2wins mom channel gives useful information, entertainment, and vlogs regarding following,
parenting: The pregnancy and parenting tips to care, grow, learn & manage your kids and their activities especially for twins from personal experience and vlogs related to the things mentioned above and also home organising.
Banking: A simplified banking ideas to ease your banking and information about banking procedures, rules and regulations which have to be followed in our daily life.
Cooking: The organic healthy food home recipes variety and cooking tips.
Travel: Travel and Exploring the places, cities, and world vlogs. Information about the places, travel fun, riding experience and travel experience.
2wins mom வழியாக ,
1. கர்ப்பம் ,குழந்தை வளர்ப்பு ,நலம் (குறிப்பாக இரட்டை குழந்தைகள்)என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து
2. தினசரி வங்கி தொடர்பான நடைமுறை மற்றும் நடவடிக்கைகளை எளிதாக்க குறிப்புகள்
3. ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு குறிப்புகள்
4 .எங்கள் சிறந்த பயணங்கள்,அனுபவங்கள்
2wins Mom
https://youtu.be/TCTN9D8VTS8?si=pv4zw... என்னோட புத்தகங்கள் பற்றி ஒரு சின்ன video
2 years ago | [YT] | 3
View 0 replies
2wins Mom
முத்தம் காமம் சேர்ந்ததல்ல அது உணர்வுகளின் பிரதிபலிப்பு
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று'
இது தங்க மீன்கள் திரைப்பட வசனம் நம்மில் நிறைய பேர் கேட்டிருப்போம். என்னோட பதின்பருவம் முடிந்த கல்லூரிக்கு நாட்களில் தான் இந்த திரைப்பட வசனத்தை நான் கேட்டேன் . எனக்கு அப்போ பெருசா இந்த வார்த்தைக்கான அர்த்தம் புரியல ஆனாலும் அழகான வார்த்தை என மனசுக்கு தோன்றியது.
இப்போ திருமணம் முடிந்து இரு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி விட்டாச்சு. இப்போ அந்த வார்த்தைக்கான அர்த்தம் ரொம்ப அழகா புரிகிறது.
நிஜமாகவே முத்தம் காமத்தை சார்ந்ததல்ல அது உணர்வுகளின் வெளிப்பாடு. அன்பையும், ஆறுதலையும், அரவணைப்பையும், நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையையும் எளிதாக வெளிப்படுத்த உதவும் ஒரு மந்திரம் இந்த முத்தம்.
இந்த உண்மையை எனக்கு புரிய வைத்த மிகப்பெரிய பெருமை என் சின்ன பையனுக்கு உண்டு அப்படின்னு சொல்லுவேன் . இதுக்கு முன்னாடி ஒரு பதிவுல எழுதி இருக்கேன் அந்த பையன் எனக்கு நிறைய முத்தம் கொடுத்துட்டே இருப்பான்.அவனுக்கு ஒரு ஆறு மாசம் இருக்கும் போதிலிருந்து எனக்கு அடிக்கடி முத்தம் கொடுப்பான் இப்பொழுது வரைக்கும் அந்த அன்பு மாறாமல் மழலை முத்தம் தினமும் அளவில்லாமல் கொடுத்துக் கொண்டே இருப்பான்.
எங்க வீட்டில நான் என்னோட கணவர் மற்றும் 5 வயதான என் இரட்டைகுழந்தைகள் என 4 பேர் இருக்கிறோம். இந்த நால்வருக்குள்ளும் பரஸ்பர அன்பை, மகிழ்ச்சியை, ஆறுதலை, நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கு முத்தமும், Love u என்ற வார்த்தையும் தினமும் அடிக்கடி பரிமாறப்படும்.
குழந்தை வளர்ப்பில் எனக்குப் பிடிக்காத சில விஷயங்களில் முக்கியமான ஒன்று குழந்தையை முத்தம் கொடுக்குமாறு வற்புறுத்துவது, அது பெற்றோராக இருந்தாலும் சரி மற்றவர்களாக இருந்தாலும் சரி முத்தத்தை வலிந்து கேட்பது என் மனதிற்கு ஒவ்வாத ஒரு விஷயம்.
சில இடங்களில் பெரியவர்களே குழந்தைகளை வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை முத்து என்பதும் பறக்கும் முத்தம் கொடு என்று சொல்வதும் எனக்கு எப்பொழுதும் ரொம்ப அந்நியமாகத் தோன்றும்.
முத்தம் என்பது நம் உணர்வுகளின் மிக முக்கியமான வெளிப்பாடு அது நம் மனதுக்குள் இருந்து ஒருவருக்கு கொடுக்க வேண்டுமே தவிர வற்புறுத்தி வாங்குவது அதுவும் முக்கியமாக குழந்தைகளை இந்த மாதிரி வற்புறுத்துவது ஒரு சரியான அணுகுமுறை கிடையாது என்பது என்னுடைய கருத்து.
ஆரம்ப காலத்தில் என் குழந்தைகளிடம் யாராவது அப்படி கேட்டால் எனக்கும் கோவமாக வரும் ஆனால் கோபத்தை வெளிப்படுத்த முடியாத சில இடங்களில் அமைதியாக இருப்பேன்.
என் குழந்தைகளுக்கும் இந்த விஷயத்தில் பயங்கரமான புரிதல் இருக்கிறதோ என்னவோ இதுவரை அவர்களும் அவர்களோடு உணர்வுபூர்வமாக நெருங்கிய ஒருவரை தவிர யாருக்கும் இந்த முத்தத்தைக் கொடுக்க மாட்டார்கள்.
தலைகீழா நின்னு தண்ணி குடிச்சா கூட யாரையும் முத்தமிட மாட்டார்கள் . தங்களை முத்தமிட அனுமதிக்கவும் மாட்டார்கள்.
ஆரம்ப காலத்தில் நிரஞ்சன் குழந்தைகளிடம் அதிகமான நேரம் செலவழித்தது கிடையாது. அதனால நிரஞ்சன் வந்து முத்தம் கேட்டால் கூட கொடுக்க மாட்டார்கள் .
நாட்கள் போகப்போக கொஞ்சம் வளர்ந்த பின்பு அப்பாவின் அன்பை பற்றிய புரிதல் வந்து அவர்கள் மூவருக்கும் இடையில் ஒரு உணர்வுபூர்வமான பந்தம் வந்ததற்குப் பிறகுதான் அந்த முத்தம் நிரஞ்சனுக்கு கிடைத்து.
அப்பொழுதுதான் எனக்கு முழுவதுமாக புரிந்தது இந்த முத்தம் என்பது எவ்வளவு அழகான உணர்வுகளின் பிரதிபலிப்பாக உள்ளத்திலிருந்து உதடு வழியாக வெளிப்படுகிறது என்பது.
இந்த தகவல் தொழில் நுட்பம், நாகரீகம் வளர்ந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயமாக மாறி இருக்கிறது . அதிலும் இந்த மாதிரி முத்தம் , காதல், ஆண் பெண் உறவு இவைகளைப் பற்றிய ஒரு சரியான புரிதலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு இருக்கிறது.
குழந்தைகளை வளர்க்கும் போது நம் அன்றாட வாழ்வியல் முறைகளோடு சேர்த்து இந்த மாதிரி விஷயங்களில் தேவையான புரிதல்களையும் புகுத்தி விட்டால் பதின் பருவம் ஆகும் போதும் அவர்களது சிந்தனைகள் கறைபட்டுப் போகாது .
முத்தம் எப்பொழுதுமே சில அழகான உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமே அதை காமம் என்ற சிறு வட்டத்திற்குள் மட்டுமே பார்க்க வேண்டாம்.
---- லிபியா நிரஞ்சன்
4 years ago | [YT] | 23
View 2 replies
2wins Mom
மன அழுத்தம்,
கல்லூரி முடித்து திருமண வாழ்க்கைக்குள் நுழையற வரைக்கும் இந்த மன அழுத்தம் அப்படிங்கிற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. கிட்டத்தட்ட எல்லாருமே அந்த மாதிரி தான் இருந்திருப்போம்.
முதல்முறையாக வாழ்க்கைல இந்த மன அழுத்தத்தை சந்திச்சது இரட்டை குழந்தைகள் பிறந்து தனியாக அவர்களை வளர்க்கும் போது தான் ஏற்ப்பட்டது. அதுக்கு பேர் மன அழுத்தம் (postpartum depression)
அப்படின்னு கண்டுபிடிப்பதற்கே ரொம்ப நாளாச்சு.
தன்னாலேயே கண்ணீர் வரும். கோபம் , இயலாமை, ஆத்திரம், சுய பரிதாபம் இந்த மாதிரி கலவைகளின் உணர்ச்சிப் பிழம்பாய் மனசு இருக்கும் .
அதுக்கப்புறம் அம்மா உடல்நலக் குறைவாக இருக்கிறது, அவசர திருமணத்தினால் எங்களுக்குள்ள வந்த பல புரிதலின்மைகளினால் நடந்த சண்டைகள், தனியாக குழந்தைகள் மற்றும் குடும்பத்தை பராமரிக்கும் பாரம் இந்த மாதிரி நிறைய சூழ்நிலைகள் மன அழுத்தத்தை கொடுத்திருக்கு.
நம்ம வாழ்க்கையில் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இரண்டே இரண்டு விதமாக மட்டும் தான் இருக்க முடியும் அப்படின்னு நான் ரொம்ப உறுதியா நம்புவேன் .
ஒன்று அந்த பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு இருக்கும் அந்தத் தீர்வை கண்டுபிடித்து செஞ்சுட்டோம் அப்படினா அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
இரண்டாவது வழி என்னவென்றால் சில பிரச்சினைகளுக்கு என்ன தான் பண்ணினாலும் தீர்வு கிடைக்காது கமா போட்டு நம்மை தொடர்ந்து கொண்டேதான் வரும். அந்த மாதிரி விஷயங்களை நம் மனதை மற்றும் மூளையை விட்டு கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தில் இருந்து எப்படி வெளிவருவது அப்படின்னு நாம இணையதளம் அல்லது புத்தகங்களில் படிக்கும்போது,
இசை கேளுங்க
துங்கலாம்
புத்தகங்கள் படிப்பது
பிடித்தமானதை பண்ணுங்க
அந்த சூழ்நிலையில் இருந்து நகர்ந்து வர முயற்சி பண்ணுங்க இந்த மாதிரி நிறைய பதில்கள் இருக்கும் ஆனா இதெல்லாம் நாம் அந்த நிலைமையில் பண்ணுவோமா அப்படிங்கறது தான் கேள்விக்குறி.
ஆனால் ஒரு முறை இந்த மாதிரி ஏதாவது முயற்சி செஞ்சு பார்த்தா கண்டிப்பாக சில விஷயங்கள் நம்மை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டுவர உதவி செய்யும்.
ஆரம்ப நாட்களில் நான் என்ன பண்ணினேன் அப்படின்னா நல்ல சத்தமா ஹோம் தியேட்டரில் பாட்ட வச்சி அதுவும் மகிழ்ச்சியான மனநிலை வர மாதிரி பாட்டு வச்சி கேட்க ஆரம்பிச்சுடுவேன். அது எளிதாக எனக்கு அந்த அழுத்தமான சூழ்நிலையில் இருந்து வெளிவர வழிவகை செய்தது.
இப்போ நாட்கள் போகப்போக ஓரளவு பக்குவம் வந்திருச்சி. இந்த மன அழுத்தத்தினால் எதுவுமே மாறப்போவதில்லை . அந்த இடத்திலிருந்து அல்லது பிரச்சினைகளிலிருந்து நம்ம தாண்டி வரும்போது தான் எல்லாம் சரியாகும்.
அதை சரி செய்வதும் அந்த இடத்தில நின்னுகிட்டு இருப்பது நம்ம கையிலதான் இருக்கு அப்படிங்கற ஒரு உண்மை புரிந்தது.
தேவை இல்லாத எந்த விஷயத்தையும் மனதுக்கும் மூளைக்கும் ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே மன அழுத்தத்திலிருந்து பெரியளவில் வெளி வந்துவிடலாம்.
----- லிபியா நிரஞ்சன்.
4 years ago | [YT] | 19
View 16 replies
2wins Mom
என்னோட இரண்டாவது youtube payment
உங்க எல்லாரோட ஆதரவிற்கும் ரொம்ப நன்றி.
காசு சம்பாதிக்கிறேன் அப்படிங்கிறதை தாண்டி, குழந்தைகளுடனான நேரத்தை கொஞ்சம் கூட திருடாமல் எனக்கான நேரத்தை மட்டும் உபயோகித்து எனக்கு பிடித்த வேலையை செய்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்
4 years ago | [YT] | 1
View 2 replies
2wins Mom
Next video ........
Namma Studio tour friends
4 years ago | [YT] | 6
View 2 replies
2wins Mom
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை😀😀😀
புது இடம் அப்படிங்கிறதனால நிறைய பேருக்கு தூக்கம் வரல போல அதனால எல்லாருமே பேசிக்கிட்டு உலாத்திக்கிட்டு அந்த மாதிரிதான் இருந்தாங்க. அப்படி பொழுது போகாமல் சுத்திட்டு இருந்த நீரூப் அங்கிருந்த ஒரு குடையை எடுத்து உடைச்சி போட்டுடாங்க பாவம்....
புதுசா நம்ம எந்த ஒரு இடத்துக்கு போனாலும் எந்தக் சுவிட்ச் எதற்கு உபயோகப்படுத்தலாம், தண்ணீர் குழாயில் எதுல என்ன தண்ணீர் வரும், இந்த மாதிரி சில சின்ன தடுமாற்றங்கள் வரும்லா, அது மாதிரி இசைவாணி அவங்களுக்கு தண்ணி குழாயை தெரிந்துகொள்வதில் வந்த சிக்கலை இமான் அண்ணாச்சி தீர்த்து வைத்தார்கள்
அடுத்து அபினய்க்கும் நிரூப்க்கும் இடையில ஒரு உரையாடல் நடந்துகொண்டிருந்தது. அதுல நிரூப் ஒரு விஷயம் சொன்னாங்க எனக்கு எமோஷன் அப்படிங்கறது அவ்வளவா இல்ல அப்படின்னு. இந்த காலத்துல நிறைய பசங்க உண்மையிலே இப்படி தான் இருக்காங்க அப்படின்னு தோணுச்சு. ஏன்னா இந்த வார்த்தையை எங்க வீட்ல அடிக்கடி நிரஞ்சன் சொல்லுவான் எமோஷன் எல்லாம் வேஸ்ட் அப்படின்னு.
அப்புறம் பொழுது போகல யாரையாவது பிராங்க் பண்ணனும் அப்டின்னு மொக்கையாக ஒரு திட்டம் போட்டாங்க. ஆனால் யாரையாவது பிராங் பண்ணினார்கள் இல்லையா அப்படின்னு எதுவும் நிகழ்ச்சில காட்டவில்லை.
விளக்கமா பிக்பாஸ் வீட்டில் காலையில் 8 மணி அல்லது 8.30 மணிக்கு விளக்கை போட்டு பாட்டு போடுவாங்க என்று நினைக்கிறேன் . ஆனா இது முதல் நாள் என்பதால் கொஞ்சம் தூங்கட்டும் என விட்டு விட்டார்களோ என்னமோ 10.30 மணிக்கு தான் விளக்குகளை எரியவிட்டு "காதல் மன்னனா நீயும் கண்ணனா" பாட்டை போட்டு விட்டார்கள்.
இந்த முறை பிக்பாஸில் ஆண்களை விட பெண்கள் கொஞ்சம் அதிகமா அதனால ஆண்கள் கொஞ்சம் சங்கோஜப் பட்டதாலோ என்னவோ யாருமே பெருசா நடனமாடவில்லை பெண்கள்தான் நடனமாடினார்கள்.
அப்புறம் அவங்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், சமையல் பொருட்கள் , பாத்ரூமுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வந்துச்சி. எல்லாத்தையும் எடுத்து அவற்றை வைக்கிற வேலையை செஞ்ச பிறகு, அப்புறம் தலைவர் தேர்ந்தெடுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு 5பேரை பிக்பாஸ் எந்திரிக்க சொன்னாங்க.
5 பேர் முன்னாடி எந்திரிச்சு போயி நின்னா அதுல நாலு பேருக்கு தான் பொறுப்பை கொடுத்துட்டு பாவம் இந்த நிரூப்பை திருப்பி அனுப்பி வச்சிட்டார் பிக்பாஸ்.
சமையல் செய்ய, வீடு சுத்தமாக்க பாத்திரம் கழுவ, பாத்ரூம் சுத்தம் செய்ய என தலைவர்கள் தங்களுக்கான அணி உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டனர்.
கார்டன் ஏரியாவில் இருந்த அபிஷேக் எல்லாரையும் கூப்பிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நாமெல்லாம் வந்ததே பெரிய விஷயம் . அதனால நிகழ்ச்சியை பார்க்கின்ற எல்லா மக்களையும் ரொம்ப சந்தோஷ படுத்துவோம் அப்படின்னு உறுதிமொழி எடுக்க சொன்னாங்க. இப்போ பிரியங்கா அக்கா ஒரு சரியான நிதர்சனமான உண்மையை சொன்னாங்க,மவனே ஒரு மாசம் கழிச்சு இதே மாதிரி நீ பேசுவியா பார்ப்போம் அப்படின்னு.(அது உண்மைதான் அந்த பிக் பாஸ் வீட்ல ஒரு மாசம் என்ன அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு அவங்களுக்கே தெரியாது)
அப்புறமா சிபி கார்டன் ஏரியாவில் சிலருடன் தன்னுடைய சினிமா அனுபவம் , மாஸ்டர் படத்துல நடிச்சது இதைப்பற்றி எல்லாம் பேசிட்டு இருந்தாங்க. வீட்டுக்குள்ள ஒரு பெண்கள் குழு கேமராவை பார்த்து வேறுவேறு முக பாவனைகளில் நோ சொல்ற விளையாட்டு விளையாடிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் தாமரை செல்வி அக்கா பாவணிக்கு 33 மூணு வயசு அப்படிங்கறதை நம்பமுடியாமல் என்ன பாப்பா உனக்கு 16,17 வயசுதான் இருக்கும் அப்படின்னு நினைச்சேன் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க.
இரவு உணவு தயார் செஞ்சு எல்லாரும் சாப்பிட்டாங்க. சின்ன பொண்ணு அக்கா ஒரு நாட்டுப்புற பாட்டு பாடினாங்க வரதட்சனை வாங்காமல் பொண்ணுங்கள கல்யாணம் பண்ணுங்க அப்படிங்கற கருத்தை வலியுறுத்தி இருந்தது அந்த பாட்டு.
அப்புறம் ராத்திரி ஆனா உடனே தாமரைச்செல்வி அவர்களுக்கு பேய் என்றால் பாயம் அப்படின்னு தெரிஞ்சிட்டு , ராஜூ ஒரு பேய் கதை சொல்லி அந்த அக்காவை பயமுறுத்த முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க.
கதை சிறப்பாக இருந்ததோ இல்லையோ ராஜூ அதை சொன்ன விதமும் தாமரைச்செல்வி அக்கா அதற்கு கொடுத்த கவுண்டரும் பயங்கர காமெடியா இருந்தது.
இது முதல் நாள் என்பதால் எல்லாரும் ஒத்துமையா எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் மனநிலையிலேயே இருந்தாங்க.
போகப்போக எதிர்பாராததை எதிர் பார்க்கலாம்.
-----லிபியா நிரஞ்சன்.
4 years ago | [YT] | 6
View 0 replies
2wins Mom
Hai Friends
நிரஞ்சனுக்கு
Promotion and transfer
அதனால கொஞ்சம் வீடு மாறுவது, பேக் பண்ணுறது , புது வீடு தேடுவது என சில வேலைகள் இருக்கிறது. அதனால் கொஞ்ச நாளைக்கு வீடியோக்கள் எதுவும் வராது friends. இந்த வேலைக்கு முடிந்த பிறகு தொடர்ச்சியாக நல்ல வீடீயோக்களுடன் மீண்டும் சந்திப்போம். Sorry friends
4 years ago | [YT] | 12
View 2 replies
2wins Mom
Hai Friends
நம்மளோட சேனல்ல இரட்டைக் குழந்தைகளின் வளர்ப்பு அனுபவம் பற்றியும் வங்கி தொடர்பான தகவல்களையும் வீடியோக்களில் பகிர்ந்து வருகிறோம்.
இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தகவல்களாக இருப்பதால் பார்வையாளர்களாகிய உங்களுக்கும் சில சிரமங்கள் உள்ளது.
அதை தவிர்ப்பதற்காக இந்த சேனலில் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் மட்டும் வெளியிடலாம் என்றும், புதிதாக இன்னொரு சேனல் ஆரம்பித்து வங்கி தொடர்பான தகவல்களை பதிவிடலாம் என்று நினைக்கிறோம்.
இந்த விஷயத்தில் subscribers ஆகிய உங்களது ஆதரவும் கருத்துக்களும் மிகவும் முக்கியம்.
4 years ago | [YT] | 4
View 0 replies
2wins Mom
🔴 LIVE tomorrow @ 12 noon.... watch and ask your doubts! don't miss it....
4 years ago | [YT] | 8
View 0 replies
2wins Mom
தேவன் மகளே❤️ தேவன் மகளே❤️
சினிமாக்கள் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம் முடிந்தவரை அதை உணர்வுபூர்வமாக தான் ரசிப்பேன். வெறும் திரையில் வரும் சினிமாக்களை ரசிப்பதோடு அல்லாமல் அதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு , அதை உருவாக்க எடுக்கப்பட்ட மெனக்கெடல்கள் இத்தனையும் யோசித்து தான் ஒரு சினிமாவை பார்ப்பேன்.
நீர்ப்பறவை
இந்த சினிமா ரிலீஸ் ஆகி கொஞ்ச நாள் ஆன நேரம் அது , என்னோட தோழி வீட்டில் சென்னையில் தங்கி வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் புதுப்படம் சிடிக்கள் வாங்கிட்டு வந்தாங்க அதுல நீர்ப்பறவை இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சும்மாதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். அந்த சினிமா முடியும்போது வீட்ல ஒரு ஆறு ஓடாததுதான் மிச்சம் அவ்வளவு அழுகை.
என்னமோ தெரியல எனக்கு படத்தோட கதை, பாடல் , நடிகர்களின் நடிப்பு இதையெல்லாம் தாண்டி கதாநாயகி நிலைமைதான் ரொம்ப வருத்தத்தை கொடுத்தது . சின்ன வயசுல இருந்து அம்மா அப்பா இல்லாம வளர்ற பொண்ணு கல்யாணம் பண்ணி நல்ல வாழ்க்கை கிடைச்சிருச்சு என்று மகிழ்ச்சியுடன் வாழும் போது , அந்த வாழ்க்கை ஒரு எதிர்பாராத அதோட மனசை ரணமாக்கும் ஒரு சம்பவத்துடன் ரொம்ப சீக்கிரமா முடிஞ்சு போயிடுது. ஒரு கற்பனைக் கதாபாத்திரத்துக்காக அத்தனை அழுகையை சிந்தியது என் கண்கள்.
அதோட எனக்கு அந்த சினிமால விஷ்ணு விஷால் அண்ணாவின் நடிப்பு ரொம்பவே பிடித்திருந்தது. அவங்கள நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருந்தது . குடியில் மூழ்கி கிடந்து காதலால திருந்தி எஸ்தரை பயங்கரமா காதலிச்சு எஸ்தரால் காதலிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேறி வரும் சூழலில் வாழ்க்கை ஆரம்பிச்ச வேகத்திலேயே முடிஞ்சு போயிடும்.
அது தாண்டியும் படத்துல நிறைய விஷயங்கள் என்னை பாதித்தது .
விஷ்ணு விஷால் அவங்களோட அம்மா அப்பா மகன் மீது காட்டும் பாசம்(அதுவும் விஷ்ணு விஷால் சொந்தப் பிள்ளை கிடையாது),
குடி போதையில் திருந்தி வருபவனை ஊர் பல இடங்களில் ஏற்றுக் கொள்ளாதது,
தான் சாராயம் விட்டாலும் மகன் குடிக்க கூடாது என பதறும் சாராய வியாபாரி வடிவுக்கரசி,
தன் வளர்ப்பு மகள் எஸ்தருக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என ஆசைப்படும் கன்னியாஸ்திரி (எஸ்தரின் பெரியம்மா),
படகு வாங்குவதற்காக உப்பளத்தில் வேலை செய்யும் விஷ்ணுவிஷால் மீது காதல் கொள்ளும் உப்பளக்காரரின் தங்கை,
போதகராக இருந்து விஷ்ணு விஷாலின் மீது அக்கறை கொள்ளும் சர்ச் பாதர்,
கொஞ்சம் பணம் கொடுத்தாலும் பரவாயில்லை படகு கட்டிக்கொடுக்கும் சமுத்திரக்கனி அவர்கள்,
நண்பனுக்கு உறுதுணையாக எல்லா இடங்களிலும் இருக்கும் பிளாக் பாண்டி,
இவங்க எல்லாரோட நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவிற்கு மிக மிக இயல்பாகவே இருக்கும்.
இதையும் தாண்டி படத்துக்கான அத்தனை பாடல்களையும் வைரமுத்து அவர்கள் எழுதி இருப்பார்கள். ஒவ்வொரு வரிகளும் அந்த படத்திற்கும், காட்சிகளுக்கும் அத்தனை நியாயம் சேர்த்திருக்கும்.
உண்மையை சொல்லப்போனால் அப்போ அந்த படம் பார்க்கும்போது எஸ்தர், காதல், மரணம் இதெல்லாம் நினைச்சுதான் வருத்தமா இருந்தது . ஆனா அதுக்கப்புறம் அந்த படத்தை நான் அதிகமா பார்க்கல ஏன்னா என் மனசை பாதிக்கிற சில திரைப்படங்களை நான் மீண்டும் ஒருமுறை பார்க்க மாட்டேன். என் மனதில் அந்த பாதிப்பு அப்படியே இருக்கிறத நான் ரசிப்பேன்.
இப்போ சமீபத்துல ஒரு நாள் எங்க வீட்ல நிரஞ்சன் அந்த படம் பார்த்துட்டு இருந்தான். அப்ப யதார்த்தமா சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. இந்த முறையும் அழுகையோடு தான் படம் பார்த்தேன். இப்போ எனக்கு புரிஞ்சது அந்த சினிமாவில் வெறும் காதல் மட்டும் மையப்படுத்த படவில்லை மீனவர்களின் வலியும் சேர்ந்துதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று.
4 years ago | [YT] | 19
View 2 replies
Load more