வணக்கம். பேராசிரியர், டாக்டர். ருக்மணி அவர்கள் இலக்கியப் பேச்சாளர், தன்முனைப்பு பயிற்சியாளர், மனநல ஆலோசகர், எழுத்தாளர், பெண்ணியலாளர். இங்கே இவருடைய இலக்கிய, சமூக பட்டிமன்றங்கள், தன்னம்பிக்கை பயிலரங்க நிகழ்வுகளின் காணொளிகள், உடல்நலம், மனநலம் சார்ந்த காணொளிகள், கவியரங்க நிகழ்வுகள், கவிதைகள் மேலூ் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வருகிறோம். இவை பலருக்கும் பயன்படும் என்பதால், இச்சானலை Subscribe செய்து பிறருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Dr. Ruckmani
https://youtu.be/974qycam9AQ?si=HQCgj...
7 months ago | [YT] | 2
View 0 replies
Dr. Ruckmani
https://youtu.be/4d9Vm7iC68A?si=0GGIN...
7 months ago | [YT] | 0
View 0 replies
Dr. Ruckmani
இன்று ஆட்டோவிற்காக கைகாட்டியபோது எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
வந்து நின்ற ஆட்டோவினுள் புன்னகையுடன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ஒரு முஸ்லிம் பெண்.
திருவல்லிக்கேணி பெரியபள்ளிவாசல் அருகே செல்ல வேண்டும் என்றவுடன், சென்னை ஆட்டோ டிரைவர்களுக்கே உரிய பேரம் பேசுதல் இல்லாமல், தலையசைத்து உடனே ஏற்றிக்கொண்டார்.
ஆச்சரியத்திலிருந்து விடுபட்டு அவரோடு பேச ஆரம்பித்தேன். வியாசர்பாடியைச் சார்ந்த, மூன்று குழந்தைகளுக்கு தாயான பியாரி பாத்திமா ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தது கடந்த 6 மாதங்களாகத்தான். ஆட்டோ டிரைவரான கணவரிடம் கற்றுக் கொண்டு, ரோட்டரி கிளப் உதவியுடன் டிரைவிங் கற்று லைசன்ஸ் வாங்கி இப்பொழுது ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். ஒரு நாள் ஆட்டோவிற்கான வாடகை 200 ரூபாய். காலையில் 10 மணிக்கு சவாரி ஆரம்பித்து இரவு 8.30 வரை ஓட்டுவராம். செலவு போக குறைந்தது 500 ரூபாய் அன்றாடம் கிடைக்கும் என்கிறார். கணவர் திருப்பூரில் வேன் டிரைவராக பணியில். சென்னை தெருக்களில் ஆட்டோ ஓட்டுவது, எந்த பிரச்சனைகளுமின்றி திருப்திகரமாக உள்ளது என்கிறார்.
யாரையும் அண்டி வாழ வேண்டியதில்லை. அதுவே மகிழ்ச்சி என்கிறார். சாதனைப் பெண்.
பதிவு - அப்து முகநூல்
1 year ago | [YT] | 3
View 0 replies
Dr. Ruckmani
அன்றைய பொழுது (3.2.1969) இன்னும் விடியவில்லை. முதல் நாள் இரவு 10 மணி வரை, அந்தக் கால ரேடியோவில் செய்தி கேட்டு விட்டுப் படுத்தோம். அண்ணா உடல்நலம் இன்றி இருந்தாலும், தீவிரக் கண்காணிப்பில் இருப்பதாகக் கேட்டதுதான் கடைசிச் செய்தி. அத்துடன் அனைவரும் உறங்கி விட்டோம். அதிகாலை 4 மணி இருக்கும். என் அன்னையார் பரபரப்பான குரலில் "எல்லோரும் எழுந்திருங்க எழுந்திருங்க" என்று சத்தமிட்டார். இப்படி அவர் பதட்டம் அடைந்து கூவியதே இல்லை. என்னவென்று கேட்ட போது "அண்ணா செத்துட்டாரான்டா" என்றார். "யார் சொன்னது?" என்று கேட்டேன். "சாலையில் சில பேர் அண்ணா, அண்ணா என்று கத்திக்கொண்டு போனார்கள். சிலர் அண்ணா செத்துட்டார் என்று ஓலமிட்டுக் கொண்டு போனார்கள்" என்றார். அனைவரும் எழுந்து உட்கார்ந்து விட்டோம்.
அப்போதெல்லாம் வானொலி தான். இப்போது போல் எப்போதும் செய்தி ஒலிபரப்பாவதில்லை ஆகையால் ஆல் இந்தியா ரேடியோ (அன்றைய ஆகாசவாணி) செய்திக்காகக் காத்திருந்தோம். மணி ஏழேகால் ஆனது. சரோஜ் நாராயணசாமியின் கம்பீரமான குரலில் செய்தி தொடங்கியது. "அறிஞர் அண்ணா காலமானார்". தமிழ் கூறும் உலகெங்கும் அதிர்ந்தது.
15 நிமிட செய்தியில் தொடர்ந்து அண்ணாவின் வரலாறு பற்றிக் கூறிவிட்டு இறுதியில், "இன்று அதிகாலை 12.30 மணிக்கு அண்ணா காலமானார்" என்று அவர் முடிக்கும் பொழுது அந்தக் கம்பீரமான குரலும் தழுதழுத்துப் போனது. எல்லோரும் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். "விடியும் வேளையில் அஸ்தமனமா" என்று அங்கலாய்த்தார் என் தந்தையார்.
அன்று அடுப்பு எரியவில்லை. நாங்களும் புரிந்து கொண்டு பள்ளி சென்றோம். வழியெங்கும் "அண்ணா, அண்ணா" என்று ஓலங்கள். யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அங்கிருந்த வானொலியில் செய்தி கேட்டுக்கொண்டு, ஒவ்வொரு டீக்கடையிலும் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தார்கள். பொது இடம் என்றும் பாராமல் பல பேர் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள். பள்ளிக்குச் சென்றோம். தாமதமாக விடுமுறை அறிவித்தார்கள். மனதிற்குள் அழுது கொண்டே திரும்பினோம். அன்று தொலைந்த தமிழர் எதிர்காலம். இன்றும் விடிவில்லை.
"மறப்போம் மன்னிப்போம்"
"வாழ்க வசவாளர்கள்"
"எங்கிருந்தாலும் வாழ்க"
"கடமை கண்ணியம் கட்டுப்பாடு"
"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு"
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்"
ஆகிய அண்ணாவின் பொன்மொழிகளை அவரது தம்பிகளே மறந்து விட்டனர். அவற்றைக் கடைப்பிடிக்கும் வரைதான் அவர் தொடங்கி வைத்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்கும்.
முனைவர் சிவ இளங்கோ,
புதுச்சேரி.
1 year ago | [YT] | 8
View 1 reply
Dr. Ruckmani
"இரண்டு பெண்கள் பார்த்த சினிமாவும், வைர அட்டிகையும்"
வை.மு கோதைநாயகி அம்மாளின் ஒரு கதையைப் படித்தேன். எனக்கு அப்படியொரு ஆச்சரியம். இரண்டு பெண்கள் சினிமாக்களைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். 1900களின் எழுதியவர். எப்படியும் இந்தக் கதைக்கு ஒரு நூறாண்டு ஆகியிருக்கும். பெண்கள் சினிமாவைப் பற்றிப் பேசுவது அலாதியானது. சினிமாவை வளர்த்ததில் அவர்கள் பங்கு மிக அதிகம். இது எனது உறுதியான கருத்தும் கூட. அதனால் இந்தக் கதை என்னை மிகவும் ரசிக்கவைத்துவிட்டது. ஒரு படம் எதனால் வெற்றி பெறும், தோற்கும் என்பதைக் கதையில் இரு பெண் கதாபாத்திரங்கள் பேசுகின்றன. அந்தக் கருத்துகளில் ஒரு மாற்றுக் கூட குறையாமல் அப்படியே இந்தக் காலத்துக்குப் பொருத்திவிட முடியும். தயாரிப்பு தொடங்கி டிஸ்ட்ரிப்யூஷன் வரை பேசி விடுகிறார்கள்.
இந்தக் கதையில் ஒரு அம்மாள், படத்துக்குப் போய் வருவதற்கு என்னவெல்லாம் எப்படியெல்லாம் செலவு ஆனது என்று பட்டியலிட்டு அதுவரை அவர்கள் பார்த்த படங்களுக்கு ஆயிரம் ரூபாய் ஆனதைச் சொல்லி. கூடுதலாய் கொஞ்சம் ரூபாய் போட்டால் வைர அட்டிகை வாங்கியிருக்கலாம் என்கிறார். நானும் யோசித்துப் பார்த்தேன். இதுவரை படங்கள் பார்க்க செலவு செய்ததை சேர்த்திருந்தால் (பார்க்கிங் டிக்கெட் உட்பட), ஒருவேளை நான் வைர மாளிகை கூட கட்டியிருக்கலாம் என்று தோன்றியது.
இவர்கள் இந்த உரையாடலை தொடங்கும் விதம் தான் அருமையானது. பொதுவாகவே, பெண்களின் உரையாடல் ஓரிடத்தில் தொடங்கி அது கிளைகள் தாவி முடிவில் ஒரு வனாந்திரத்தைச் சுற்றும் பறவை போல தொடங்கிய இடத்தில் முடியும்.
இவர்களின் உரையாடல் ஒரு கதாபாத்திரம் மூக்குக்கண்ணாடி வாங்கி மாட்டிக்கொண்டதில் தொடங்குகிறது, ‘இனி வரும் பிள்ளைகள் அம்மா வயிற்றில் இருந்து வரும்போதே கண்ணாடி மாட்டிக்கொள்ளும் போலிருக்கிறது” என்கிறது ஒரு கதாபாத்திரம்.. அதற்குக் காரணம் விளக்கெண்ணெய் விளக்குகள் இல்லாததுது தான்..விளக்கெண்ணெய் விளக்கு தான் கண்ணுக்கு குளிர்ச்சி..குழந்தை பிறந்ததும் விளக்கெண்ணெயில் ஏற்றிய தீபத்தைப் பார்க்க வேண்டுமாம். மின்சார விளக்கைப் பார்க்கப்போகும் குழந்தைகள் கண்ணை சுருக்கிப் பார்க்கையில் கோளாறு ஏற்படும்..என்று ஒரு நெடிய விளக்கம் தருகிறார். அப்படி இப்படிப் போய் கடைசியில் சினிமாவினால் தான் வருங்காலத்தில் குழந்தைகள் எல்லோரும் கண்ணாடி அணியப் போகிறார்கள் என்று முடிக்கிறார். உண்மையில் அது தானே நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு கதை இத்தனைத் துல்லியமாக வருங்காலத்தைக் கணிக்கும் என்று நினைத்ததேயில்லை.
ஒருவகையில் இந்தக் கதையை அந்தக்காலத்தின் சயன்ஸ் பிக்ஷன் என்று கூட சொல்லலாம் போலிருக்கிறது.
கதையின் பெயர் ‘ஆயிரம் ரூபாயும் மூக்குக்கண்ணாடியும்’
கதையாசிரியர் வை.மு கோதைநாயகி அம்மாள்
கதை இடம் பெற்றிருந்த தொகுப்பு : நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்
தொகுப்பசிரியர் : இரா.பிரேமா
பதிப்பகம் “ HER STORIES
Deepa Janakiraman பதிவு நன்றி
1 year ago | [YT] | 9
View 0 replies
Dr. Ruckmani
1 year ago | [YT] | 10
View 4 replies
Dr. Ruckmani
*ச.வே.சுப்பிரமணியன்*
டிசம்பர் 31
செந்தமிழ் மொழிக்கு சிறப்பாக தொண்டாற்றிய தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் 1929ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் பிறந்தார்.
மூன்றாண்டுகள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராக வழிநடத்தினார்.
இவர் இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கை கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
1969ம் ஆண்டு நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். 1985ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 'தமிழூர்' என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்தார். இவரது வீட்டின் பெயரே 'தமிழகம்'.
இவர் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, அவ்வை தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்திய சாகித்திய அகாடமியின் 'பாஷா சம்மான்' விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர்.
Tholkappiyam is the first Universal grammar in the Universe என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை 2015ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். 'தமிழ் ஞாயிறு', 'சாதனைச் செம்மல் ச.வே.சு.' ஆகிய தலைப்புகளில் இவருடைய வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளிவந்துள்ளன.
வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுப்பிரமணியன், தனது 87வது வயதில் (2017) மறைந்தார்.
1 year ago | [YT] | 7
View 0 replies
Dr. Ruckmani
*லூயி பாஸ்டர்*
நோய்க் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1822ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
இவர் 1856ம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஒயின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.
தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இது அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்' என்று அழைக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதை தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க்கும் மருந்து கிடைத்தது. மேலும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்தை கண்டறிந்தார்.
ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு அதற்கான தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார். இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விண்ணில் உள்ள சில கோள்கள் மற்றும் நிலவிலுள்ள பள்ளங்களுக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் இறுதிவரை மனித குல நன்மைக்காக உழைத்த விஞ்ஞானி லூயி பாஸ்டர் 72வது வயதில் (1895) மறைந்தார்.
1 year ago | [YT] | 9
View 1 reply
Dr. Ruckmani
1 year ago | [YT] | 2
View 0 replies
Dr. Ruckmani
இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
இவருடைய வாழ்வில்
A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.
இவர் மனதிலும், கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (Magic Squares), தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.
ராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ், டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ், தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
1914ம் ஆண்டுக்கும், 1918ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ம் ஆண்டு தனது 32வது வயதில் மறைந்தார்.
1 year ago | [YT] | 2
View 0 replies
Load more