அறம் செய்ய விரும்பு, ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம். (வாழ்வியல் கல்வி, பசிக்கு உணவு, பாரம்பரிய வைத்தியம்.)
கல்வி, உணவு, வைத்தியம் இம்மூன்றும் விற்பனைக்கு அல்ல..!
நம்மால் முடிந்த வரை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்வோம்..
அறம் அதாவது நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து நினைத்தால் போதும் அந்த நினைவே உங்களை வழி நடத்தும்..
மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது…
ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம், கோவை.
(வாழ்வியல் கல்வி, பசிக்கு உணவு, பாரம்பரிய வைத்தியம்.)
"ஆரோக்யமும் ஆன்மீகமும்"
இந்த சேனலில் ஆரோக்யம், ஆன்மிகம், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், மனோசக்தி, யோகம், புராணங்கள், சித்தர்கள், சேவைகள், இந்துமதம், பாரத தேசம் பற்றிய பதிவுகள்.....
Contact :-
wa.me/919894012434
Email :-
agasthiyarsevashram@gmail.com
Sevashram – சேவாஸ்ரம்
தொண்டும் துறவும்..
Sri Agasthiyar Sevashram, Coimbatore.
Yogic Science - Astro Healing Therapy
தைராய்டு பிரச்சினையை போக்கும் - சர்வாங்காசனம்..!
ஆசனங்களின் தாய் - சர்வாங்காசனம்...!
உடலெங்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, இளமையை நிலை நிறுத்தி, நோய்களை ஒதுக்கி உடலினை பாதுகாப்பதால் இதற்கு சர்வாங்காசனம் என பெயர் பெற்றது.
உடலின் அனைத்து பாகங்களையும் செம்மைப்படுத்தும்
சர்வாங்காசனம் ஆசனங்களின் தாய் என்று அழைக்கப்படுவது மிகவும் சாலச்சிறந்தது ஆகும்.
தாய் எவ்வாறு தன் சேயின் நலத்தில் அக்கறை கொள்வாரோ அதைப் போல உடலின் அனைத்து பாகங்களுக்கும் சிறந்த ஆசனம் என்று யோகாசனப் பயிற்சி ஆசிரியர்களால் போற்றப்படுகிறது இந்த ஆசனம்.
மனம் :
இருதோள்கள், கழுத்து.
மூச்சின் கவனம் :
இயல்பான மூச்சு..
சர்வாங்காசனம் செய்முறை :
தரைவிரிப்பில் மல்லாந்து படுத்து சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு பின்புறத்தை இரு உள்ளங்கைகளால் தாங்கி மேலே தூக்கி உயரே கொண்டு வரவும்.
கால்கள் இரண்டையும் வானோக்கி நீட்டி, முழங்கைகள் தரைவிரிப்பில் அழுத்தியிருக்க இரு உள்ளங்கைகளாலும் முதுகைத் தாங்கிக் கொள்ளவும்.
தலையும், புஜங்களும் தரைவிரிப்பில் இருக்க முதுகு, இடுப்பு, தொடை கால்கள் வானோக்கி இருக்க வேண்டும்.
பார்வைக்கு தோள் மேல் நீண்டிருக்க வேண்டும், சுவாசம் சமமாக இருக்க வேண்டும். இதுவே சர்வாங்காசனம்.
ஓரிரு நிமிடங்கள் நின்ற பிறகு கால்களை மடித்து, முதுகு, பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வந்து பின எழுந்து அமர வேண்டும். சர்வாங்காசனம் செய்யும்போது உமிழ்நீரை வழுங்கக் கூடாது.
உடல் முழுவதும் தலைகீழாக நிறுத்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளும் முழுமையான ரத்த ஓட்டம் நடைபெறும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து தினமும் செய்தால் பியூட்ரி, பீனியல், ஹைப்போதாலமஸ், தைராய்ட், பாரா தைராய்ட், தைமல், பான்க்ரியா, அட்ரினல் என அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இந்த சுரப்பு நீர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும்.
சர்வாங்காசனம் பலன்கள் :
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இளமையை காக்கும்.
உடல் வளர்ச்சி காணும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
நரம்புகள் புத்துணர்ச்சி பெரும்.
சோம்பலை போக்கும்.
உடல் சதை போடாமல் தடுக்கும்.
தைராய்டு பாராதைராய்டு சிறப்பாக இயங்கும்.
ரத்த ஓட்ட மண்டலம், மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படும்.
மர்ம ஸ்தானம், குதம் ஆகிய இடங்களில் தோன்றும் வியாதிகள் குணமாகும்.
கிட்னி கோளாறுகள் சரியாகும்
ரத்தம் சுத்தமடைவதால் வெண்குஷ்டம் போன்ற தோல் வியாதி நீங்கும்.
முகத்தில் சுருக்கங்கள் நீங்கி இளமையுடன் வாழலாம்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல், குழந்தையின்மை போன்றவை நீங்கும்.
ஆஸ்துமா, கல்லீரல் கோளாறுகள், சர்க்கரை வியாதிகள் நீங்கும்.
முடி கொட்டுதல், இளநரையை கட்டுப்படுத்தும்.
உடல் ரீதியான பலன்கள் :
நூறுக்கும் மேற்பட்ட உடலியல் பலன்கள் இந்த ஆசனத்தை செய்வதால் கிடைக்கும்.
அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி.
தைராய்டு சுரப்பியை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளைநல்லவிதமாக தூண்டி பலமடைய செய்கிறது.
மூளை நல்ல இரத்த ஓட்டம் பெறுகிறது.
கண் பார்வை கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
குணமாகும் நோய்கள் :
வெரிகோஸ்வைன் என்ற இரத்தக் குழாய் புடைத்துப் போகுதல் சரியாகும்.
தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும்.
மூல நோய், குடல் வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம் போன்றவற்றை சரிசெய்கிறது.
அஜீரணம், மலச்சிக்கல், மாத விடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது.
ஆன்மீக பலன்கள் :
நினைவாற்றல் வளர்கிறது மன ஒருமைப் பாட்டிற்கும் சமநிலையான மனதிற்கும் நல்லது.
எச்சரிக்கை :
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளேலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது . ஆசனத்தில் இருக்கும் போது தலையை பக்கவாட்டில் திருப்பி பார்க்க கூடாது.
இந்த வாரம் சர்வதேச யோகா தினம்...!
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
23 hours ago | [YT] | 19
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
"வயிற்று நோய் நீக்கி வாழ்வளிக்கும் பரிவ்ருத்த திரிகோணாசனம்"
பரிவ்ருத்த திரிகோணாசனம்
மனம்:-
இடுப்புப் பகுதி மற்றும் கைகள்.
மூச்சின் கவனம்:-
குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:-
முதுகுத் தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது .
வயிற்றுபுறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப் படுகின்றன.
முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ் பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையை அதிகரிக்கிறது.
வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்பு பகுதியை மெலிதாக்குகிறது.
சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன.
உடல் இலேசாக , புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது.
இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப் படுகிறது.
குணமாகும் நோய்கள்:-
பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு ,மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது.
உடம்புப் பகுதியில் உள்ள தசைகளின் இறுக்கத்தன்மை நீங்கி தளர்கிறது.
எச்சரிக்கை :-
தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப் படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.
"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
1 day ago | [YT] | 17
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
"கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும் பாத ஹஸ்தாசனம்"
"பாத ஹஸ்தாசனம்"
மனதின் கவனம்:
வயிற்றுப்பகுதி , முதுகு, எலும்பு, கால்களை..
மூச்சின் கவனம்:
கீழே குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு , நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் :-
உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பை பிணைக்கும் தசை னார்கள், தசையை பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப் படுகின்றன.முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன . உடலின் சுற்றளவை நன்கு குறைக்கிறது . இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை மெலிய வைக்கிறது.
குணமாகும் நோய்கள் :
ஜீரண சம்பந்தமான இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழிவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.
ஆன்மீக பலன்கள் :
உடல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப் படுகிறது.
எச்சரிக்கை :
அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி , இடுப்புபிடிப்பு உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்..!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
2 days ago | [YT] | 17
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தாளாசனம்...!
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...
யோகா பயிற்சியின் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் வரவழைத்து கொள்ளலாம். இப்போது மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க தாளாசனம் செய்யும் முறை பற்றி பற்றி பார்ப்போம்..
மிடுக்கான தோற்றம் தரும் தாளாசனம்..
இவை நின்ற நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். பிராண சக்தியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் விருத்தி செய்கிறது. உடல் தசைகளோடு நாலமில்லாச் சுரப்பிகளையும் இயக்குகிறது.
பெயர் விளக்கம்:
தாள் என்பது பாதம் என்று பொருள்படும். பாதத்தால் இந்த ஆசனம் செய்வதால் தாளாசனம் என்று பெயர்.
தத்துவம்:
தாளை வணங்காத தலை தாமரைத் திருவடி என்றெல்லாம் பாதம் பற்றிப் புராணங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. காலிலிருந்து புறப்படும் 44 நரம்புகள் உடலில் பல்வேறு நாளமில்லாச்சுரப்பிகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
ஆகையால் இந்தக் தாளாசனம் செய்வதால் எல்லா நளமில்லாச் சுரப்பிகளும் மறைமுகமாக இயக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பாத அழுத்தம் (Accu Pressure) முறை வைத்தியம் ஏற்பட்டிருக்கிறது.
செய்முறை:
முதலில் யோகா செய்வதற்கு விரிப்பு ஒன்றை விரித்து கொள்ள வேண்டும். முதலில் விரிப்பில் நேரா நின்று கொள்ளவும்.
விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று பாதங்களை V அமைப்பில் வைத்து இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும்.
கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செங்குத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும்.
ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும்.
மூச்சின் கவனம்:
கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:
நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நம் உடலின் தசைகள், நரம்புகள் நன்கு இழுக்கப்பட்டு, சுருக்கப்படுவதால் வலிமை அடைகிறது. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பரவி வேகமாக ஓடுகிறது.
குணமாகும் நோய்கள்:
ஆஸ்துமா, கூன்முதுகு நீங்க...
உடலின் எடையைத் தங்கும் பாதம், கணுக்கால், கொண்டைச் சதைகள் போன்ர உடல் பாகங்கள் உறுதி ஆவதால் குதிக்கால் வலி, பாத வலி, வீக்கம், மூட்டுவலி, கால் வலைவு போன்ற பாதிப்புகள்வராது.
‘வெரிக்கோஸ் வெயின்’ நரம்பு முடிச்சிகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
யாருக்கு இந்த ஆசனம்:
ஆண், பெண் இருபாலரும், குழந்தைகளும் செய்யலாம்.
ஆன்மீக பலன்கள்:
மனஅமைதி
பயன்பெறும் உறுப்புகள் :
குதிக்கால்கள், கைகள்.
எச்சரிக்கை:
இந்த ஆசனத்தை குதிகால் வலி உள்ளவர்கள் செய்ய கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
4 days ago | [YT] | 38
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
சூரிய நமஸ்காரம்..!
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...!
யோகாசனத்தின் ஒரு பகுதியாக அமைவது சூரிய நமஸ்காரம் ஆகும். இதனால் உடல் உள ஆரோக்கியம், சுறுசுறுப்பு மற்றும் யோகநிலையை அடைவதற்குரிய ஏணிப்படிகளில் இதுவுமொன்று.
இதன் விளக்கம்..
சூரிய நமஸ்காரம் :-
(சூரியனுக்குவணக்கம் செலுத்தல்) இது யோகாசனத்தையும் பிராணாயாமம் எனப்படும் மூச்சையும் ஒன்றிணைக்கிறது.
அதாவது உடலை நன்கு வளையக் கூடிய தன்மையடையச் செய்து அதை (சூரியநமஸ்காரத்தை) தொடர்ந்து செய்யப்போகும் ஆசனங்களுக்கும் (ஹடயோகம்) பிராணாயாமப் பயிற்சிகளுக்கும் (சுவாசப்பயிற்சி) தியானத்திற்கும் நம்மைத் தயார்ப்படுத்துகிறது.
இது பொதுவாக சூரிய உதயத்தின்போதே செய்யப்படல் வேண்டும். இதன் மூலம் அதிகநன்மைகளை பெற முடியும். என்றாலும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இதைச் செய்வதுடன் வயிறு பெறுமையாக இருக்கும் போதும் செய்யலாம்.
குறிப்பு :-
சாப்பிட்டவுடனும், தேநீர் போன்ற பானங்களை அருந்தியவுடனும் இதை செய்வது தவிர்க்கப்படல் வேண்டும்.
செய்முறை :-
சூரிய நமஸ்காரத்தில் பொதுவாக 12 படிமுறைகள் காணப்படுகின்றன.
அவற்றை எவ்வாறு செய்வது மற்றும் அவற்றிற்குரிய பெயர்கள், விளக்கங்கள் என்பவற்றைப் பார்ப்போம்.
படி 1 :- பிறையாசனம்.
கால்களைச் சேர்த்து நேராக நின்று இரு கைகளையும் கூப்பி நெஞ்சுடன் சேர்த்து வைக்கவும். பின் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி காதுடன் அணைத்தபடி உடம்பை பின் வளைக்கவும்.
இப்படிச் செய்யும்போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.
படி 2 :- பாதகஸ்தாசனம்...
உடம்பை முன்னுக்கு வளைத்து (கைகளை காதுடன் அணைத்த படி) நெற்றியால் முழங்கைத் தொடவும், கைகள்தரையைத் தொட்டபடி இருக்க வேண்டும்.
இப்படிச் செய்யும்போது மூச்சை வெளி விட்டபடி செய்ய வேண்டும்.
படி 3 :- ஏகபாதாசனம் (வலக்கால் பின்புறம்)
இந்நிலையில் வலக்கால் பின்புறமும் இடக்காலை படத்தினுள்ளவாறு மடித்து முன்புறமும் வைத்து இடது முழங்கால் இடகையில் அக்குருன் கீழ் வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது மூச்சை உள்ளிளுத்த வண்ணம் செய்யவும் முதுகை வளைத்து தலையை உயர்த்த வேண்டும்.
படி 4 :- அர்த்த கம்சாசனம்..
படத்தில் உள்ளவாறு இருகால்களையும் நீட்டி கால் நுனி விரல்களாலும் உள்ளங்கைகளாலும் தரையைத் தொட்டவாறு நிற்கவும்.
உடம்மை வைக்காமல் நேராக வைத்து தரையிலிருந்து 30 பாகை வரை உடலை சரிவாக வைத்தல் வேண்டும்.
இப்பயிற்சியைச் செய்யும்போது மூச்சை முழுவதுமாக வெளியேற்றவும்.
படி 5 :- (சசாங்காசனம்)..
படத்திலுள்ளவாறு முழங்காலுக்குக் கீழ்ப்பகுதி தரையில் பதித்தவாறு குதிக்கால்கள் புட்டத்தில் முட்டியவாறு கைகளை நீட்டிக் காதுகளுடன் முட்டியவாறு கைகளை நீட்டிக் காதுகளுடன் அணைத்த வண்ணம் நெற்றியால் நிலத்தைத் தொடல் வேண்டும்.
இப்பயிற்சியைச் செய்யும்போது மூச்சை உள்ளிளுக்கவும்.
பின்னர் இந்ந நிலையில் நின்று கொண்டு சுவாசித்தல் வேண்டும்.
படி 6 :- (சாஷ்டாங்காசனம்)
கைகால்களை அசைக்காமல் அப்படியே மார்பை மன் தள்ளிக் கொண்டு இடுப்பை உயர்த்திய வண்ணம் (நிலத்தில் முட்டலாகாது) நாடியால் நிலத்தை தொடல் வேண்டும். மூச்சை வெளியே
விட்டபடி செய்யவும்.
படி 7 :- (புயங்காசனம்)
மூச்சை உள்ளிலுத் தலையை உயர்த்தி முதுகை வளைத்து குழவாக வைத்துத் தலையை உயர்த்தி மேலே பார்க்கவும்.
கைகால்கள் நகரக்கூடாது.
படி 8 :- (அர்தத சிரசாசனம்)
மூச்சை வெளி விட்ட வண்ணம் படத்திலுள்ளவாறு உள்ளங்கைகளும் பாதங்களும் முழவதும் நிலத்தில் முட்டியவாறு. தலையை இரகைகளுக்கிடையில் இருக்கக் கூடியவாறு கீழே தொங்க விடவும்.
இந்நிலையில் உடம்பு நன்றாக வளைக்க வேண்டும்.
படி 9 :- (சசாங்காசனம்)
5வது நிலையில் செய்தது போல செய்யவும்.
படி 10 :- (ஏக பாதாசனம்)
இடக்காலை பின்புறமாக வைத்து 3வது நிலையில்ச் செய்தது போல செய்யவும் அதாவது காலை மாற்றிச் செய்யவும் இதைச் செய்யும்போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.
படி 11 :- (பாதகஸ்தாசனம்)
மூச்சை வெளி விட்டது வண்ணம் 2வது நிலையில் செய்தது போல செய்யவும்.
படி 12 :- மூச்சை உள் இழுத்து நிமிர்ந்து இருகைகளையும் கூப்பி நெஞ்சின் மீது வைத்து சுவாசிக்கவும்.
சூரிய நமஸ்காரம் செய்வதனால் ஏற்படும் பொதுப்பலன்கள்..
1. சுவாசம், இரத்த ஓட்டம் என்பன சீராக நடைபெறுகிறது.
2. உடலை சுறுசுறுப்பாகவும், நரம்பு மண்டலங்களை விழிப்படைய வைத்து வலிமையையும் ஆரோக்கியத்தையும் தருகின்றது.
3. வயிற்றுப் பகுதியில் காணப்படும் ஊழைச்சதைகள் மற்றும் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடற் பருமனைக்
குறைக்கச் செய்கின்றது.
4. இப்பயிற்சி மூலம் பெறும் பலன்கள் கூட யோகம் செய்வதனால் ஏற்படும் பலன்களுக்குச் சமனானதாகும்.
5. இப்பயிற்சியை 1 நிமிடத்திற்கு 4 தடவைகள் செய்யப்படல் வேண்டும்.
குறிப்பு :-
சூரிய நமஸ்க்காரத்தின் ஒவ்வொரு நிலையும் சரியான சுவாசத்தோடு முறைப்படி செய்தல் வேண்டும்.
ஓம் சூர்ய தேவாய நமக..!
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...!
யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
6 days ago | [YT] | 23
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
"தன்னம்பிக்கை தரும் அர்த்த சக்ராசனம்"
*"அர்த்த சக்ராசனம்"*
மனதின் கவனம்:-
முதுகெலும்பு.
மூச்சின் கவனம்:-
உடலை வளைக்கும்போது உள் மூச்சு, ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, தளரும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:-
உடம்பின் முன்புறத்தசைகள் , கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன.
முதுகுத் தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கிறது.
இது பாத ஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனம் என்பதால் அந்த ஆசனத்தின் பலன்களை இது கூட்டுகிறது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.
குணமாகும் நோய்கள்:-
ஆஸ்துமா, கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பு நீங்குகிறது..
ஆன்மீக பலன்கள்:-
உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கிறது.
எச்சரிக்கை:-
இதய நோய் உள்ளவர்கள் இதனை மெதுவாக செய்யவேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதை தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக் கொண்டு செய்யலாம். முதுகெலும்பு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.
வரும் ஜுன் 21 சர்வதேச யோகா தினம்..!
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
1 week ago | [YT] | 20
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
உடலின் ஏழு சக்ராக்கள்..!
"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)
நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை “சக்ரா” என்றழைத்தார்கள்.
அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த “சக்ரா”க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள். ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள்.
ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.
இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்.
1) மூலாதார சக்ரா –
இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது ”லா” என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.
2) ஸ்வாதிஷ்டானா சக்ரா
இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.
3) மணிபுரா சக்ரா
இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
4) அனாஹதா சக்ரா
இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா
இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.
6) ஆஜனா சக்ரா (ஆக்னை)
இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.
7) சஹஸ்ரரா சக்ரா
இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.
இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள். சக்ரா தியான முறையை அடுத்து பார்க்கலாம்.
"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)
யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!
1 week ago | [YT] | 80
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
அனுபவத்தால் உணர்ந்தவர்கள்.!
ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும்,..
நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள்...
எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள்.
ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர்.
பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது.
ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும்.
’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது.
உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது...!
ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத நவக்கிரக பிரபஞ்ச சக்தியே போற்றி...!
"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
1 week ago | [YT] | 84
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
மந்திர தியானம்..!
மந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
புத்த மதத்தில் ”ஓம் மணி பத்மே ஹம்” என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.
சிலர் தத்துவார்த்தமான ஒரு சொல்லை மந்திரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சிலர் “சோ-ஹம்” என்ற மந்திரத்தை பயன்படுத்துகிறார்கள்.
இதற்கு நானே அது என்பது பொருள். ஆனால் சில தமிழர்கள் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தும் போது ”சோ ஹம்” என்பது சோகம் என்ற சொல் போல இருப்பதாக நினைக்கத் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். அப்படித் தோன்றுபவர்கள் இந்த மந்திரத்தை தவிர்க்கலாம்.
மதங்களை சாராதவர்கள், தத்துவ ஞானங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாதவர்கள் தங்களைக் கவர்ந்த ஒரு மேன்மையான சொல்லை மந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மந்திர தியானத்தில் எந்த சொல்லை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றாலும் ஒரு முறை தேர்ந்தெடுத்த பின் அதையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தியானம் நல்ல பலனைத் தரும்.
மந்திரச் சொல் தகுந்த குரு மூலம் உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று நம் முன்னோர் நினைத்ததற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் குருவிடமிருந்து பெற்ற எதையும் புனிதமாகக் கருதும் வழக்கம் இருந்தது தான்.
இக்காலத்தில் அப்படிப்பட்ட குருவைக் காண்பது கஷ்டம் என்பதால் முறையாக அந்த மந்திரச் சொல்லை தியானத்திற்கு ஏற்றுக் கொள்ள இன்னொரு வழியைக் கடைபிடிக்கலாம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கோ, பூஜையறைக்கோ சென்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் இருந்து அந்த மந்திரச் சொல்லைப் பெறுவதாக கண்களை மூடிக்கொண்டு மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். இல்லா விட்டால் நீங்கள் தொழும் மகானிடமிருந்து அதைப் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மற்றவர்கள் சமுத்திரம், மலை, நதி போன்ற இயற்கை சூழ்நிலைக்குச் சென்றோ, இல்லை அமைதியான வேறிடத்திற்குச் சென்றோ பிரபஞ்சத்திடம் இருந்தே அந்தச் சொல்லை உபதேசம் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மிகுந்த நன்றியுடன் அந்தச் சொல்லைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணத்திலிருந்து உங்களுக்கு மிகப் புனிதமான சக்தி வாய்ந்த சொல்.
ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத நவக்கிரக பிரபஞ்ச சக்தி தாயே போற்றி..
சர்வதேச யோக தினம்" (ஜூன்21)
யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
ஆரோக்ய வாழ்வுக்கு தியானம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!
1 week ago | [YT] | 60
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
இது எல்லாம் அவரவர் பிறவி குணம்..!
(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை)
நம்மை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.....
நாம் எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டு பிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.அதையும் பெரிது பண்ணக்
கூடாது..
நமது லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போவோம்.....
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்வோம்....
ஒவ்வொரு மனிதனும்
தனித்தனி ஜென்மங்கள்.
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்.....
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளக் கூடாது. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....
அது வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.
அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நாம் முன்கூட்டியே சொன்னால் நம்மை அவர்களுக்கு பிடிக்காது......
இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்....
அது,உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,
நண்பர்களாக இருந்தாலும்,
கணவன், மனைவியாக இருந்தாலும்,
பெற்ற குழந்தைகளாக இருந்தாலும்,
பேரன் பேத்திகளாக இருந்தாலும்,
எந்த உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.......
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.
இதை நாம் மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....
பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....
அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை பொறுமையாக இருக்கலாம்........
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி நம்மிடம் அன்பை காட்டினாலும்,
தான் யார்? தன் குணம் என்ன?
என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்ளலாம்....
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.....
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.அதையும் மீறி சில வேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......
நாம் நம்மை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாமோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள்ளலாம்.
அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், நமக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து நம்மையும் திருத்திக் கொள்ளலாம்....
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நாமே சந்திக்க கற்றுக் கொள்ளலாம். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடக்கூடாது.....
நம் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் நம்மோடு சேர்ந்தே பயணிப்பார். அது நமது பிறவியின் பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் நம்மோடு இணைந்தே இருப்பார்....
நாம் பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்
கொள்ளக் கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்ளலாம்.
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.....
நமது கண்ணீரும்,நமது கவலையும் நம்மை பலவீனமாக காட்டி விடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நாம்தான் நமது சுமையை சுமந்து ஆகவேண்டும்.
"அழுது சுமப்பதை காட்டிலும்,
ஏற்று சுமப்பது சிரமம் இல்லாமல் இருக்கும்."
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் நம்மை நெருங்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்....
ஓம் நமோ நாராயணாய..!
"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
1 week ago | [YT] | 108
View 0 replies
Load more