எமது யூடியுப் தளம் ஒரு நூலகம்
இந்தச் சேனல் மூலமாக, பலரும் அறியாத தெய்வ ரகசியங்கள், புராணங்களின் மறுபக்கம், ஆழமான சடங்கு வழிபாடுகள், மற்றும் மறைமொழிகளில் மறைந்திருக்கும் ஆன்மீக தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.
இந்து சமயத்தில் மறைக்கப்பட்ட முக்கியமான ரகசியங்கள், மகா தெய்வங்களின் அரிய தத்துவங்கள், மற்றும் அசுரர்களின் உண்மை வரலாறு ஆகியவற்றை ஆழமாக ஆராய்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.
🔱 இதுவும் ஒரு ஆன்மீகப் பயணம்!
youtube.com/@the_voice_of_ravana?si=1di6W8XQB49GmH…
🔔 உண்மையை அறிந்து பயணிக்க தயாரா?
இணையுங்கள், மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை அறிய ராவணன் குரல் சேனலை Subscribe செய்யுங்கள்!
நன்றி
ராவணண் குரல்
ராவணன் குரல்
🔱 ஸ்ரீ காளியம்மன் கவசம்🙏
(எல்லாக் காலங்களையும் வென்றவள் காளி, கரால வதனா, உதிரப்பிரியா, முண்டமாலா, ஜெயந்தி, பத்ரகாளி, கபாலினி, சாமுண்டா என்ற திரு நாமங்கள் காளி தேவியின் திருவருள் கூட்டி வைப்பவை. காளியை உபாசனை செய்பவர்களுக்கு புனர்ஜென்மம் கிடையாது. உலகம் யாவும் நிரம்பிய புகழைத் தருபவள் அவள். பக்தர்கள் மீது பாசமும், பற்றும் கொண்டு அளவற்ற கருணை செய்பவள். கடலைப் போன்றது அவள் அருள். "நீள்கடலாய் நீலவண்ண நீர்மையளாய் தாள்பிடிப்பார் தாபமறத் தாயாகி வந்ததுவும் வாள் பிடித்த காளியவள் வாரிதியாய் வந்திட்டாள்" என்று அவள் புகழ் பேசப்படுகிறது. காளியைப் பூஜிப்பவர்கள் புண்யசாலிகள். அவர்களைத் தீமைகள் அணுகாது.
காப்பு
மங்களத்தைப் பெருக்கிடவே மலரேறி வந்தவளின்
செங்கமலச் சேவடியைச் சேர்
பதினெட்டுக் கரமுடைய பகவதியாம் காளியம்மன்
நிதிகொட்டும் கவசமிதை நித்தமுமே பாடிவரின்
பதிவிதியும் ஓடிவிடும் பலவலிமை கூடிவரும்
மதிமலர்ந்த வாக்குவரும் மங்களமே மிக்குவரும்
கவச நூல்
அருள்வீச அம்பிகையே அன்பர்மன இன்னமுதே
இருள் நீக்கு இளவெயிலே இனியசுவை வானமுதே
பொருள்கூட்டு பொன்மணியே பொங்குவரு கங்கையளே
மருள்போக்கு மங்கையளே மங்கையளே காளியம்மா 1
வாழ்வருளும் தேவியளே வானவர்க்கும் தாயவளே
கூழ்விரும்பும் கூளியுடன் கூடிவரும் கூர்மதியே
பாழ்படுத்தும் வைப்பொழித்துப் பாடிவரும் பார்மகளே
வீழ்த்தவரு ஏவலதை: வீசிமிதி வீரியளே .2.
என்மனதில் பீடமிட்டு என்னாளும் நின்றிடவே
பொன்னிமயம் விட்டு இன்று பொலிவோடு வந்தவளே
இன்முகத்து எம்மணியே இனியுன்னை விட்டுவிட்டு
பொன்தேடப் போவதிலும் பொருளுண்டோ காளியம்மா 3
காரமிகும் மிளகாயும் காய்ந்த உப்பும் சேர்ந்தபொதி
கால்வழியில் ஒளிந்திருக்க காணாமல் மிதித்துவிட்டேன்
வீரமிகும் காளியம்மா வீதிவழி காத்திடவே
பூரமெனும் ஓரையிலே பூரணையே வந்திடுவாய் 4
இடையூறு போவதற்கே இன்முகத்துக் காளியம்மா
எழுஎட்டுத் திதிவந்து எங்களையே காத்திடுவாய்
கடைபோட்ட மந்திரத்தார் கன்மனத்து ஓதலினால்
உடைபட்டுப் போகாமல் எம்கதியைக் காத்திடுவாய் 5
பதினெட்டுக் கரமுடைய பகவதியே பகவதியே
நிதிசொட்டத் தாமரையில் நிற்கின்ற நித்தியளே
பதிகாக்கச் சிவயநம பலநாளும் செபிப்பவளே
சதிரிட்ட சங்கரியே சண்முகனின் தாயாரே 6
தாயுடனே மக்களையும் தாரமுடன் கணவனையும்
நேயமுடன் ஒன்றாக்கி நேர்வழியில் செல்பவளே
காயாகி கனியாகிக் கானகத்தே நின்றவளே
மாயாவ தாரியென மாநிலத்தில் வந்தவளே 7
வந்திருக்கும் உன்னடியில் வளமான பூவுமிட்டு
சந்தனமும் பூசிடுவேன் சந்தமொடு பாடிடுவேன்
சொந்தமென நீயிருக்க சொக்கிவரும் மூவுலகம்
பந்தமிட்ட தீயொலிகள் பயந்தெங்கோ ஓடிவிடும் 8
ஓடிவிடும் ஓடிவிடும் ஓதிவைத்த மாயமதும்
பாடிவரும் இக்கவசம் பார்முழுதும் காத்திருக்கும்
சூடிவரும் கவசமிதால் சுந்தரியே சொக்கியேன
நாடிநிதம் ஏத்திடுவேன் நாகினியே நாரணியே 9
நாரணனார் முன்னவளே நானேயாய் நின்றவளே
காரணத்தைக் கேளாமல் காத்திடவே வந்தவளே
மாரணமாம் மந்திரத்தால் மாயமிடும் சாம்பலதை
வாரணையாய் கைநீட்டி வையத்தில் சிரிப்பவளே 10
சிரிப்பவருக்கு எரிதீயாய்ச் சினத்தோடு நிற்பவளே
கரிக்கின்ற பேர்களுக்கு கடுகுவெடி முகத்தாளே
தரிக்கின்ற இதயமலர் தங்குகின்ற குணத்தாளே
நரிநகத்துக் குடமாயம் நசியவென நகைப்பவளே 11
நகையாகிப் பாம்பணிந்து நடுவானில் நிற்பவளே
பகைகாண விழிசுற்றிப் பலஉலகம் பார்ப்பவளே
புகைவண்ண மேனியளே புண்ணியமாம் ஞானியளே
தொகைகாண தனமளித்துத் தொழுமுன்னே காப்பவளே 12
காப்பவளும் நீயேதான் கார்த்திகையில் பரணியளே
மாப்பண்டப் படையலுக்கு மாநிதியம் தருபவளே
காப்பணிந்த மஞ்சளொடு காண்பதற்கு வருபவளே
நாப்பணிந்து ஏத்துதற்கு நான்மறையே தந்தவளே 13
கிலிங்கார வித்தெடுத்துக் கிழக்குவயல் விதைத்தவர்க்கு
நலிநீக்கி நல்விளைவை நன்மொழியே தந்திடுவாய்
சௌபாக்ய பீஜத்தில் சௌந்தரத்து நாயகியே
ஸௌஎழுக என எழுப்பும் சௌரியளே சூலியளே 14
துர்க்கையென நிற்பவளே துந்துபியில் மகிழ்பவளே
துயரத்தைத் துடைப்பவளே துணைமகளே ஸ்ரீங்காரி
அர்ச்சனையில் அகமகிழும் அரியவளே ஐம்தேவி
பர்வதத்துப் பனிமகளே பயமோட்டும் கீலீங்காரி 15
கால்வலியும் தலைவலியும் காலத்தின் நோய்வலியும்
மார்வலியும் மாபிணியும் மாயாத தரித்திரமும்
பால்காட்டிப் பாம்புவிடும் பாவையதின் கூத்தடிப்பும்
சேல்விழியே நீவந்தால் சீக்கிரத்தில் ஓடிவிடும் 16
எமைநோக்கித் தீங்கிழைக்க எய்தஒலி கால்நடுங்க
தமைவிட்ட தரித்திரத்தான் தனிவில்லை ஒடித்துவிடும்
உமையென்றும் மறவாத உத்தமர்க்கு மங்களத்தை
உள்ளபடி வட்டியிட்டு உயர்வாக்கி நீ தருவாய் 17
நீ தருவாய் செல்வாக்கு நீள்நிதியம் ஆயுளதை
நீ தருவாய் பெரும்வெற்றி நீங்காத நல்திலகம்
நீ தருவாய் மனவுறுதி நீலிஎழு மந்திரமும்
நீ தருவாய் மஞ்சளுமே நீள்சூலக் காளியம்மா 18
காளியம்மன் கவசத்தைக் காலையில் சொல்லிவரின்
காலபயம் ஏதுமில்லைக் காவலென நின்றிடுவாள்
தூளியெனும் நீறெடுத்து தூபத்தில் அகலுமிட்டு
தூதாக கவசமிட்டால் தூரத்துப் பகையோடும் 19
அட்டமியாம் மாலையில் அவளுக்குப் பூமுடித்து
கட்டத்தைச் சொல்லிவிடின் கருணைக்குப் பஞ்சமில்லை
நட்டவிதை விளைவாக நல்லபதி னொன்றினிலே
தட்டின்றிப் பாடிவரின் தயவுக்கும் பஞ்சமில்லை 20
மங்களத்து வாரமதில் மங்கையர்கள் ஒளியேற்றி
மங்களையைப் பாடிவரின் மங்கல்யம் கூடிவிடும்
செங்கயலின் பூவெடுத்து சென்மஓரை நாளதினில்
நங்கையளின் அடிபணிய நன்மைவரும் தன்மைவரும் 21
பூரணையாம் நாளதனில் பூத்திருக்கும் மல்லியினைக்
காரணிக்குப் போட்டுவரின் காலமெலாம் மணமாகும்
சூரமிகு சூரியனே சூளுரைக்கும் சூலியளே
சாரதையே சாமியளே சாம்பலணி சாம்பவியே 22
மூலமுறை ராசியினில் மூவேளை பாடியிதை
மூலமாம் மந்திரமே முன்பின்னும் ஜெபித்துவரின்
காலத்தால் பஞ்சமது காத்திருந்து சேராது
கோலமாம் குதிரையிலே கோலோச்சி வருபவளே 23
தரிசனத்துத் தேவியளே தருமநிதி தருபவளே
பரிக்கிழத்தி வசியவசி பார்முழுதும் வசியவசி
கரிசேறும் கனகையளே கண்ணான கண்மணியே
கரிகைமண நெற்றியளே கனதனமே தருமகளே 24
காளியம்மா காளியம்மா காணவரும் காளியம்மா
காளியம்மா காளியம்மா காலமெல்லாம் காருமம்மா
காளியம்மா காளியம்மா காளியம்மா வாருமம்மா
காளியம்மா எம்தாயே காளியம்மா காளியம்மா 25
பதினெட்டுக் கரமுடைய பகவதியாம் காளியம்மன்
நிதிசொட்டும் கவசமிதை நித்தமுமே பாடிவரின்
பதிகிட்டும் வலிகிட்டும் பதிவிதியும் விலகிவிடும்
மதிகிட்டும் மணத்துடனே மங்களமே கூடிவரும் 26
மங்களத்துக் காளியளே மன்னவளே என்நிதியே
மங்களத்துக் காளியளே மணமலரே என்புகழே
மங்களத்துக் காளியளே மங்கலியக் குங்குமமே
மங்களத்துக் காளியளே மதுரமது காளியளே 27
#kaliamman #காளிகவசம் 🔱 #அம்மன்கவசம் #மஹாகாளிமந்திரம்
#ravanankural #NijuRavana
2 months ago | [YT] | 73
View 0 replies
ராவணன் குரல்
🌸 வாழ்க்கையில் பயம் நீங்க வராஹி மாலை! 🌸
தீராத வினைகளையும், எதிர்ப்புகளையும் வேரறுக்கும் அம்மனுக்கு உகந்த அற்புதப் பனுவல் "வராஹி மாலை".
வராஹி மாலையின் மகிமை:
பயம் நீங்கும்: எதிரிகள் பயம், கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். தடைகள் அகலும்: காரியத் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.
மன உறுதி: வாழ்வில் இக்கட்டான சூழலில் இருப்பவர்களுக்கு மன தைரியத்தை அன்னை அருள்வாள்.
இந்தப் பாடல்களைத் தினமும் பாராயணம் செய்வது அல்லது கேட்பது உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை பெருக்கும்.
அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏
வாராஹி மாலை
1. வசீகரணம்
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே
2. காட்சி
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
3. பகை தடுப்பு
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைக்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞரையே
4. மயக்கு (தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
5. வெற்றி ஈர்ப்பு
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம் இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.
6. உச்சாடணம் (ரோகஹரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவப் கொடுப்பாள் வாராஹி என் நாரணியே.
7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர் என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே
8. பெருவச்யம் ( திரிகால ஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வைகயத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
9. பகை முடிப்பு
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே
10. வாக்கு வெற்றி
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
11. தேவி வருகை
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் தவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
12. ஆத்ம பூஜை
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே
13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
14. மந்திரபூஜை
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹி என் மெய்த் தெய்வமே.
15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16. வரம் பொழிதல்
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே !
17. வாழ்த்துதல்
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
18. நன்னீர் வழங்கல்
வேறாக்கும் நெஞ்சம் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
19. புனித நீர் அருந்துதல்
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஒடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே.
20. மலர் வழிபாடு
தாமக் குழலும் குழையும் பொன் ஒலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
21. தேவி சந்நிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நம்க்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.
22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே.
23. புகழ்சொற்பாமாலை (மௌனாந்த யோகம்)
ஊரா கிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவிஉண்டே.
24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
26. படைநேமி வாழ்த்து (சித்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே
27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே
29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரி அயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.
31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
#Varahi #VarahiAmman #VarahiMaalai #Spiritual #Blessings #வராஹி #பக்தி #ஆன்மிகம்
2 months ago | [YT] | 62
View 2 replies
ராவணன் குரல்
"தக்கன் வேள்வி தகர்த்தவன் தாரகை
மிக்க வான்சுடர் மண்டலம் எய்தவன்
பக்கம் பேணிப் பரிந்தவர்க்கு இன்னருள்
செக்கர் வானத்தவன் சேர்சிறு குன்றமே." 🙏
#veerabadraswamy
2 months ago | [YT] | 110
View 0 replies
ராவணன் குரல்
ஓம் நமோ நரசிம்மாய! 🦁
விஷ்ணுவின் அவதாரங்களிலேயே மிகவும் சக்திவாய்ந்ததும், பக்தர்களுக்காக நொடிப்பொழுதில் தோன்றி அருள்பாலிப்பதுமான நரசிம்ம அவதாரம் பற்றிய சில ஆன்மீகத் தகவல்கள்:
✨ அவதார நோக்கம்: தன்னையே கடவுள் என அறிவித்த அசுரன் இரணியகசிபுவை அழித்து, அவனது மகனும் பரம பக்தனுமான பிரகலாதனை காக்க எடுத்த அவதாரம் இது.
✨ விதிவிலக்கான உருவம்: மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத நரசிம்ம (மனித-சிங்க) உருவம் கொண்டு, பகலும் இரவும் இல்லாத அந்திப் பொழுதில், வாசற்படியில் வைத்து அசுரனை வதம் செய்த அதியற்புத அவதாரம்.
✨ வழிபாட்டு பலன்கள்:
மன பயம் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கும்.
தீராத கடன் சுமைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
நரசிம்மரை வணங்குவது 'உடனடி பலன்' தரும் என்பது ஐதீகம்.
✨ சாந்த சொரூபம்: உக்கிரமாக இருந்த நரசிம்மரை மகாலட்சுமி தாயார் சாந்தப்படுத்திய வடிவமே 'லட்சுமி நரசிம்மர்'. இந்த வடிவம் குடும்பத்தில் செல்வத்தையும் அமைதியையும் பெருக்கும்.#NarasimhaSwamy #LordVishnu #Devotion #Spirituality #NarasimhaJayanthi #LakshmiNarasimha #Hinduism #DivineProtection #ஆன்மீகம் #நரசிம்மர்
3 months ago | [YT] | 88
View 1 reply
ராவணன் குரல்
அன்பு செய்வாரை அறிவன் சிவன்
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.
விளக்கம்:
தம்மை இகழ்ச்சியாக பேசும் உயிர்களையும் போற்றி வணங்கும் உயிர்களையும் சிவபெருமான் அறிவான். தம்மை இகழ்ந்து பேசிய உயிர்களுக்கும் மனமுவந்து அவரவர் மனதிற்கேற்ப அருளை வழங்கும் உத்தமமான தலைவன் இறைவன். அப்படிப்பட்ட இறைவனை உயிர்கள் தமது உள்ளத்திலிருந்து வெளிவரும் தூய்மையான அன்போடு அழைத்து அருள் வேண்டுமென்று கேட்டுவிட்டால், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வேண்டியதை உடனே தந்துவிடுவதும் அந்த இறைவனின் பேரருளே ஆகும்.
#NijuRavana #நமசிவாயவாழ்க #ravanankural
5 months ago | [YT] | 23
View 0 replies
ராவணன் குரல்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!
மெய்யே! உன் பொன்னடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
#நமசிவாயவாழ்க #NijuRavana
5 months ago | [YT] | 53
View 0 replies
ராவணன் குரல்
ஆயிரம் கவலைகள் அலைமோதி வந்தாலும், உன் புன்னகை பூக்கும் முகத்தைக் கண்டால் போதும் தாயே 🙏
#NijuRavana #ravanankural #ravana
5 months ago | [YT] | 79
View 0 replies
ராவணன் குரல்
நாகதம்பிரான் பிரார்த்தனை
---------------------------------------------------
வெற்றி வினாயகரின் விளங்குதொந்தி நாணே வேலவர்முன் னேசெல்லும் வெற்றியுறு நல்லரவே அவுணர் புரமெரிக்க வரன்வளைத்த மேகுமலைக் கொற்றவில்லின் நாணான் கோளர வே போற்றி வாளகிரி தனைச்சூழ்ந்த வாரியிலே மாயவன்றான் நீளுமணிப் பாயலாய் நித்திரைசெய் தேகிடந்த நாகமணி பொதிந்த நாகவர சேபோற்றி நற்பாம்பு தாராட்டும் நாயகியார் பார்பதிதன் களபதனக் கச்சே காரிகைகைக் கங்கணமே காதிலுறு குண்டலமே களிக்குங்கொற் றக்குடையே வாசுகி யனந்தன் தக்கன் சங்கன்
குளிகன் பதுமன் மகாபதுமன் கார்க்கோடன் என்னுமெட் டுவகை யெழில்நாகங் கள்போற்றும் சகமனைத் துஞ்சுமந்த சமர்த்தர வேபோற்றி ஏகவுட லைந்துதலை யெழில்நாக மேபோற்றி வெண்மை நிறம்படைத்த வித்தக னேபோற்றி நாகம்நால் சாதி அறுசாதி விரியன் வரிவண்டு வகையுடன் வளலைநால் சாதி துவாதச தேளுடன் சோடச மண்டெலி நட்டுவக் காலி நாய்நரி தவளை
இருபது சிலந்தி எழிலோந்தி செவ்வட்டை செங்குழவி செய்யான் கருங்குழவி வண்டுவகை யமதுதிரு நாமமதை யோத வணுகாது நாகதம்பி ரானே நல்லசங்கு பாலகரே அடிபணிந் தேனடியேன் அபய மபயம்
அரவர சேயுன் னடைக்கலந் தானோ.
#nagathampiran #nagalingeshwarar #aadhiseshan #நாகதம்பிரான் 🙏
5 months ago | [YT] | 65
View 3 replies
ராவணன் குரல்
புருவ நடுவில் பொன் ஒளி வீசும் 🙏
செந்நிற திலகம் அணிகின்ற தாயே 🙏
தாயே ஆதி சக்தி 🔱
#NijuRavana #ravanankural #atharvanabadrakalikovil
5 months ago | [YT] | 73
View 1 reply
ராவணன் குரல்
"தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏
#Ravanankural #NijuRavana #ravana
#HappyPongal 🙏
5 months ago | [YT] | 101
View 1 reply
Load more