Like every youngster in the country, I worked towards becoming an IAS officer. Did succeed reasonably well in 2009. Since then, my life has been a repository of experiences. In 2019 I decided to break this journey and engage in something more substantial. Something that would matter to our next generation. This channel would be where I would share my thoughts and experiences.
Sasikanth Senthil
அனைவருக்கும் வாருங்கள்!
மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் NEET, CUET, CLAT, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறேன்.
📅 14.06.2026 (ஞாயிறு)
🕓 மாலை 4.00 மணி
📍 இரயிலடி அருகில், திருவள்ளூர்
#SaveStudentFuture #BanNEET_CUET_JEE #EducationIsOurRight #VoiceOfTiruvallur
1 day ago | [YT] | 103
View 10 replies
Sasikanth Senthil
மாண்புமிகு தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் தோழர் திரு. வன்னி அரசு அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
அதனைத் தொடர்ந்து,திருவள்ளூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான தங்குமிட வசதியை ஏற்படுத்தி அவர்களின் கல்விப் பயணம் தடையின்றி தொடரவும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்க போதுமான விடுதி வசதிகள் ஏற்படுத்தப்படுவது குறித்தும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் பெருமளவு வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துரைத்து கோரிக்கை மனு அளித்தேன்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இக்கோரிக்கைகளை பரிசீலித்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
உடன் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவர் திரு. சசிகுமார், திருவள்ளூர் பாராளுமன்ற பொறுப்பாளர் திரு. A G சிதம்பரம், தெற்கு மாவட்ட துணை தலைவர் திரு. பாபு, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமிகு. ராமலட்சுமி, RGPRS அகில இந்திய பொது செயலாளர் திரு. இனாமுல் ஹசன் ஆகியோர் இருந்தனர்.
3 days ago | [YT] | 382
View 17 replies
Sasikanth Senthil
என் நிர்வாகப் பணிக்காலத்தில் மனதில் என்றும் அழியாமல் நிற்கும் ஒரு நினைவு உண்டு…
அந்நாள்களில், மதவெறி மோதல்களின் நிழலும், மணல் மாஃபியாவின் அச்சுறுத்தலும் சூழ்ந்திருந்த மங்களூருவிற்கு மாவட்ட ஆட்சியராக நான் மாற்றப்பட்டிருந்தேன். அங்கு புறப்படுவதற்கு முன், முதலமைச்சர் என்னை நேரில் சந்திக்க விரும்புகிறார் என்ற தகவல் வந்தது. அது சாதாரண நிகழ்வு அல்ல. பொதுவாக ஒரு மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் அழைக்கப்படுவது அரிது. மனதில் சிறு பதட்டத்துடன் அவரது அறைக்குள் நுழைந்தேன்.
வழக்கம்போல அமைதியான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்துடன் அவர் என்னைப் பார்த்தார்.
“வாருங்கள்…” என்றார்.
பின்னர் மெதுவாகவும் உறுதியுடனும் கூறினார்:
“உங்களுக்கு ஒரே ஒரு பொறுப்பு தான்… அங்கே இனி எந்த மதக்கலவரமும் நடைபெறக் கூடாது.”
அவ்வளவுதான்.
எந்த முன்னுரையும் இல்லை. அரசியல் விளக்கங்களும் இல்லை. வெளிப்படையான நடிப்பும் இல்லை. ஒரு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம், ஒரு முதலமைச்சர் தனியாக அமர்ந்து, உண்மையில் முக்கியமானது எது என்பதை மட்டும் தெளிவாகச் சொன்னார்.
அந்த ஒரு வாக்கியத்திற்குள் முழுமையான ஆட்சித் தத்துவம் அடங்கியிருந்தது. அது வெறும் அரசியல் காட்சிப்படுத்தல் அல்ல; சாதாரண மக்களை அசாதாரண வெறுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வின் வெளிப்பாடு.
பதினைந்து நாட்கள் கழித்து, மங்களூரு மீண்டும் பதற்றத்தில் மூழ்கியது. இரு மதங்களைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். நகரமே வெடிக்கும் நிலையிலிருந்தது. அப்போது மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு வந்தது.
முன்புபோலவே நேரடியான குரலில் அவர் கூறினார்:
“மாவட்ட ஆட்சியரே… தேவையானதைச் செய்யுங்கள். எவராக இருந்தாலும் கைது செய்யுங்கள்; நம்முடைய கட்சியினராயினும் தயங்க வேண்டாம். ஆனால் இந்த நிலைமை ஒரு நாளுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்.”
ஒரு இளம் மாவட்ட ஆட்சியருக்குப் அந்த வார்த்தைகள் அளவிட முடியாத நம்பிக்கையையும் உறுதியையும் அளித்தன. அது வெறும் உத்தரவு அல்ல; செயல்படுவதற்கான முழு அனுமதி. அரசியல் ஆதரவு. நேர்மையான அரசியல் மனவலிமை.
இதற்குப் பிரதிபலிப்பான அனுபவத்தையும் நான் கண்டிருக்கிறேன். வேறொரு ஆட்சிக் காலத்தில், இதேபோன்ற சூழ்நிலையில் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு முற்றிலும் மாறுபட்டது — “கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம்; நிலைமை அப்படியே இருக்கட்டும்.” அந்த மௌனமே, யார் யாருக்காக ஆட்சி செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.
சித்தராமையா அவர்கள் அத்தகைய தலைவராக ஒருபோதும் இருந்ததில்லை.
அரசின் நிதிநிலையை விரல்நுனியில் வைத்திருந்தவர்; சமூகநீதியை முன்னிலைப்படுத்தியவர். துல்லியமாக ஆட்சி செய்தவர்; சமூகத்தின் கடைசிப் படியில் நிற்கும் மனிதரின் பக்கம் உறுதியாக நின்றவர்.
ஒரு அரசியல் தலைவராக நான் உண்மையிலேயே மனதார மதிக்கும் தலைவர் அவர்.
அவரது பாரம்பரியம் என்பது அவர் அறிவித்த திட்டங்களிலும் இல்லை; அவர் வாசித்த பட்ஜெட்டுகளிலும் இல்லை. யாரும் கவனிக்காத தருணங்களில் அவர் எப்படிப்பட்ட முதலமைச்சராக இருந்தார் என்பதில்தான் அது உள்ளது. அந்த அமைதியான தொலைபேசி அழைப்பில். பதற்றத்துடன் இருந்த ஒரு இளம் அதிகாரியிடம், “சென்று அமைதியை நிலைநிறுத்துங்கள்” என்று கூறிய விதத்தில்.
இப்போது, அவர் அதே அமைதியான கண்ணியத்துடன் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் இந்த தருணத்தில், என் மனம் மிகவும் நெகிழ்கிறது. பதவிகளை விடக் கொள்கைகளே நிலைத்திருக்கும் என்பதை எப்போதும் உணர்ந்திருந்த ஒருவரின் மேன்மையான நடை இது.
சித்தராமையா அவர்களே… நீண்ட ஆயுளும் நல்ல உடல்நலமும் பெற்று, எங்களை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டேயிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும், இந்த நாட்டிற்கும், தாங்கள் இயல்பாகவே தாங்கி நிற்கும் அந்த கொள்கை தெளிவு இன்னமும் தேவைப்படுகிறது.
2 weeks ago | [YT] | 259
View 16 replies
Sasikanth Senthil
இந்தியாவை கட்டமைத்த நவீன சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளில் தேசத்திற்காக அவர் செய்த தியாகங்களை நினைவு கூறுவோம்.
நாட்டின் பன்முகத்தன்மை சிதைக்கப்படும் இந்தச் சூழலில், நேருவின் நவீன இந்தியாவை மீட்டெடுக்கவும், பாசிச சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்!
#JawaharLalNehru #ModernIndia #RememberingNehru
2 weeks ago | [YT] | 217
View 11 replies
Sasikanth Senthil
இதுவரை உலகமே எதிர்பார்க்காத பெரிய ஆபத்து!….Fuel Crisis - எரிபொருள் தட்டுப்பாடு.
Full video link : https://youtu.be/lNGLd-mZWZI?si=r3QzV...
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் ஈரான் ஹார்மூஸ் நீரிணையை மூடியது. இந்த நீரிணை தான் எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்க எடுத்துச் செல்ல முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே இது மூடப்பட்டதால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தற்காலிக எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் பின் இருக்கும் அரசியலையும் நாம் எதிர்கொண்டிருக்கும் சூழலையும் வரவிருக்கும் பேராபத்தையும் இந்த காணொளியில் பேசியுள்ளேன்.
#IranIsraelConflict #FuelCrisis #PetrolPriceHike #IndiaFuelCrisis #StraitOfHormuz #TamilNadu #CrudeOil #Geopolitics #IndiaNews #CurrentAffairs #OilCrisis #MiddleEastConflict
#தமிழ்நாடு #பெட்ரோல்விலை #எரிபொருள்நெருக்கடி #இந்தியா
2 weeks ago | [YT] | 140
View 4 replies
Sasikanth Senthil
தொழில்நுட்பம், கிராம வளர்ச்சி, இளைஞர்கள் மற்றும் பெண்களின் அரசியல் பங்கேற்பு, விவசாய மேம்பாடு, சமூக நல்லிணக்கம்,
ஜனநாயகத்தை பாதுகாக்கும் அதிகாரப் பரவல் போன்ற நவீன சிந்தனைகளோடு எழுச்சிமிகு இந்தியாவை கட்டமைத்த வரலாற்று நாயகர்
முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி
அவர்களது நினைவு நாளில் வணங்குகின்றேன்!
#RememberingRajivGandhi #RajivGandhi
3 weeks ago | [YT] | 219
View 8 replies
Sasikanth Senthil
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இன்று தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
உங்களிடம் மாத்தி யோசி 2.0 நிகழ்ச்சியில் தேர்வை அச்சமின்றி அணுகுங்கள் என்றேன். அதுபோல இன்று வரவிருக்கும் தேர்வு முடிவுகளையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
"My Favourite Students Marks என்பது வெறும் Numbers தான், அதை பார்த்து நீங்க பயப்பட வேண்டியதில்லை"
Maathi yosi 2.0 Full video link in bio
#மாத்தியோசி2_0
#MaathiYosi2Point0
#BoardExamResults
#12thResults
#ExamResults2026
#Students
#StudentMotivation
#NoFear
#MarksAreJustNumbers
1 month ago | [YT] | 271
View 8 replies
Sasikanth Senthil
அரசியலில் கூட்டணிகள் என்பது காலப்போக்கில் மாறும் மக்களின் மனநிலைக்கும் முன்னுரிமைகளுக்கும் ஏற்ப இயல்பாக மாறிக்கொண்டே இருக்கும். காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான நீண்டகால கூட்டணி இதற்கான தெளிவான உதாரணமாகும். திரு.ராகுல் காந்தி மற்றும் திரு.மு.க. ஸ்டாலின் ஆகிய இரு தலைவர்களின் கீழ், பரஸ்பர புரிதலும் பாசிசத்திற்கு எதிரான இலக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு இரு கட்சிகளும் பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் கூட்டணியில் இருந்து பயனடைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.
அதே நேரத்தில், அரசியல் முடிவுகள் காலத்திற்கேற்ப மாறுவது இயல்பு. இன்று காங்கிரஸ் வேறு பாதையைத் தேர்வு செய்திருப்பதை ஒரு திட்டமிட்ட முடிவாகவே மட்டும் பார்க்க வேண்டும். திமுகவும் கடந்த காலங்களில் தனது அரசியல் கணக்கீடுகளின் அடிப்படையில் இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதிதான், அதில் விசித்திரம் எதுவும் இல்லை.
இதில் முக்கியமானது அரசியல் முதிர்ச்சி. கூட்டணி முடிவடைந்தாலும், பரஸ்பர மரியாதை நிலைத்திருக்க வேண்டும். பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபின் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது, பெரும் ஜனநாயக வெளிக்கே பாதிப்பை ஏற்படுத்தும். திரு.ராகுல் காந்தி மற்றும் திரு.மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்கள் பெரிய பொறுப்பை வகிக்கிறார்கள். அதனால் அக்கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்களின் அரசியல் கருத்துகளும் பேச்சுகளும் அந்தப் பொறுப்பை பிரதிபலிப்பதாகவே இருக்க வேண்டும்.
மேலும், கூட்டணிகளைத் தாண்டி ஒரு பெரிய சித்தாந்த பொறுப்பு உள்ளது. பிரிவினைவாத, மதவாத, பாசிச சக்திகளான பாஜக-ஆர்எஸ்எஸ் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும். இந்த நிலையில், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்து, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது.
கூட்டணிகள் மாறலாம், ஆனால் நமது முழு கவனமும் தமிழ்நாட்டின் நலன், அதன் எதிர்காலம் மற்றும் சமூக ஒற்றுமையை பாதுகாப்பதிலேயே இருக்க வேண்டும். இன்று எடுக்கப்படும் முடிவுகளை காலமே மதிப்பீடு செய்யும். ஆனால் இந்த மாற்றத்தின் போது மரியாதையும் நாகரிகமும் காக்கப்படும் போதுதான் ஜனநாயகத்தின் அரசியல் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்.
1 month ago | [YT] | 221
View 82 replies
Sasikanth Senthil
சமத்துவத்தின் விதையை விதைத்தவர், சுயமரியாதையின் குரலை எழுப்பியவர்,
சாதி ஒழிப்பின் பாதையை காட்டியவர் — அயோத்திதாச பண்டிதர்.
அவரின் நினைவு நாளான இன்று, அவரின் சிந்தனைகளையும் சமூக நீதி போராட்டத்தையும் நினைவு கூறுவோம்.
#IyotheeThass
1 month ago | [YT] | 391
View 6 replies
Sasikanth Senthil
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நசுக்கும் தொழிலாளர் விரோத கருப்புச் சட்டங்களை உடைத்தெறிவோம்! உழைப்பால் உயர்வோம், உரிமையால் வெல்வோம். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!
#MayDay | #LabourDay | #InternationalWorkersDay
1 month ago | [YT] | 470
View 12 replies
Load more