Welcome to Hear n Rejoice, Greetings in the Name of our Lord Jesus Christ

This is Nellai Solomon. By the grace of LORD , I have been composing and singing Christian devotional songs since 1980's.

I will be uploading my songs and traditional Christian songs recorded in my own studio.

Let’s Hear and Rejoice .

All Glory and Honour to JESUS
Stay tuned to hear and rejoice more tamil christian songs............



Hear n Rejoice

Praise the LORD

4 days ago | [YT] | 3

Hear n Rejoice

Praise the LORD

1 week ago | [YT] | 3

Hear n Rejoice

Praise the LORD

1 week ago | [YT] | 2

Hear n Rejoice

Praise the LORD

1 week ago | [YT] | 1

Hear n Rejoice

Praise the LORD

2 weeks ago | [YT] | 1

Hear n Rejoice

1998ல் இந்தப் பாடல் பாலியர் நேசன் ஊழியத்திற்காக நான் இயற்றி பாடிக்கொடுத்திருக்கிறேன்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது..இரவு 8.30 மணியளவில் என் வேலையை முடித்துவிட்டு பாளையங்கோட்டையில் உள்ள விஷ்வவானி ஒலிப்பதிவகத்திற்கு சென்றேன்.பாடலுக்கான டிராக் தயாராக இருந்தது.
அப்போது தம்பி ஆனந்த ராஜ் இந்த பாடலை பதிவு செய்தார்.
நான் பாடலை முழுவதும் பாடிய பின் நாங்கள் கேட்டோம்..
அந்தப் பாடல்" பர்த்திமேயு குருடன் "பாடியது போல இல்லை.
வேறு எதாவது செய்து பார்க்கலாம் என்று குரலை கொஞ்சம் மாற்றி பாடினேன்..ஏதோ... சரியானது போல தோன்றியது..
ஆக இருபத்தி ஐந்து வருடம் கழித்து மீண்டும் அந்தப் பாடல் உயிர்த்தது.

2 weeks ago | [YT] | 0

Hear n Rejoice

Praise the LORD

3 weeks ago | [YT] | 1

Hear n Rejoice

இனிய சிநேகமுடன்


இந்த காலங்களில் என் ( Nellai Solomon)மீது அன்பு கொண்ட பலர் என்னிடம் ஒரு காரியத்தை பற்றி விசாரிக்கின்றனர்.


கொஞ்ச நாளைக்கு முன்பு " Long Long Ago in a winter time" என்ற பாடல் ஒரு Youtube Channel ல் AI Music ல் வெளியானது.
அந்தப் பாடல் பலருடைய பாராட்டை பெற்றது. இது உங்கள் பாடல் தானே என்று பலரும் என்னிடம் கேட்டிருந்தார்கள்.
நான் அந்தப் பாடலின் கீழே இது என்னுடைய பாடல் தான் என்று பதில் எழுதி இருந்தேன். அந்தப் பாடல் சிறிது ராகமும் மாற்றப்பட்டிருந்தது. அதற்கு அந்த பாடலை வெளியிட்டவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார்கள்.


" இந்தப் பாடல் யாருடைய பாடல் என்று எங்களுக்கு தெரியாது. பல வருடங்களுக்கு முன்பதாக நாங்கள் கேட்டபடியே இப்பொழுது ஒலிப்பதிவு செய்திருந்தோம் "என விளக்கம் கொடுத்து முடித்துக் கொண்டார்கள்.


மீண்டும் அந்த பாடலின் கீழே என்னுடைய பெயர் ( Nellai Solomon)சேர்க்கப்படவும் இல்லை எனக்கு நன்றி சொல்லவும் இல்லை.

இப்போது என்னுடைய
“ பாதையோரம் காத்திருக்கும் பிச்சைக்காரன் நான் தானையா " என்ற

பாடலை சிறப்பாக பாடி ஒரு பிரபலமான கிறிஸ்தவ சபையின் Youtube Channel ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலும் பலரால் வரவேற்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இதிலும் நானே வலியை போய்...இது என்னுடைய பாடல் என்று எழுதியிருந்தேன். இது திருநெல்வேலியில் உள்ள பாலியர் நேசன் என்ற சிறுவர் ஊழியத்திற்காக எழுதப்பட்டது என்றும் எழுதியிருந்தேன்.


உடனே “பிச்சைக்காரன் நான் தானையா” பாடலை வெளியிட்ட அந்த நபர்கள் பாலியல் நேசன் ஊழியர்களிடம் விசாரித்திருக்கின்றனர்.
ஆகவே பாலியர் நேசன் ஊழியர் ஒருவர் என்னிடம் போனில் உங்களைப் பற்றி பாடலை வெளியிட்டவர்கள் கேட்கின்றனர் என்று சொன்னார். நான் சொன்னேன் அவர்கள் சிறந்த முறையில் பாடி இருக்கிறார்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி .ஆனால் என்னுடைய பெயரை அதிலே சேர்க்கச் சொல்லுங்கள் என்றேன்.


இந்த நாள் வரை என் பெயரை ( Nellai Solomon)அவர்கள் சேர்க்கவும் இல்லை எனக்கு நன்றி சொல்லவும் இல்லை.
இது இன்று அல்ல பல வருடங்களாகவே இந்த முறை நடந்து கொண்டிருக்கிறது.


கர்த்தரால் கொடுக்கப்பட்ட வேத புத்தகத்தில் கூட இது ஆசாபின் சங்கீதம் தாவீதின் சங்கீதம் என எழுதப்பட்டிருக்கிறது.


ஒரு பாடலை இயற்றியவரின் பெயரைப் போடுவதில் என்ன சிக்கல் என்று புரியவில்லை.
அதிலும் போதக பிதாக்கள் இதில் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பதில் பரலோகத்தில் இதற்கான பலன் கிடைக்குமாம்.

3 weeks ago | [YT] | 2

Hear n Rejoice

Praise the LORD

3 weeks ago | [YT] | 3

Hear n Rejoice

Praise the LORD

3 weeks ago | [YT] | 0