கான பாதையில் கொண்டு சேர்த்திருக்கும்.! திருமா போன்ற அதிகார வர்க்கத்தின் அடியாள் மூலம் அந்நியர்களின் கையாள் என்ற அடையாளம் இன்றி பெருமையோடு நிமிர்ந்திருப்பார்கள்..! இருப்பினும், இன்னும் நம்பிக்கை இருக்கிறது.! இனியாவது 'பெரியார்' என்று படமெடுத்து ஈவெராவின் ஏவலராக தாத்தாவை சித்தரித்த திராவிட நரிகளிடம் மண்டியிடும் தாசர்களை விட்டு விட்டு புரட்சியாளர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசனை நெஞ்சில் ஏந்துவார்கள் என்று..!
அவரை சாதியின் குறியீட்டில் அடைக்கவில்லை. ஆனாலும், அவர் யாருடைய விடுதலையை முன்னிறுத்தி தன் சமூகப்பணியை துவங்கினாரோ அந்தச் சமூகமே இன்று அவரின் சிந்தனைக்கு எதிராக முனை மழுங்கடிக்கப்பட்டு கிடக்கிறதே எனும் ஆதங்கம் தான் மேலுள்ள வரிகள்...! ஆம், பறையரினம் கொண்டாட வேண்டிய முன்னோன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புரட்சிகர புகழ் வணக்கம்..!
நேற்று (09.09.2025) நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மதிப்பிற்குரிய சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கோவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிமுகம் ஆகி, பொறுமை காத்து மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுடைய இவ்வெற்றி தமிழக மக்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய நிகழ்வாகும்.
அவர் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், பாஜக தமிழ் மாநில முக்கிய பொறுப்பாளராக இருந்த போதும் நடுநிலையோடும், ஜனநாயக பண்புகளை போற்றும் வகையிலும் செயல்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி இருக்கையை அலங்கரிக்கும் அவர் அப்பொறுப்பிற்கு மென்மேலும் புகழ் சேர்க்கவும், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லவும் வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் தமிழ் மண்ணிற்கு என்னவெல்லாம் நன்மையை செய்ய முடியுமோ அவற்றை செய்ய வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அவருடைய செயல்பாடுகள் சிறந்திட மீண்டும் வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 10.09.2025
M.Sankar Guru
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மனிதநேயமிக்க வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, 2006 வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம்.
........................................................
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஏறக்குறைய ஆறு தலைமுறைகளாக 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், அவர்கள் பணியாற்றி வந்த BBTC (பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்) நிர்வாகம், தன் குத்தகை ஒப்பந்தக் காலம் முடிவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, 2024-ஆம் ஆண்டு மே மாதம் விருப்ப ஓய்வு மற்றும் கதவடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, தங்களின் வாழ்வாதாரத்தைத் இழந்து, கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் அம்மக்கள், 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி அங்கேயே வாழும் உரிமை பெற்றவர்கள் ஆவர். எனவே, அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தலா 2 ½ ஏக்கர் நிலம் வழங்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்த ஆட்சியின் தொழிலாளர் விரோதப் போக்கின் காரணமாக, இத்தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்குப் பாதகமான தீர்ப்பு வந்தது.
தற்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் விசாரணையில் உள்ளது. அங்கு வாழும் பல குடும்பங்களுக்கு வேறு எங்கும் சொந்த வீடோ அல்லது வாழ்விடங்களோ கிடையாது. எனவே, அவர்களின் வாழ்வுரிமையை மாஞ்சோலை பகுதியிலேயே மீட்டெடுத்துத் தர வேண்டுகிறேன்.
இது குறித்த வழக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, "ஏற்க்குறைய 100 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வாழ்ந்து வந்த உண்மை வரலாறுகளை மறைத்துவிட்டு, கடந்த அரசு சார்பில் அங்கு மக்கள் வாழ்வதற்கான எவ்விதச் சூழ்நிலையும் இல்லை" என தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 20.05.2026 அன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மாஞ்சோலை வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை. இதனால் “கோபமுற்ற நீதிபதிகள் கடந்த அரசு நியமித்த வழக்கறிஞர்களின் கருத்தையே கேட்போம்” என்று கருத்து தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
எனவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நமது விஜய் அவர்களின் அரசு தாயுள்ளத்தோடு உச்சநீதிமன்றத்தில் மனிதநேயமிக்க வழக்கறிஞர் ஒருவரை நியமித்து; 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி, மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டுமென என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.05.2026
2 weeks ago | [YT] | 301
View 5 replies
M.Sankar Guru
ராஜபாளையம் (பொது) தொகுதியில் நிற்கும் ஒரே தேவேந்திரகுல வேளாளர் சமூக வேட்பாளர் சகோதரி வழக்கறிஞர் மு.ரமாதேவி அவர்கள் மட்டுமே..! இந்த ஒரு காரணம் போதும் இவரை ஆதரிக்க.! பட்டியல் வெளியேற்றம் கேட்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்காளர்கள் புதிய தமிழகம் கட்சி வேட்பாளரான இவருக்கு அளிக்கும் வாக்குகள் தான் நமது சமூக கணக்கில் வரவு வைக்கப் படும்..! எனவே, வெண்கொற்றக் குடை தாங்கி ராஜபாளையத்தில் நகர்வலம் வரும் ஒரு பேரினத்தின் பெருமையை நிலைநாட்ட, அரசியலில் நமது வலிமையை நிரூபிக்க, வாக்களிப்பீர் நமது ரத்த சொந்தமான வேட்பாளருக்கு....!!! வெண்கொற்றக் குடையோடு பட்டொளி வீசிப் பறக்கட்டும் நமது தொப்புள்கொடியான சிவப்பு-பச்சை வர்ணக்கொடி🇧🇾🇧🇾🇧🇾🔥.
2 months ago | [YT] | 435
View 46 replies
M.Sankar Guru
Defense
3 months ago | [YT] | 1
View 0 replies
M.Sankar Guru
Defense
3 months ago | [YT] | 0
View 0 replies
M.Sankar Guru
நிலக்கோட்டை வத்தலக்குண்டு அருகே உள்ள இராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் இராமச்சந்திரன், வயது 27, தொழில்முனைவோர்; இவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதே வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடுகணபதிபட்டி கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன் மகள் ஆர்த்தி, வயது 21. இவ்விருவரும் காதல் வயப்பட்டுத் திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகின்றன.
திருமணமான நாள் முதல் ஆர்த்தி குடும்பத்தினரிடமிருந்து இராமச்சந்திரனுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இராமச்சந்திரன் தனது தொழில் நிமித்தமாக வரும்போது, ஆர்த்தியின் தந்தையும் உறவினர்களும் வழிமறித்துக் கர்ண கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவத்தை புதிய தமிழகம் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுவாகவே, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்படுவது தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதைக் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டுவர புதிய தமிழகம் கட்சியின் சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனினும், தமிழ்நாடு அரசு செவி சாய்க்காமல் உள்ளது. இதன் விளைவாக, மனிதநேயமின்றி பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் கொடூரம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாகக் கௌரவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
14.10.2025
7 months ago | [YT] | 301
View 27 replies
M.Sankar Guru
"எவருடைய பெயரையும் அரசு கட்டிடங்களுக்குச் சூட்டக் கூடாது" என்று 1997 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாற்றுவது நியாயமானதா?
கிராம, நகர சந்து - பொந்துகளுக்கு ஜாதிப் பெயர்களை நீக்க சொல்லிவிட்டு, 10 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலத்திற்கு 'நாயுடு' என ஜாதி பெயரை சூட்டுவது எவ்விதத்தில் சரியானது?
அவர் தனது வாழ்நாளில் மறுத்த; வெறுத்த 'சாதி பெயரைச் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 'கோவை விஞ்ஞானி ஜி.டி.' அல்லது 'விஞ்ஞானி ஜி. துரைசாமி பாலம்' என்று, ஜாதிய குறியீடு இல்லாமல் பெயர் சூட்டுவதே அவருக்கு செய்யும் உண்மையான மரியாதையாகும்.!
...............................................................
1996-97-க்கு முந்தைய காலகட்டத்தில், பெரும்பாலான மாவட்டங்கள், போக்குவரத்துக்கழகங்களுக்கு சாதியத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. 1997-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி விருதுநகரை மையமாகக் கொண்டு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக, தென் தமிழகத்தில் ஏறக்குறைய ஆறு மாத காலம் தொடர் கலவரங்கள் நிகழ்ந்தன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் சூட்டப்பட்டிருந்த சாதிய, மதத் தலைவர்களின் பெயர்களை நீக்குவது என்றும், எதிர்காலத்தில் அரசின் எந்தக் கட்டிடங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எவரது பெயரும் சூட்டப்படாது என்றும், தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள அனைத்துச் சிலைகளையும் அகற்றி அருங்காட்சியகத்தில் வைப்பது எனவும், தலைவர்களின் பெயர்களில் பல்கலைக்கழக இருக்கைகள் உருவாக்கி, கல்வி வளர்ச்சியில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதற்கு மாறாக, இன்றைய அரசு தொடர்ந்து பல கட்டிடங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், பாலங்களுக்கும் தலைவர்களின் பெயரைச் சூட்டுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அரசின் எவ்வித நிறுவனங்களுக்கும் எந்த தலைவர்களின் பெயர் சூட்டப்படக் கூடாது என்று அன்றைய முதல்வர் கலைஞர் அரசு எடுத்த முடிவுக்கு மாறாக இன்றைய அரசு அவரது பெயரையே பல கட்டிடங்களுக்கு சூட்டி வருகிறது. இதை எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
இந்நிலையில், திடீரென நான்கு தினங்களுக்கு முன்னர், கிராம, நகர்ப் பகுதிகளில் உள்ள தெரு, சாலைகளில் உள்ள சாதிப் பெயரை நீக்க உத்தரவிட்ட அடுத்த நாளே, கோவையின் மையப் பகுதியில், அ.தி.மு.க. காலகட்டத்தில் திட்டமிடப்பட்டு, தற்போது கட்டி முடிக்கப்பட்ட 10 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலத்திற்கு "ஜி.டி. நாயுடு மேம்பாலம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
"எவருடைய பெயரையும் அரசு கட்டிடங்களுக்குச் சூட்டக் கூடாது" என்று 1997 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாற்றுவது தவறானதாகும். கிராமச் சாலைகளில் உள்ள சந்துபொந்துகளுக்கு சாதி தலைவர்களின் பெயர்களை நீக்கச் சொல்லிவிட்டு, 10 கிலோமீட்டர் நீள மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு எனப் சாதிப் பெயர் சூட்டுவது முன்னுக்குப் பின் முரணானது ஆகும்.
ஜி.டி. நாயுடு அவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர். அரசியல் மற்றும் அறிவியல் இரு துறைகளிலும் அவரது காலத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1972-ஆம் ஆண்டு ஜனவரிப் பொங்கல் தினத்தன்று, அவரது தலைமையில் கோவையில் நடைபெற்ற 'கடவுள் உண்டு இல்லை' என்ற கருத்தரங்கில், பி.யு.சி. படிக்கும் பருவத்தில் கலந்து கொண்டு அறிமுகமாகியுள்ளோம். பள்ளிப் பருவத்தில் (1967-71 காலகட்டத்தில்) அவரின் அரிய கண்டுபிடிப்பான விதையில்லாப் பப்பாளி, தக்காளி உள்ளிட்ட பல காய்கறி விதைகளைச் சக மாணவர்கள் வாங்கிப் பயன்படுத்தியுள்ளோம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் ஜி.டி. நாயுடு அவர்கள் 1940-களில் நிகழ்த்திய உரையாடல்களை, அப்பொழுதே ஒலிப்பதிவு செய்துள்ளார். அவர் ஒரு அரிய மனிதர். அற்புதமான மனிதநேயர்'
எப்படியோ, இத்தனை ஆண்டு காலம் கழித்து அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், அவர் தனது வாழ்நாளில் மறுத்த; வெறுத்த 'சாதி' பெயரைச் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 'கோவை விஞ்ஞானி ஜி.டி.' அல்லது 'விஞ்ஞானி ஜி. துரைசாமி பாலம்' என்று, ஜாதிய குறியீடு இல்லாமல் பெயர் சூட்டுவதே அவருக்கு செய்யும் உண்மையான மரியாதையாகும்.
எனவே, அவரது கொள்கைக்கு நேர் எதிரான 'நாயுடு' பெயரைத் தவிர்த்துவிட்டு, 'விஞ்ஞானி ஜி.டி.' என்ற பெயரில் அந்தப் பாலம் பெயரிடப்பட வேண்டும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
13.10.2025
7 months ago | [YT] | 243
View 7 replies
M.Sankar Guru
கரூர் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் - உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.!!
....................................................
செப்டம்பர் 27ஆம் தேதி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் அவர்களின் பரப்புரை நிகழ்ச்சியில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தைத் தாண்டி உலகெங்கும் பேரதிர்ச்சியை உருவாக்கியது.
சம்பவம் அறிந்த அடுத்த நாளே காலை 11 மணிக்குச் சம்பவ இடத்திற்குச் சென்று, விஜய் அவர்களுக்குப் பரப்புரை செய்ய ஒதுக்கப்பட்ட இடம் எவ்விதத்திலும் போதுமானதல்ல; எல்லாத் தவறுகளும் அப்புள்ளியிலிருந்தே தொடங்குகின்றன என்று நாம் கருத்து தெரிவித்ததோடு மட்டுமின்றி, சம்பவத்திற்குக் காரணமான அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டுமெனில் நடுநிலையோடு செயல்படும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஓர் ஆணையம் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்திருந்தோம்.
இப்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணையும், அதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தகுந்ததாகும்.
அரசியலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது தொடர்கதையாகின்றன. தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் யார் பதவிக்கு வந்தாலும் நடைபெறும் தவறுகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருக்கும்.
எனவே, இச்சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டையே, உச்ச நீதிமன்றமும் எடுத்திருப்பதிலிருந்து நியாயத்தின் பக்கமே புதிய தமிழகம் கட்சி என்றென்றும் நிற்கிறது என்பது மேலும் உறுதியாகிறது.
டாக்டர் கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
13.10.2025
7 months ago | [YT] | 213
View 4 replies
M.Sankar Guru
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. - குறள்
சமத்துவ சமரில் தன்னுயிர் ஈந்த வேந்தன் வே.இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம்..🙏
09.10.1924 - 11.09.2011
7 months ago | [YT] | 654
View 9 replies
M.Sankar Guru
தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 80-வது நினைவு தினம் இன்று.!
உலகம் முழுவதும் 'பறையா' என்ற சொல் இழிவின் குறியீடாக கட்டமைத்து வைக்கப்பட்ட சமகாலத்தில் 'பறையன்' என்றே பெயர் வைத்து பத்திரிகை துவங்கும் அளவு துணிச்சல், மதமாற்றம் வேண்டாம் நாம் வர்ணத்தில் சேராத அவர்ணாக்கள் என்று அம்பேத்கருக்கு அறிவுரை வழங்கும் அளவு தொலைநோக்கு, இங்கிலாந்தில் நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் மற்றும் அம்பேத்கரோடு கலந்துகொள்ளும் அளவு ஆளுமை, வெள்ளையரிடம் கை குழுக்காமல் தங்கள் பகுதியில் நிலவும் சாதிய தீண்டாமையை எடுத்துரைத்த சாதூர்யம், சட்டம் பயின்ற கல்வியறிவு, தனது வாழ்நாள் முழுவதும் சமூகப்பணி செய்த அர்ப்பணிப்பு என முழுத்தகுதியோடு வலம் வந்த வீச்சரிவாள் மீசைக்காரன் 'தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் ' அவர்களுக்கு புகழ் வணக்கம்..!
அயோத்தி தாச பண்டிதரோடு சேரவில்லை என்றால் இவரது புரட்சிகர சிந்தனை பறையர் இன மக்களை என்றோ திராவிட நஞ்சற்ற சமூக விடுதலைக்கான பாதையில் கொண்டு சேர்த்திருக்கும்.! திருமா போன்ற அதிகார வர்க்கத்தின் அடியாள் மூலம் அந்நியர்களின் கையாள் என்ற அடையாளம் இன்றி பெருமையோடு நிமிர்ந்திருப்பார்கள்..! இருப்பினும், இன்னும் நம்பிக்கை இருக்கிறது.! இனியாவது 'பெரியார்' என்று படமெடுத்து ஈவெராவின் ஏவலராக தாத்தாவை சித்தரித்த திராவிட நரிகளிடம் மண்டியிடும் தாசர்களை விட்டு விட்டு புரட்சியாளர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசனை நெஞ்சில் ஏந்துவார்கள் என்று..!
அவரை சாதியின் குறியீட்டில் அடைக்கவில்லை. ஆனாலும், அவர் யாருடைய விடுதலையை முன்னிறுத்தி தன் சமூகப்பணியை துவங்கினாரோ அந்தச் சமூகமே இன்று அவரின் சிந்தனைக்கு எதிராக முனை மழுங்கடிக்கப்பட்டு கிடக்கிறதே எனும் ஆதங்கம் தான் மேலுள்ள வரிகள்...!
ஆம், பறையரினம் கொண்டாட வேண்டிய முன்னோன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புரட்சிகர புகழ் வணக்கம்..!
- மொ.சங்கர்குரு
8 months ago | [YT] | 225
View 12 replies
M.Sankar Guru
நேற்று (09.09.2025) நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மதிப்பிற்குரிய சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கோவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிமுகம் ஆகி, பொறுமை காத்து மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுடைய இவ்வெற்றி தமிழக மக்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய நிகழ்வாகும்.
அவர் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், பாஜக தமிழ் மாநில முக்கிய பொறுப்பாளராக இருந்த போதும் நடுநிலையோடும், ஜனநாயக பண்புகளை போற்றும் வகையிலும் செயல்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி இருக்கையை அலங்கரிக்கும் அவர் அப்பொறுப்பிற்கு மென்மேலும் புகழ் சேர்க்கவும், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லவும் வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் தமிழ் மண்ணிற்கு என்னவெல்லாம் நன்மையை செய்ய முடியுமோ அவற்றை செய்ய வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அவருடைய செயல்பாடுகள் சிறந்திட மீண்டும் வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.09.2025
8 months ago | [YT] | 457
View 25 replies
Load more